31 July 2014

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி ...பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு!

சென்ற ஆண்டு ,பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு இது ...

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !
என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
     சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
     அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
    எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
    அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
 அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
  கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
  அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
  பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
 கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவுகிறார்கள் !
 எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு 
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !

''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொல்றாரே !''

'சிரி'கவிதை! 

யார் பாக்கியசாலி மனைவிமார்கள் ?

தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு பெற்றவர்கள் !



26 comments:

  1. தலைப்பை படிச்சுட்டு நான் என்னோமோமோமோமோமோமோனு நினை''ச்சே''ன் ப்பூ..
    நல்லவேளை மப்பும் மந்தாரமுமாக இருங்கனு சொல்லாமே போனாரே...
    எல்லா மனைவிமார்களுமா ?

    ReplyDelete
    Replies
    1. புருஷன் மடியிலே மடிக்கணணியை வைச்சுக்கிட்டு இருந்தாலே மனைவிக்கு பிடிக்காது ,அதுக்கும் மேலே ..........?
      நன்றி

      Delete
  2. நானும் கில்லர்ஜீ மாதிரி என்னம்மோஓஓஒ மேட்டர்ன்னுதான் நுழைஞ்சேன்... ஆனா பகவான் புண்ணியத்துல சுவாரஸ்யமான மேட்டர்தான் !

    நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்களின் பணி மிக உயர்ந்தது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. நான்தான் முதலிலேயே எச்சரித்து விட்டேனே ,பலரும் பல்பு வாங்கிய மேட்டர் என்று !உங்க ஆசைக் கோளாறுக்கு நான் வச்சுக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா.

    காலைப்பொழுதில் முதல் முதலாகப் படித்த பதிவு என்றால் தங்களின் பதிவுதான் மனதுக்கு புதிய புயல் வீசியது.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,சுனாமி ஏதும் தாக்கலையே!
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமை!கற்பனை அழகு!

    ReplyDelete
    Replies
    1. இந்த விசயத்தில் கற்பனை மட்டுமே அழகாய் இருக்கமுடியும் ,நிஜத்தில் அலங்கோலமாகி விடுமே !
      நன்றி

      Delete
  6. முன்பெல்லாம் கணிணித்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் கணினி ஒரு மனைவியாக இருந்தது. இப்போ, எல்லா ஆண்களுக்கும் கணினி ஒரு மனைவியாகவும், பெண்களுக்கு அது கணவனாகவும் இருக்கிறது.

    உண்மை தான் தலையாட்டும் கணவன் கிடைத்தால் மனைவி பாக்கியம் அடைந்தவள் தான். (அந்த காலம்). இந்த காலத்தில் எல்லா மனைவிகளும் பேறு பெற்றவர்கள் தான் (தலையாட்டாமல் இருந்தால் யாரு பூரிக்கட்டையால் அடி வாங்குகிறது).

    ReplyDelete
    Replies
    1. கணணி கணவனுக்கு மனைவியாகவும் ,மனைவிக்கு கணவனாகவும் இரட்டை வேடம் போட ஆரம்பித்து விட்டதா ?
      அடடா ,உங்க வீட்டிலேயும் இதே பிரச்சினைதானா ?
      நன்றி

      Delete
  7. கிடைக்கிறவங்களுக்குத்தான் கிடைக்கும் எல்லாருக்குமா? கிடைக்கும்.. பரவாயில்லை.ஒங்களுக்கு பெரிய வீட்டு சம்மதத்துடன் சின்ன வீடு கிடச்சிருக்கே...ரெம்ப சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் கிடைத்த பாடில்லையே ,கொள்கை அளவில் ஒப்புதல் கிட்டியும் கூகுள் ஆண்டவர் அருள் கிட்டலையே !
      நன்றி

      Delete
  8. \\\'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
    ''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு
    கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !//

    ஹூம் நடக்கட்டும், நடக்கட்டும்................த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. லேப்டாப்பை கட்டி அழுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  9. //சென்னை தாம்பாளம் அருகில்//

    தாம்பாளம்? தாம்பரம்?

    நானும் என்னன்னமோ நினைச்சுட்டேன். அப்போ எங்கேதான் வேலை பார்க்கறீங்க? :))))

    உங்கள் மகனின் ப்ளாக் சென்று பார்த்தேன். ஒரே டெக்னிகல் விஷயமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தாம்பாளம் னு சும்மா டூப்புக்காகத்தான் !
      tnstc ல் ஆணி பிடுங்கிக் கிட்டு இருக்கேன் !
      என் மகன் அப்படி எழுதியே AVASTI நிறுவனத்தில் இருந்து பல பரிசுகளை அள்ளி விட்டான் !
      நன்றி

      Delete
  10. தலையாட்டிப் பொம்மைகளிலும்
    ஈரும் பேணுமா?
    பலருக்கும் பல்பு கொடுத்த பதிவா
    நன்று தொடருங்கள்
    இரசிக்க நாம் வருவோம்

    ReplyDelete
    Replies
    1. நான் விற்கிற பல்பு பிரகாசமா இருக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  11. கணிணி அனுபவ பதிவு மட்டுமல்ல ஜோக்குகளும் கவர்ந்தது! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்ன சந்தோசம் என்றால் ,புலவர் உள்பட யாரும் சிறிய எழுத்துக்களில் உள்ளதே என்று கூறாதது தான் !
      நன்றி

      Delete
  12. கணினி அனுபவம் பற்றிய உங்க அனுபவம் first பத்தி படிச்சவுடன் முதலில் இது யார் பதிவு என்று குழம்பி விட்டேன். செம காமெடி!!!

    ReplyDelete
    Replies
    1. திரு .அய்யாதுரை அவர்களின் பெயரைப் பார்த்ததும் அசந்து போய் இருப்பீங்களே ?
      நன்றி

      Delete
  13. டிட்டொ மைதிலி சகோதரி சொல்லியது....முதலில் வேறு யாரோட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்னு நினைச்சுட்டோம்....கொனம் வாசித்ததும்......இது ஜோக்காளியின் ப்ரூடா என்று தெரிந்து விட்டது......ஏன்னா ஜோக்காளி நகைச்சுவைக்காரனாயிற்றே......அவர் அதிலிருந்து விலக மாட்டார் என்பது உறுதியாகத் தெரியும் என்பதால்....ஹாஹ ந்ல்ல சுவாரசியமான ப்ரூடா.....ரொம்பவே ரசிச்சோம்.......

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,காமெடி பீஸ் ஹீரோவாக முடியுமா ?
      நன்றி

      Delete