31 January 2015

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

                         ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                        ''எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
          ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''
Thulasidharan V Thillaiakathu31 January 2014 at 14:19
இதுலயும் ஒரு சிக்கல் இருக்குதே ஜி! கவனமாமாகச் செல்லவும் அப்படினு போட்டுருக்கு அதான் கவனமா வரோம் அப்படினு இன்னும் லேட்டாக்குவாங்களே!

Bagawanjee KA31 January 2014 at 23:14 
கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததான்னு வாத்தியார் கேட்பாரே  !

Thulasidharan V Thillaiakathu1 February 2014 at 11:34
அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!

Bagawanjee KA1 February 2014 at 12:22
சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !
  1. இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா ?

                ''அவர் வயலின்லே அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
               ''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

  2. வணக்கம்ஜீ.....
    நல்ல வித்துவான்... சில நேரங்கள் இப்படியும் வருவது வழக்கம்....

  3. கான மழை அவர் பொழிந்தால் 'காலடி' மழை அவர்மேல் பொழியும் ,அப்படித்தானே ?
  4. உண்மை ஜோதிடம் ஜனகனமன நேரமும் சொல்லும் !

             ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
                  ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 





  5. கேள்விக் குறியாகும் மரியாதை !



    புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 
    இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
    வெளிச்சத்திற்கு வரும்போது ...
    மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !




  1.        












18 comments:

  1. 01. எதுக்கும் காலேஜ் பக்கம் நின்னு சாப்பிடச் சொல்லுங்க சரியாப்போயிடும்.
    02. கடந்து செல்லவும்னு போடலாமோ..
    03. செருப்பு ஜோடியோடத்தானே போ்ாங்க...
    04. வித்தியாதமான சோசியர்தான்
    05. நித்தியே.... நமக....
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.மாத்திரை தொண்டையில் இறங்காதே :)
      2.கடக்காமல் எப்படி போறது :)
      3.அதை அள்ளிட்டு போய் காசாக்கவா :)
      4.எல்லோரும் ஜனன நேரம் பார்த்தா ...இவர்:)
      5..அவர் மட்டும்தானா :)

      Delete
  2. Replies
    1. அருமைன்னு நீங்க ஒரு வார்த்தை சொன்னதே எனக்கு பெருமை :)

      Delete
  3. அறியாமை இருட்டில் இருப்பது நாம் தான்...

    ReplyDelete
    Replies
    1. அனுபவிக்கத் தெரியாமல் ...என்ற வார்த்தை உங்கள் கமென்ட்டில் தொக்கி நிற்பது போல் தோன்றுகிறதே ஜி :)

      Delete
  4. எப்படியோ அவர் பாடி ஏதோ ஒரு மழைய வரவச்சிட்டாருல . அதுபோதும்.
    தம+

    ReplyDelete
    Replies
    1. இந்த மழையில் அவர் மட்டும்தானே நனைந்தார் :)

      Delete
  5. .. அதான் கில்லர்ஜி சொல்லிட்டாருல....“எதுக்கும் காலேஜ் பக்கம் நின்னு சாப்பிடச் சொல்லுங்க சரியாப்போயிடும்.”ன்னு

    ReplyDelete
    Replies
    1. ஆர்ட்ஸ் காலேஜா ,என்ஜினீயரிங் காலேஜா என்று சொல்லாமல் விட்டுட்டாரே :)

      Delete
  6. ஒரே மாத்திரையத்தான் வேறே வேற கலர்ல குடுத்திர்க்கப் போறார் எதை சாப்பிட்ட என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஓ..அப்படி வேறு தொழில் ரகசியம் இருக்கா :)

      Delete
  7. உயிர் பிடியும் நேரம் என்பதை இனி டாக்டர்களும் ஜனகனமன நேரம் என்றும் சிம்பாலிக்கா சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. சிம்பாலிக்கா எழுதுவதற்கும் ,சொல்வதற்கும் டாக்டர்களுக்கு சொல்லியா தரணும்:)

      Delete
  8. யார்யார் குடை கொண்டு வந்தார்கள். வான் மழையிலிருந்தும் செருப்பு மழையிலிருந்தும் தப்பிக்க.

    ReplyDelete
    Replies
    1. நனையப் போகிறோம் என்கிற சந்தோசத்தில் யாருமே குடை கொண்டு வந்ததாய் தெரியவில்லை :)

      Delete
  9. Replies
    1. தாமதமானாலும் ரசித்தமைக்கு நன்றி :)

      Delete