14 January 2015

பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)

----------------------------------------------------------------------------------

வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் '!!!

               '' கண் ஆபரேசன்  செய்த  டாக்டர்  நீங்களே என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
                  ''முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''


  1. சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

பொங்கல்னா இதுதான் பொங்'கல் ' ?

             ''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
            ''அவ்வளவு டேஸ்ட்டா?''
            ''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''

கைத்தறி புடவைய வாங்கி கொடுத்து சகாயம் ஐயா பேர சொல்லி தப்பிக்க பார்த்தா இப்படித்தான், கல்லை போட்டு பொங்கிட்டாங்க!
ReplyDelete

Replies


  1. சகாயம் அய்யா பேரைச் சொல்லி நாம வேட்டியே கட்டிக்கலாம் ,கைத்தறிப் புடவை வாங்கி கோடுத்தா காப்பியும் கிடைக்காது கசாயம்தான் கிடைக்கும் !

ரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கித் தந்த பொங்கல் புடவையோ ?

      ''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
         ''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

ஓஹோ எடுத்துக் கொடுத்திட்டு
போயிட்டாரா ?
ReplyDelete

Replies


  1. ஆமாம் பெரிய  கடமை வீரர் ,  கடமையை முடிச்சிட்டு போயிட்டார் !
    நன்றி

தலைவர் பொண்னோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே !

             ''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
               ''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''

டேய். மாடு பின்னால ஓடறேன்னுட்டு மாட்டிக்கிடாதடான்னு அவங்க அம்மா சொன்னது சட்டுன்னு ஞாபகம் வந்திருச்சாம்.

கோபாலன்
ReplyDelete

Replies


  1. அடங்காத காளை அடிமாடா போய்விடக் கூடாதுங்கிற கவலை அம்மாவுக்கு இருக்கத்தானே செய்யும் ?
    1. 2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....

    2. 'சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் !





      உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
      வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
      இரத்தம்  கொதித்தது ...
      காரணங்களை  கேட்டபோது  புரிந்தது .
      தமிழ் தமிழ் என முழங்கும் 
      தலைவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !






30 comments:

  1. ஆபரேஷனுக்கு முன்னால நளினாவைப்
    பார்த்துப் பார்த்துக் கண்ணை நல்லா
    கூல் பண்ணி இருக்கார் போல...

    டாக்டர் நிச்சயம் எக்ஸ்ரா
    பீஸ் போடுவார்னு நினைக்கிறேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் ஃபீசைக் கூட கொடுத்து விடுவார் ,பாரியாள் கொடுக்கப் போற மரியாதையை எப்படி சமாளிக்கப் போறாரோ :)
      இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  2. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  3. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  4. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  5. விவரமான ஆளா இருப்பார் போல - அதான் நளினாவை பார்க்கணும்னு சொல்லி இருக்காரு!

    ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. விவரம் கெட்ட ஆளுன்னு சொல்லுங்க ,இதையெல்லாமா வெளியே சொல்லிக் கொண்டிருப்பார் :)

      Delete
  6. ஈன்று வெளியாகி இருக்கும் ஜோக்ஸ் எல்லாமே முந்தைய வருடங்களில் வெளியானவை போலிருக்கிறதே(except the first one.)

    ReplyDelete
    Replies
    1. அதை குறிப்பிட்டு உள்ளேனே ,தினசரி பதிவு கொஞ்சம் நீளமாய் போடக்கூடாதா என்று நலம் விரும்பிகள் பலரும் கேட்டதால் ,இந்த பாணி! பூரிக்கட்டை அடியை இப்பவே வாங்கி முடியலே ,இன்னும் ரொம்பவும் யோசிக்க ஆரம்பித்தால் ?வேண்டாம்.... ,இன்னும் கொஞ்ச நாள் வாழ ஆசை :)

      Delete
  7. 1. ஹா...ஹா...ஹா... அடப்பாவி... !சகோதரி பாசம்!!!

    2. ஹா...ஹா....ஹா... பொங்'கல்லு'!

    3. ஹா...ஹா...ஹா... 'எடுத்த' பாவத்துக்கு ஜெயிலுக்கு போயிட்டாரா!

    4. ஹா...ஹா...ஹா.... அந்த பயம் இருக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. 1 .அதுதானே ,இவரின் பாசப் பிணைப்பை டாக்டர் புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறாரே :)
      2. நல்ல வேளை,கல்லை பெண்டாட்டி தட்டில் வைக்காமல் போனார் :)
      3.ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த ரவுண்டுக்கு வந்துவிடுவார் :)
      4.பயமா ,சேர்ந்து வாழும் அளவிற்கு சகிப்புத் தன்மை இல்லையே :)

      Delete
  8. அனைத்தும் அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. திருட்டுப் பய வைச்ச பொங்கல்தான் சூப்பர் இல்லையா சுரேஷ் ஜி :)

      Delete
  9. 01. இது நளினா புருஷணுக்கு தெரியுமா ?
    02. பொங் ‘’கல்‘’ இப்படித்தானே இருக்கணும்....
    03. அவரு வரும் போதாவது வீட்டுக்கு வருவாரா ? இல்லை வேற ஜவுளிக்கடைக்கு போவாரா ?
    04. அதுவும் மாடு... 80 தெரிஞ்சு போச்சோ...
    05. உண்மைதான் ஜி.

    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. 1.டாக்டர் சொல்லிடுவார் ,கவலைய விடுங்க :)
      2.இத்தனை வருஷம் மௌனமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு என்னாச்சு :)
      3.மேட்சிங் பிளவுஸ் எடுக்கப் போவார் :)
      4.அதுவும் படியாத மாடாச்சே :)
      5.சொல்வதெல்லாம் உண்மை :)

      Delete
  10. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  11. சிரிப்பு பொங்கல் வைத்த தங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
    தம 8

    ReplyDelete
    Replies
    1. நேற்று எனக்கு எட்டாத உங்களது த ம வாக்கை , இன்று எட்டும்படி எட்டாவது வாக்களித்ததற்கும்., இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி !

      Delete
  12. பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே-----பின்னே..ஒலக அழகி என்ற பட்டம் கிடைப்பது சும்மாவா....????

    ReplyDelete
    Replies
    1. ஒலக அழகி அவங்கதானா ,நல்லா யோசிச்சுச் சொல்லுங்க :)

      Delete
  13. வித்தியாசமான சிந்தனைதான். சகாயம் நிறைய பேருக்கு கசாயம்தான். கசாயம் உடம்புக்கு நல்லது. சகாயம் நாட்டுக்கு நல்லது.

    எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    த.ம.10

    ReplyDelete
    Replies
    1. நாம் அறிந்த கலெக்டரகளில் சகாயம் போல் இன்னொருவரைப் பார்க்க முடியலேன்னு தோணுது ,பலருக்கும் 'பொங்கல் 'வைத்துக் கொண்டிருக்கும் அவர் சேவை வாழ்க :)
      இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  14. தங்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். த.ம.11

    ReplyDelete
    Replies
    1. வந்த வாழ்த்துக்கும் ,வராத வாக்குக்கும் நன்றி !

      Delete
  15. பொங்கலன்று செம சிரிசிரிபொங்கல் மிஸ் செய்துவிட்டோம்...பிசி....

    அனைத்தும் ரசித்தோம் ஜி....ஆமாம் நீங்கள் தானே உங்க வீட்டுல பொங்கல் வைச்சீங்க?!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நான் வைச்சது கல் இல்லாத பொங்கலாச்சே:)

      Delete