10 December 2014

இவரால் எப்படி பெண்களை திருப்தி படுத்த 'முடி'யும் ?

----------------------------------------------------------------------------------------

'நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கத்தானே செய்யும் ?

                     ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
            ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா ?

                  ''நடந்த இடைத் தேர்தலில்  90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன தெரியுது  ?''
                   ''நிறையப் பேர்  ரூபா நோட்டை  வாங்கிகிட்டு ஓட்டு போட்டிருக்காங்கன்னு தெரியுது !''



இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
அருணா செல்வம்10 December 2013 at 00:13
எனக்கு ஒன்னும் புரியலைங்க பகவான்ஜி.
ReplyDelete

Replies


  1. நீங்கள் Usaயில் இருப்பதால் புரியலைன்னு நினைக்கிறேன் ...இந்தியாவில் புதிதாக வோட்டிங் மெசினில் நோட்டா பட்டன் இணைத்துள்ளார்கள் .தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் யாருக்கும் வோட்டு போட விருப்பம் இல்லை என்பதை இந்த பட்டனை அழுத்தி தெரிவிக்கலாம் !
    நன்றி
''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?



  1. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....


பார்வை உள்ள ஒருவர் சிகை அலங்காரம் செய்தாலை திருப்தி படுத்தி விட முடியது என்றால்......?
ReplyDelete

Replies

  1. இதுதான்யா என் கேள்வியும் !
    நன்றி

    1. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்..
    2. நாடு வளர்கிறதா?


      நான் வளர்ந்துள்ளேன் ...
      என் சிறிய வயதில் இல்லை 
      மின் வெட்டு!



26 comments:

  1. 01. அப்படீனா புருஷன் கொடுத்து வைத்தவன் இல்லையா ?

    02. நோட்டா ஓட்டுக்கு யாரு ? நோட்டு கொடுப்பா ?

    03. நம்ம பொம்பளைங்க ஓசினாக்கூட போகமாட்டாங்களே....

    04. நாடு வளருதோ இல்லையோ ? அரசியல்வாதிகள் குடும்பம் வளருது,,,

    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. புராண காலத்தில் தமயந்தி கொடுத்து வைத்தவள் ,இப்போ சமையலுக்கு உதவியே செய்யாமல் வக்கணையாய் உட்கார்ந்து திங்கும் புருஷன்மார்கள் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள்தான் :)
      2.கொடுக்கிறவன்கிட்ட வாங்கிகிட்டு நோட்டாவில் குத்தி விட வேண்டியதுதான் :)
      3.ஆண்கள் சிகை அலங்காரம் செய்து கொண்டு திருப்தியுடன் செல்வதாக அந்த பெண்மணி கூறியுள்ளார் ,அங்கேயும் பெண்கள் அப்படித்தான் போலிருக்கே :)
      4.அது ,பிரமிக்கத்தக்க வளர்ச்சியா இருக்கே :)
      நன்றி

      Delete
  2. அருணா செல்வத்திற்கு பதில்...
    வோட்டுக்கு நோட்டு கொடுக்காவிட்டால் போடுவது நோட்டா!
    + போட்டாச்சு!

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம் நோட்டு என்று வெறுப்படைந்தவர்களும் போடுவதும் நோட்டாதான் :)
      நன்றி

      Delete
  3. தலைப்பைப் பார்த்தவுடனே, இது ஏதோ ஏடாகூட ஜோக்காக இருக்கும் போலன்னு நினைச்சேன்....

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப ,இப்படி ஏடாகூடமா தலைப்பு வருவது தெரிந்ததுதானே :)
      நன்றி

      Delete
  4. ஹா ஹா ஹா ! எப்படிங்ணா சமூக அக்கறையையும் சேர்த்து எழுதுறிங்க !?

    தம

    ReplyDelete
    Replies
    1. சேர்த்து எழுதுறேனா:)
      நன்றி

      Delete
  5. ஹா... ஹா...

    முடிவில் மின்வெட்டு சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. மின் வெட்டுக்கு முந்தைய முடி வெட்டும் சூப்பர்தானே :)
      நன்றி

      Delete
  6. Replies
    1. தலைப்பைப் பார்த்து ஏமாறாத உங்களுக்கு நன்றி :)

      Delete
  7. நானும்தான் சார், தலைப்பை பார்த்தவுடன் அசைவ ஜோக் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் வலைச் சரத்தில் பழனி .கந்தசாமி அய்யா அவர்கள் ஆபாசம் இல்லாமல் நகைச்சுவையாய் எழுதுகிறார் என்று என்னை அறிமுகப் படுத்தினார் ,எப்படி அசைவ ஜோக் எழுதுவது :)
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மலர்வதை காண வருகிறேன் ரூபன் ஜி :)
      நன்றி

      Delete
  9. கலக்கல் பதிவு நல்லாயிருக்கு
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சிறிய இடைவெளிக்குப் பின் உற்சாகமாய் வந்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றி :)
      நன்றி

      Delete
  10. நோட்டைக் கொடுத்து நோட்டாவை காலி பண்ணிட்டாங்க...
    நளபாகம் நன்று....
    மின்வெட்டு சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. மின்வெட்டுமா சூப்பர் ?:)
      நன்றி

      Delete
  11. நோட்டாவா? அப்படின்னா? அதான் நோட்டாலயே பதுக்கிட்டாங்களே! ஆனாலும், நோட்டாலயே நோட்டா போட்டவங்களும் இருக்காய்ங்களே! ஹஹஹ்

    நாடு நல்லாலாலா வளருதே உங்களுக்குத் தெரியலயோ...மின் வெட்டுனால....ஜி அந்தக் கூலிங்க்ளாச அப்புறப்படுத்திட்டு பாருங்க...நல்லாஆஆ பாருங்க...ஹஹ்ஹ

    ReplyDelete
    Replies
    1. கூலிங் கிளாசைக் கழட்டினாலும் இருட்டாவே தெரியுதே ,ஓ...நம் நாடாச்சே :)
      நன்றி

      Delete
  12. சிரிக்க வைத்தன சிரிப்புக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தமயந்தி கொடுத்து வைத்த தமயந்திதானே ?:)
      நன்றி

      Delete
  13. Replies
    1. பதிவு வெளியான 48 மணி நேரம் கழித்து பெறும் தமிழ் மண ஏழாவது ஒட்டு ,ஓட்டல்ல ..அது மறைமுக வேட்டு :)
      உங்கள் பதிவுக்கு நான் இன்றே போட்டு இருப்பதுதான் வோட்டு ,இரண்டு நாள் கழித்து போட்டால் அது வேஸ்ட்டு :)
      நன்றி !

      Delete