5 August 2015

பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது :)

-------------------------------------------------------------------------------------

ஐம்புலன்  போனால் ஆம்புலன்ஸ் :)
                   
            ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
                ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''


ஒண்ணு மட்டும் கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?

                      ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே 
இல்லையேன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
                      ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !''





பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?

                ''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் 

சோகமாவே இருக்கீங்க ?''

                              ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு  இப்பக்கூட
  
என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''




ஒட்டாக் காதல் என்பது இதுதானா ?

தழுவவந்த பனித்துளியை 
நழுவவிட்டது தாமரைமுகம் 
தாமரை இலைத் துளி !


  1. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுTue Aug 05, 07:07:00 a.m.
    அந்த ஒண்ணுதான் இதுன்னு அரசியல் வாதியை ஏமாத்த முடியுமா. இன்னொன்னும் கொடுத்தாதான் காரியம் நடக்கும்





    1. Bagawanjee KATue Aug 05, 07:12:00 a.m.
      பிழைக்கத் தெரியாத ஆளாய் இருக்காரே ,முதலில் பெட்டியைக் கொடுத்து இருந்தால் இந்நேரம் லைசென்ஸ் கையில் வந்து இருக்குமே ?

31 comments:

  1. // ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட

    என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''// ஐயோ பாவம்..... அவர் ஆதங்கம் யாருக்கும் புரியலையே.....

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. எண்பதாம் கல்யாணத்தின் போது ,டைவர்ஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று நம்பலாம் :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    என்ன செய்கிற ஜி அவனும் சின்ன முயற்சி செய்தான்.. அதன் விபரிதம்.... சிறுபுள்ளத்தனம் .... மற்றவைகளை இரசித்தேன்
    த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தமிழன் முகவரி இழந்தோம்.....:.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உயிரோடு விளையாடுவதா சின்ன முயற்சி:)

      Delete
  3. ஆம்புலன்ஸ்ன்னு வருதுன்னு பார்த்தா....கருப்பால்ல ஒரு வண்டி வருது...! ஒரு வேளை பின்னாடி நடக்கப் போறத முன்கூட்டியே தெரியிற ஞானமோ?


    சவப்பெட்டி கொஞ்சம் பெரிசா செய்யனுங்கிறதுனால கொஞ்சம் காலதாமதம்... அமைச்சரே!...மன்னிக்கனும்... !


    ஒங்களுக்குப் பேய் பிடிச்சிருக்கின்னு ஊருல பேசிக்கிறாங்க....!


    முகத்தாமரை மோகமுள்ளோ என்னவோ? பனித்துளி நழுவவிடக்கூடாது... தழுவமுயற்சிக்க வேண்டும்...முயற்சி திருவினையாக்கும் இல்லையா...?

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. தெரியாதத் தனமாய். பிரபஞ்சத்தின் பிளாக் ஹோளில் இவர் நுளைந்து விட்டாரா :)

      சவப் பெட்டி செய்வதிலும் ஊழல் நடந்ததால் ஏற்பட்ட தாமதமோ :)

      ஊருலே என்ன பேசிக்கிறது ,அதோடத் தானே வாழ்ந்து கிட்டிருக்கேன் :)

      நல்ல முயற்சி தொடரட்டும் :)

      Delete
  4. அனைத்தும் அருமை. 60 வதுமாப்பிள்ளையின் ஆதந்தத்தை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆதங்கம் நியாயம்தானே :)

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வணக்கம் ஜீ,,,,,,,,,,
    ரொம்ப அவசியமான சோகம் தான்,,,,,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
    Replies
    1. அவசியமான சோகத்துக்கு காரணம் ,எந்த சாமியாரின் வசியமோ :)

      Delete
  7. ஐம்புலனை அடக்கினார் ஆம்புலன்ஸ் வந்தது
    ஹிஹிஹி
    பெட்டிஷன்/பெட்டி சூப்பர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வலிய போய் இப்படி வரவழைத்துக் கொள்ளலாமா :)

      Delete
  8. ஐம்புலனும் அடங்கினால் ஆம்புலன்ஸா அமரர் ஊர்தி அல்லவா வேண்டும் பெட்டி பெட்டிசன் வார்த்தை விளையாட்டு?பனித் துளிக்கும் ஒட்டகக் காதலுக்கும் என்ன சம்பந்தம்.?

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஆம்புலன்ஸ் ,பிறகுதானே அமரர் ஊர்தி :)
      பெட்டி.... வார்த்தை விளையாட்டு மட்டுமல்ல,நாடு நடப்பும் கூட :)
      அது ஒட்டாக் காதல் ,ஒட்டகக் காதல் வேணும்னா கில்லர்ஜி இருக்கும் அபுதாபிக்கு போகணும் :)

      Delete
  9. 01. ஐம்புலனையும் சும்மா விட்ருக்கலாம்.
    02. பெட்டியை Son கொண்டு வர்றாருனு சொல்ல வேண்டியதுதானே....
    03. பட்ட காலிலேயே படும் 80 இதுதானோ...
    04. இவண் லவ் லட்டரை எச்சியை தொட்டு ஒட்டிக் கொடுத்தவனா இருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. 1.அதானே ,அடக்க நினைத்து அடக்கம் ஆகலாமா :)
      2.மூ த்த தாரத்து சன்னா ....:)
      3.பட்டு போன பிறகு பட்டால் என்னா:)
      4.முதலிலேயே எச்சில் என்றால் மோசம்தான்:)

      Delete
  10. அய்யோ..பாவம்... இப்பக்கூடவும் அவருக்கு பொன்னுபிடிகலைன்னு சொல்வதற்கு சுதந்திரமில்லையே........

    ReplyDelete
    Replies
    1. வாழ்நாள் சாதனையாளருக்கு எது சுதந்திரம் :)

      Delete
  11. அத்தனையும் சூப்பர்.

    தாமரை முகத் தத்துவம், அய்ம்புலனடக்கம், பெட்டியும் பெட்டிசனும் அப்புறம் அந்த அறுபது வயதுவரை அந்த மனிதர் தன் மனதில் வைத்திருந்த வருத்தம். அடாடா. அருமை ஜீ..

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. உயிர் இருக்கும் வரை ஐம்புலனடக்கம் சாத்தியமில்லை தானே :)

      Delete
  12. //''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட

    என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''//

    சோகத்தின் உச்சம்!

    ReplyDelete
    Replies
    1. மனுஷனுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரவே கூடாது :)

      Delete
  13. \\''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'' \\பேரு என்னன்னு கேளுங்க, அனேகமா குமாரசாமியாத்தான் இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. இதென்ன சோதனை குமாரசாமிக்கு :)

      Delete
  14. அடப்பாவமே... ரொம்ப அடக்கிட்டாரோ!

    பெட்டியோட உங்க சன் வரல்லையேங்கறார் போல..

    அடப்பாவி... ஏன், தானாப்போயிச் வேண்டியதுதானே!

    ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. அடக்க அடக்க பொங்கி வழிந்து விட்டது :)
      நல்ல வேளை,சன்னைக் கேட்டார் :)
      வெட்கமாய் இருக்காமே :)

      Delete
  15. ஹஹஹஹ் ஐம்புலன்....ஆம்புலன்ஸ்...

    பெட்டி முன்னாடி போனாத்தானே பெட்டிசன் பின்னாடி வரும்...

    60 லும் பாவம் அவரு....

    அந்த ஒட்டாக் காதல் இந்த 60 க்குப் பொருத்தமா இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. ஐம்பதிலும் ஆம்புலன்ஸ் வரும் :)

      Delete
  16. நீங்கள் எல்லாம் கவிதையின் பக்கம் வராததால் ஏதோ என்போன்றவரின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது பகவானே..!

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. படிச்சா மண்டையைப் பிச்சுக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன் :)

      Delete