14 April 2016

காதலிப்பது அக்காவையா ,தங்கச்சியையா :)

               ''அந்த காதலனுக்கு  ,தேவையில்லாத சந்தேகம் எல்லாம் வந்திருக்குன்னு ஏன் சொல்றீங்க ?''
                ''என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ,நீ இளையவளா ,மூத்தவளான்னு  ஒரு பாட்டிலே கேட்கிறாரே !''

நமக்குத் தெரிந்தது நாய்க்குத் தெரியுமா :)
               ''சும்மா உள்ளே வாங்க,குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத்தான் தெரியுமே ?''
                ''அது  உங்க நாய்க்கு தெரியணுமே !''
ரஜினிக்கும் முந்தைய நிஜ கோச்சடையான்கள் :)
           ''மதுரைக்காரங்கதான் உண்மையில் கோச்சடையான்கள்னு சொல்றீங்களே ,ஏன் ?''
        ''அவங்க குடிக்கிற தண்ணி கோச்சடையில் இருந்துதானே வருது !''
மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் :)
           ''செத்துப் போன உங்க நண்பர் 'ஆப் பாயில்'னா விரும்பிச் சாப்பிடுவாரா ?'' 
           ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
          ''அவர் பாடிகூட  முழுசா எரியலே .. கரெண்ட் போயிடுச்சே !''
வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா :)
நீ பாதி நான் பாதி யென 
ஆரம்பித்த  தாம்பத்யம் ...
பிள்ளைகள் இரண்டு ஆனபின் 
முக்காலும் காலும் ஆனது ...
கணவன் மனைவி உருவிலும் கூட !  

22 comments:

  1. அருமை நண்பரே
    ஆப் பாயில் மிக மிக அருமை...
    நடு ராத்திரியே சிரிச்சேன் ஜி...





    ReplyDelete
    Replies
    1. அக்கம் பக்கம் பார்த்து சிரிங்க :)

      Delete
  2. [[[ரஜினிக்கும் முந்தைய நிஜ கோச்சடையான்கள் :)
    ''மதுரைக்காரங்கதான் உண்மையில் கோச்சடையான்கள்னு சொல்றீங்களே ,ஏன் ?''
    ''அவங்க குடிக்கிற தண்ணி கோச்சடையில் இருந்துதானே வருது !'']]]

    மதுரைக்காரங்க கோச்சடையான்னா, மத்திய மற்றும் வட சென்னையில் கார்ப்பரேஷன் தண்ணியை குடிக்கும் மக்கள் சாக்கடையான்கள்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டிலே ,சாக்கடையான்களுக்கு பஞ்சமே இல்லையே :)

      Delete
  3. [[காதலிப்பது அக்காவையா ,தங்கச்சியையா :)]]

    ஆஸ்திக்கு ஒன்னு ஆசைக்கு ஒன்னு! இது தப்பா?
    மனைவி ஒன்னு; துணைவி ஒன்னு! இது ஓகேவா?
    ஒன்னை கட்டிக்கவா? இன்னொன்னை வச்சுக்கவா?

    மேலே சொன்ன மூன்று விதத்தில் எந்த விதமா கேள்வி கேட்டாலே இங்கே கேட்டாலே ரத்து தான்

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணுக்கு ஒண்ணு இலவசமா சேலை வேணும்னா கிடைக்கும் சேலைக் கட்டுற மனைவி கிடைக்க மாட்டாளே,எனவே ரத்துதான் ,விவாகரத்துதான் :)

      Delete
  4. வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...! சகோதரிதானே...!காதலி சம்மதிப்பாளா...?

    அந்த நாய்களுக்குத் தெரிந்தது இந்த நாய்க்கு தெரியுமா...? சொல்லிக் கொடுத்தீங்களா...?

    அவங்க குடிக்கிற தண்ணி... ‘கோ’ வுக்கிட்ட இருந்து வரலையா... இது ஸ்பெஷலா...? நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாதின்னு வேற சொல்வாங்க...!

    அதாவது பரவாயில்லை... இந்த பாடி கொஞ்சம்கூட எரியல... இவரு சைவராம்... முட்டையே சேத்துக்க மாட்டாராம்... கூமுட்டை...!

    ‘முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா’ இதுனாலதானா...?

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ,நீ இளையவளா ,மூத்தவளா?...அட இழவு எப்படி இருந்தால் என்ன ?

      சைகையால் செய்யச் சொல்லலாம் ,பழமொழியை நாய்க்கு எப்படி சொல்லித் தர்றது :)

      கோ கிட்டே இருந்து வர்ற தண்ணீரைக் குடிப்பாங்க ,பாலைக் குடிக்காம பாலாபிஷேகம் செய்வாங்க :)

      கூமுட்டை வேகாதோ :)

      முக்காசைசு முக்காபுலா இதுதானா :)

      Delete
  5. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இனிய நன்றி ஜி :)

      Delete
  6. 1) ஒன்னுக்கு ரெண்டு.. உபத்திரவத்துக்கு மூணு!.. அப்படின்னு சொல்வார்களே!..
    அந்த மாதிரி கூட இருக்கலாம்..

    2) அதுக்குத் தான் நாயை அவிழ்த்து விட்டு வளர்க்கணும்..ன்ங்கறது.. வீண் சந்தேகத்துக்கு இடமில்லையே..

    3) எந்தத் தண்ணி..ன்னு புரியலையே?..

    4) நெய் ரோஸ்ட் சாப்பிடற ஆளா இருந்தா என்னா ஆகியிருக்கும்?..

    5) முக்காலும் காலுமா?.. என்ன இது.. பழைய காலத்து கூட்டல் வாய்ப்பாடு மாதிரி இருக்கு?..

    ReplyDelete
    Replies
    1. மூணா,ரெண்டே உபத்திரவமாச்சே :)

      ஒரு பய வீட்டுக்கு வரமாட்டேனே :)

      வைகை ஆற்றுத் தண்ணீயே தான் :)

      நயி ரோஸ்ட் ஆகியிருக்கும் :)

      இப்போ மட்டுமென்ன அந்த கணக்கு தப்பாயிடுமா:)

      Delete
  7. அந்த ஒரே..பாட்டில் என்பது எந்த பாட்டில் என்று தெரிந்தால்..... நல்லாயிருக்கும்...!!!!!

    ReplyDelete
    Replies
    1. அது உங்களுக்கும் ,அந்த காதலனுக்கு வந்த மாதிரி சந்தேகம் தானா :)

      Delete
  8. கோச்சடைககாரன்களை ரசித்தேன்.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. போட்டுள்ள நல்ல படத்தை யாரும் ரசித்த மாதிரி தெரியலையே :)

      Delete
  9. 01. ஒருவேளை அவனுக்கு மூத்தவளான்னு சந்தேகம் வந்திருக்குமோ... ?
    02. நியாயமான கேள்விதான்
    03. அப்படீனாக்கா ? சாக்கடை தண்ணியை குடிக்கிறவங்க யாரு.. ?
    04. அனுவமான சண்டாளன்தான்.
    05. இதுவும் அனுபவம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இதை தெரிஞ்சுகிட்டு என்ன ஆகப் போவுது :)
      கடி வாங்கின பிறகு கேட்காமல் போனாரே :)
      கொச்சடைத் தண்ணி கூட சில நேரம் அப்படித்தான் :)
      நிறைய பெண்டாளனாய் வாழ்ந்திருப்பானோ,பாவம் பாடிகூட ஒரே நேரத்தில் சாமபல் ஆகலியே :)
      யாரோட அனுபவம் :)

      Delete
  10. அனைத்தும் ரசித்தேன் குறிப்பாக நாய் ஜோக் அருமை

    ReplyDelete
    Replies
    1. இதை கடி ஜோக் என்றே சொல்லலாமா ஜி :)

      Delete

  11. நாய்க்குத் தெரிந்தது
    நமக்குத் தெரியுமா?
    "நன்றி" என்பதையே!

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அடடா ,அப்படியும் சொல்லலாமா? நன்றி ,நான் நன்றி மறக்காதவன்:)

      Delete