27 July 2014

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

---------------------------------------------------------------------------------
பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா இருக்காரே ! 

''எனக்கு நல்ல மாப்பிள்ளையா  அப்பா தேடித் 

தரமாட்டார் போலிருக்கா ,ஏம்மா?''

''நீங்க போடப் போற பத்து பவுன் நகைக்கு 

'சின்ன வீடு' வச்சிகிட்டு இருக்கிற வரன் இருக்கு 

இருக்கு... பரவாயில்லையான்னு தரகர் 

கேட்டா ,வாடகை வருதா ,ஒத்திக்கு 

விட்டிருக்காரான்னு கேட்கிறாரே !''




சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

''என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''


'சிரி'கவிதை! 

24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை !

கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !


13 comments:

  1. அப்பா அப்பாவியா ?
    கைராசியான டாக்....... டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ....
    அப்படீனாக்கா ? மதுரையில ''பந்த்'' வந்தா ?

    ReplyDelete
    Replies
    1. அப்ப விவரமான ஆள்ன்னு சொல்றீங்களா ?
      அப்படித்தான் ..இதுவரைக்கும் யாரும் பிழைக்கலையே !
      அப்பவும்,மூடிய கதவுக்கு பின்னால் அடுப்பு எரிந்து கொண்டுதான் இருக்கும் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. இன்று ஞாயிறு ,கறி வாங்கியாச்சா ...சிறிது தாமதமாய் வந்து பின்னூட்டம் இட்டிருப்பதால் கேட்டேன் அய்யா !
      நன்றி

      Delete
  3. அப்பா ரொம்ப நல்லவருங்க.....நம்பிக்கை!

    டாக்டர்னாலே அப்படித்தான்னு எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கறாங்க...

    3வதுக்கு நல்ல கேள்வி கில்லர் ஜி!!!!

    ReplyDelete
    Replies
    1. அவர் நம்பிக்கைக்கு பெரிய வீடாவே அமையட்டும் !

      ஆனால் உயிரைக் கொடுக்கிற டகடர்களும் இருக்கத்ஹன் செய்றாங்க !

      அப்ப ,நான் சொன்னது நல்ல பதில் இல்லையா ?)))
      நன்றி

      Delete
  4. இவரல்லவோ தரகர்...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. திறமைசாலி ...இவரிடம் ஜாதகம் கொடுத்தாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான் !
      நன்றி

      Delete
  5. முன்னையிட்ட தீ மதுரையிலே
    இன்னைக்கு இட்ட தீ
    புரோட்டா வேகும் கல்லின் கீழேயா...
    ஆபரேசன் செய்துகிட்டவங்க சொல்லலையா - அப்ப
    சொல்ல முன் ஆள் முடிஞ்சா...
    'சின்ன வீடு' வச்சிகிட்டா
    வாடகை எவ்வளவு வருதா என்கிறியளே
    இப்படி
    தலையைப் பிய்க்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. மூணு(க்கும்) முடிச்சுப் போட்டா தலையைப் பிச்சுக்கத்தான் வேணும் !
      நன்றி

      Delete
  6. அந்த பெண்ணை நினைத்தால் பாவமாத்தான் இருக்கு! விவரமான டாக்டர்! கவிதை கலகல!

    ReplyDelete
    Replies
    1. கவிதை மாதிரி கலகலன்னு இருக்கிற பொண்ணுக்கு விவரமான டாகடர் மாப்பிள்ளை கிடைப்பார் ,நீங்க மனசை தளர விடாதீங்க !
      நன்றி

      Delete