28 April 2015

பொண்ணு பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)

                  ''என்னங்க ,நம்ம பொண்ணைப் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் கூட்டிட்டு வரச் சொல்றீங்களே ,ஏன் ?''

                                '' டிவி சீரியல்களைப் பார்க்காததால் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''

வா x யை மூடி பேசவும் முடியும் என்றால் .....!

          ''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு 

சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் 

சொல்றீங்க ?''

         ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''


கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

         ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத 

ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''


       ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது

சிரிக்கட்டுமேன்னுதான் !''

குறள் வழி நடக்கும் நாய் !

சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...

நாய் வாலறுந்த பின்னாலும் 

வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் 

சுற்றி சுற்றி வருகிறதே !



அம்பாளடியாள் வலைத்தளம்28 April 2014 at 03:10
உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))




  1. இங்கே என் கதையே தலைக்கீழ் ...நான் எழுத்தையே கட்டிக்கிட்டு அழுறேன்னு,என்னை கட்டிக்கிட்ட வூட்டம்மா அழுவுறாக!
  2. அம்பாளடியாள் வலைத்தளம்28 April 2014 at 12:03
    :)))
  3. இதுக்கும் சிரிப்புத்தானா ?
    நன்றி
    Delete
  4. Mythily kasthuri rengan30 April 2014 at 19:20
    நான் கேட்கனும்னு நினைத்தேன் . அவங்க கேட்டுடாங்க:))
  5. உங்க சார்பா நான் அவங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன் !

    1. சைதை அஜீஸ்28 April 2014 at 06:14
      இப்போது வரும் படங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுதான் பார்க்கமுடியும்! 

        1. அதனாலதான் ஜனங்களும் காசை செலவழிக்காமல் பார்க்க நினைக்கிறார்கள் !
        2. விமல் ராஜ்28 April 2014 at 09:12
        3. ஹா..ஹா...ஜீ ...பேசாம நீங்க எழுதின ஜோக்கை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்... அதுவே ரெண்டு மூணு பாகங்கள் போகும் !!! வாழ்த்துக்கள்...




          1. ஜோக்குக்கு வந்த ரசனையான கமேண்டுக்களையும் சேர்த்து தொகுத்தால் நல்லாத்தான் இருக்கும் ...ஆனால் என்ன. வராத மொய் கணக்கிலே நான் ஒரு பத்தாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும் ,தேவையா ?டிபிஆர்.ஜோசப்28 April 2014 at 10:14
          2. கல்யாணத்துக்குப் பிறகுதான் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போலருக்கு! பிறருக்காகத்தான்னாலும் அதற்கும் ஒரு பெருந்தன்மை வேணுமே :))
          3. Bagawanjee KA28 April 2014 at 22:31
          4. மனைவியானவள் நகையை மட்டுமே ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள் ,கணவனானவன் மனைவியிடம் புன்னகையை மட்டுமே எதிர்ப்பார்ப்பதால் ,நகைச்சுவை உணர்வு அதிகமாகத்தானே செய்யும் ?




24 comments:

  1. 01. புதன்கிழமை நல்லநாளுனு சொல்லமுடியாதோ
    02. கண்ணையும் மூடிக்கிட்டு வீட்டுல இருந்தால் காசும் மிச்சமாகிடுமே.
    03 கல்யாணமே செய்யாமல் ராஜேந்திரகுமார் எழுதலையா ?
    04. அதுக்கு 5 அறிவுல அதனாலதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.சீரியல் பார்க்காதவங்களுக்கு எல்ல நாளும் நல்ல நாளே :)
      2வீட்டுலே இருக்க எதுக்கு கண்ணை முடிக்கணும்:)
      3.அவர் நிறைய கிரைம் கதைதானே எழுதினார் :)
      4.இது ஏன் 6அறிவு மனிதனுக்கு புரிய மாட்டேங்குது :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    அவர்கள் சொல்லியதில் தப்பே இல்லை. இந்த கால பெண்கள் சீரியல் பார்ப்பதில் காலத்தை கழிக்கின்றார்கள்...
    அப்ப திருமணம் என்ற ஒன்றுவந்தால் சிரித்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம்.
    மற்றவைகளை இரசித்தேன் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கணவன் கழுத்தை அறுக்காமல் காலத்தைக் கடத்தினால் நல்லதுதானே :)

      நெற்றிக் கண் திறந்தாலும் குற்றமா :)

      Delete
  3. 1) ஹா...ஹா...ஹா... உண்மை! உண்மை!

    2) ஹா...ஹா... கண்ணை மூடிப் பார்க்கவும்னு சொல்லலையா?

    3) ஹா...ஹா.... பார்த்து! சிரிப்பா சிரிச்சுடப் போகுது!

    4) தத்துவம்!

    ReplyDelete
    Replies
    1. 1.சீரியலைப் பார்க்க முடியலைன்னு 'உண்மையா' அழ மாட்டாங்களா:)
      2.சில சீன்கள் அப்படி பார்க்கும் படியா இருக்கே :)
      3.பொம்பளை சிரிச்சா போச்சுன்னு சொல்றாங்களே ,அதுக்கென்ன அர்த்தம் :)
      4.நாய் வாலிலும் பிறக்குமா துத்துவம் :)

      Delete
  4. நகைப் பணி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்திற்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. நீங்க தந்த ஊக்க மருந்துக்கு இரட்டை நன்றி :)

      Delete
  6. Replies
    1. பலமான உண்மைகள் கூட :)

      Delete
  7. ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது

    சிரிக்கட்டுமேன்னுதான் !''---தங்களைப்போல் எல்லோரும் மாறிவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதுல்ல....தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. சிரிக்கவாவது ஆள் இருக்குமா :)

      Delete
  8. வாயை மூடிப் பார்க்கலாம் காதை மூடிக் கேட்க......!சனி ஞாயிறுதான் பெண் பார்க்கச் சரியான நாள். ஆனால் அவர்களது உண்மை முகம் தெரிய,,,,,? நாய்களுக்குத் தெரிகிறது “ இன்னா செய்தாரை.........”

    ReplyDelete
    Replies
    1. காதுலே பஞ்சை வைத்துக்கலாமா :)
      உண்மை முகம் என்றுமே தெரியாது :)
      வல்லுவம் அறிந்த நாயோ :)

      Delete
  9. Replies
    1. ரொம்ப நாளாச்சே குட்டன்ஜி,நீங்க நம்ம பேட்டைப்பக்கம் வந்து !
      கடியை தாங்க முடியாமல், இந்த கருத்தை நீங்கள் போட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)

      Delete
  10. ரசித்தேன்! சிரித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நானும் மகிழ்ந்தேன் உங்கள் வரவுக்கு :)

      Delete
  11. 1. மிக மிகச் சரியெ! ஆமாம் ஜி நம்ம தளத்திலயும் இதேதான் நீங்க சொன்னதும்....நேற்று வர இயலவில்லை...அதான் டிலே....

    ஹஹ் அப்படினா கல்யாணம் ஆனப்புறம்தான் எல்லாருமே ஜோக் எழுதுவாங்களா ஜி?!!!

    நன்றி உள்ள ஜீவன் கள்....பாவம்...

    இப்பல்லாம் படம் பார்க்கணும்னா...ஹஹஹ் காந்தி சொன்ன மூணு குரங்கைத்தான் ஃபாலோ பண்ணனும்......அப்ப படம்??!!!

    ReplyDelete
    Replies
    1. .மூணு குரங்கை ரசிக்கலாம் ,குரங்காய் நாம் மாறி படத்தை ரசிக முடியுமா :)

      Delete
  12. ஞாயிற்றுக் கிழமைகளில் சீரியல் பார்க்காமல் அழுவதில்லை.... ஹா ஹா.... அன்னிக்கு அழுகைக்கு ஹாலிடே!

    ReplyDelete