10 October 2016

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு :)

 இப்படியும் ஒரு சங்கடம் :)          
           ''நீங்க கட்சி  தாவுனதுக்காக , தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்களா ,ஏன் தலைவரே ?''
         ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு சொல்றாங்களே !''

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு :)
             ''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு  கோபமா சத்தம் போடுறாரே ,ஏன் ?''
              ''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''


மருமகள் துடிப்பது ....நடிப்பா ?
           ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''
           ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !
இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல் 
போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்கி இருக்கிறது  !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித் தருவார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று  தெரிவித்தால் நல்லது  !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !

தேவதைகள் உலா வரும் நேரம் !
அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
தேவதைகள்  உலா வரும் நேரம் என 
கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
அந்தகாலம் !
தேவை இல்லாத பூச்சிகள் எல்லாம் நுழையுமென 
எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
இந்த காலம் !

21 comments:

  1. 01. ஊரை மாறச்சொல்லுங்க ஜி
    02. ஹாஹாஹா ஸூப்பர்
    03. அப்ப இது நடிப்புதான்
    04. இனி உருப்பட்டாப்பலதான்
    05. எல்லாம் கலிகாலம்

    ReplyDelete
    Replies
    1. பிறந்த ஊரை எப்படி மாற்றிக் கொள்வது ?பிறப்பு ரிஜிஸ்டரில் பதிவாகிப் போச்சே :)
      இதுக்காவது பயன்படுதே :)
      மாமியார் கிட்டேயேவா:)
      எதைத்தான் கற்றுக் கொடுப்பது என்பதற்கு விவஸ்தை இல்லையா :)
      திறந்து இருக்குற வீட்டில்தான் தேவதைகள் நுழைவார்களோ :)

      Delete
  2. ரொம்ப உப்பு கரிக்குதுன்னுதான் வேற கட்சி மாறிட்டாரோ என்னவோ!

    மருமகள் ரொம்பத்தான் துடிக்கிறாள்!

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. சம்பாதிக்க விட்டுட்டு மொத்தத்தையும் பிடுங்கிக்கிற கட்சின்னா ,உப்பு கரிக்கத்தானே செய்யும் :)

      சாவியைக் கைப்பற்றுவது சுலபம் இல்லையே :)

      Delete
  3. எனக்கு பிரஸ்ஸர் இருக்கு...! டாக்டர் உப்புப் போடாம சாப்பிடச் சொல்லி இருக்கிறாரு... அப்படித் தாவுலைன்னா... டார்வின் கொள்கை தப்பாயிடுமே...! எனக்கு எவ்வளவு பிரஸ்ஸர் கொடுத்தாலும்... எதையும் சந்திக்க தயாரா இருக்கேன்...! ‘முத்துக் குளிக்க வாரிகளா...? மூச்சை அடக்க வாரிகளா...?’

    யுத்த காண்டத்தில்... பால காண்டமா...? யாரடா அங்கே...? எந்தக் காண்ட மிருகங்கள் வந்தது என்பதை நமது ஒற்றர்கள் மூலம் கண்டுபிடியுங்கள்...!

    இதே மாதிரிதான் ஒங்க மாமியாரும் காக்கா வலிப்புலே துடிக்கிற மாதிரி நடிச்சப்ப... அவுங்க மாமியாரும் சாவியத் தரவே இல்லையாம்...!

    ’இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி...’ ‘காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்...!’ ‘பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!’ பள்ளியறை... பாடம் சொல்லித் தர முன்வந்த பல்கலை வாழ்க...!

    ‘வஞ்சிக்கொடி... உன்கொஞ்சும் கிளி... உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி...’ன்னு டங்கு டங்குன்னு டெங்குகொசு ஆடுதே...!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. முத்துக் குளிக்க வரத் தயார் ,மூச்சை அடக்கத் தயாரில்லை பலபேர் :)

      அரசர் இப்படியுமா காண்ட் ஆவது :)

      இந்த நோய் பரம்பரை நோயா :௦

      இந்த பல்களையிலாவது பல்லு விழாதவர் பாடம் நடத்தினால் நல்லாயிருக்கும் :)

      கட்டிப் பிடிக்க நெஞ்சிலே கொஞ்சம் கறியாவது வேண்டாமா :)

      Delete
  4. Replies
    1. தேவதை அழகுதானே :)

      Delete
  5. காதல் படிப்பு பற்றிய தகவல் ஜோர்!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. நம்மூருக்கு இந்த படிப்பே தேவையே இல்லைதானே :)

      Delete
  6. உப்பு விளைக்கும் பூமி என்பதால் உப்பையே சாப்பிட முடியுமா
    பதுங்கு குழியும் ஒதுங்கு குழியும் வெவ்வேறா
    மாமியார் விஷயம் தெரிந்தவர் மருமகளை நம்பமாட்டார்
    கொல்கத்தா ப்ரெசிடென்சி பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் வேலை காலியாக இருக்கிறதா
    இப்பொவெல்லாம் பூச்சிகளைக் கண்டால் பயம் போலிருக்கிறதே கொசுவையும் சேர்த்தா

    ReplyDelete
    Replies
    1. யார் சாப்பிடச் சொன்னார்கள் ?உண்ட உப்புக்கு ரோஷம் வர வேண்டாமா :)

      ரெண்டையும் அரசர் மட்டுமே செய்யலாம் :)

      சமபளம் தர கிடையாதாம் ,பரவாயில்லையா :)

      டெங்கு வரும் வழி அதுதானே :)

      Delete
  7. படித்த பின்புதான் அர்த்தம் வேற என்று புரியுது.....!!!!!

    ReplyDelete
    Replies
    1. யுத்த காண்டம் படிக்க இன்னும் வயசிருக்கே:)

      Delete
  8. படித்த பின்புதான் அர்த்தம் வேற என்று புரியுது.....!!!!!

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன அர்த்தம் புரியுது :)

      Delete
  9. Replies
    1. தேவதைகள் உலா வரும் நேரம் ,உங்க ஊரிலே எப்படி :)

      Delete
  10. கொத்து சாவி!

    ReplyDelete
    Replies
    1. மாமியாருக்கு அதானே கெத்து :)

      Delete
  11. ஆங்கில அர்த்தம் சரிதானே :)

    ReplyDelete