29 July 2014

அடடா ,ஜோடிப்பொருத்தம் சூப்பர்!

-----------------------------------------------------------------------------------------------------------
போலி டாக்டரா இருப்பாரோ ?
''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புசத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
''நீங்கதானே பிறக்கிற குழந்தை துரு துருன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !

''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

சிரி'கவிதை! 

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

19 comments:

  1. குழந்தை தக தகனு மின்னனும்னு சொன்னா ? டாக்டர் எதை கொடுப்பாரு?
    அவன் போற மற்ற இடத்துக்கும் போகாம இருந்தால் சரிதான்.
    கவிதை அருமை பகவான்ஜி சிந்திக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்க பஸ்பம் கொடுத்தாலும் கொடுப்பார் !
      கல்யாணமான பிறகு வேணுமானால் போகட்டும் !
      படியில் இருந்து விழுந்து இறக்கும் மாணவர்களைப் பார்க்கையில் பரிதாபமாய் இருக்கிறது !
      நன்றி

      Delete
  2. முதல் ஜோக்கே சூப்பர் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. துருதுருன்னு இருக்கிற பிள்ளையை சாமானியமா எல்லோருக்கும் பிடிக்கத்தானே செய்யும் ,சாம் ஜி ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா...
    1வது நகைச்சுவையை விழுந்து விழுந்து பல தடவை இரசித்தேன்.... பகிர்வுக்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் அந்த பிள்ளைதான் பிடிச்சதா ?
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா....அருமை ஜி! சிரி கவிதை மிகவும் சிந்திக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. குங்குமப்பூ சாப்பிட்டா ,குழந்தை சிகப்பா பிறக்கும்னு நம்புறவங்க இதையும் நம்பித்தானே ஆகணும்?
      நன்றி

      Delete
  5. அட.இரும்ப கொடுத்தா ஆடாம,அசையாமல இருப்பாங்க.....இங்க இரும்ப கொடுத்தா துறு பிடிக்குமுனு சொல்லாமா சொல்றாரோ...........

    ReplyDelete
    Replies
    1. அங்கே காக்கா வலிப்பாச்சே ,இங்கே பிரசவ வலியாச்சே !வலிப் போக்கனுக்கு இன்னுமா விவரமா சொல்லணும் ?
      நன்றி

      Delete
  6. ஜோக் சூப்பர்! ஆனா இரும்புச்சத்து அதிகமான குழந்தைகள் தூங்கிவழிவார்கள் என்றல்லவா கேள்வி பட்டிருக்கிறேன்:thama5

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ,உடனே அந்த மாத்திரையை நிறுத்தச் சொல்லிடுறேன் !
      நன்றி

      Delete
  7. ஜோக் மூன்றுமே சூப்பர்..........த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. அந்த மூணுக்கு நீங்க ஆறு போட்டது ,அதை விட சூப்பர் !
      நன்றி

      Delete
  8. 1) செம ஜோக்!

    2) ஆச்சர்யம்ஹான். அடுத்த ஜோக்கும் சூப்பர்!

    3) மூன்றாவதும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்களுக்கு நீங்க ஏழாவது வோட் போட்டது சூப்பரோ சூப்பர் !
      நன்றி

      Delete
  9. மூன்றுமே சூப்பர் ஹிட் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. துரு துருன்னு இருக்கணும்னா
    இரும்புச்சத்து மாத்திரையா
    தூக்கத்திலே எழுந்து நடக்கிற பொருத்தமா?
    டிக்கெட் எடுத்தும்
    படிக்கட்டிலே தொங்கி
    டிக்கெட் எடுக்கிறார்களே...

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்து பசங்க வேண்டாம்னு சொன்னா எங்கே கேட்கிறாங்க ?
      நன்றி

      Delete