8 January 2015

மேஜிக் கன்னி நடிகையானதும் சரிதான் !

                                               ''ஃ டூ பீஸ் உடையில்  உடம்பைக் காட்டி  நடிக்க வேண்டியிருக்கேன்னு  என்னைக்காவது வருத்தப் பட்டு இருக்கீங்களா ?''  
                                 '' மேஜிக் குழுவில் முந்தி  இருந்தப்ப , என்னை  ஃ டூ   பீஸ் ஆக்கினதுக்கே வருத்தப் படலே ,இதுக்கா வருத்தப் படப் போறேன் ?''      
      
                                                         
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

ட்ரான்ஸ்பருக்கும் அஞ்சாத தில்லு துரை!

         
             ''ஆபீஸிலும் போதையில் இருக்கீயே ,உன்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு தூக்கி அடிக்கப் போறாங்க !''
              ''அங்கே போனாலும் டாஸ்மாக் தண்ணி  
கிடைக்குமில்லே ?''



தமிழ்நாடு 'தண்ணிறைவு' பெற்ற மாநிலம் என்பது இதுதானோ?!
ReplyDelete

Replies


  1. இந்த சாதனயையும் தண்ணி அடிச்சு கொண்டாட வேண்டியதுதான் !
    நன்றி

2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....

 தூரப் பார்வை மாதிரி ,இது தூரக் காது போலிருக்கே !



             ''என்  முப்பது வருச  அனுபவத்தில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததில்லை!''
                            ''ஏன் டாக்டர் ?''
             ''நான் பேசுறது காதுலே விழலையாம் ,பக்கத்து தெருவிலேபேசுறது எல்லாம் கேட்குதாம் !''



நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா !

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
எனக்கேன்  மரணத் தண்டனை?

30 comments:

  1. 01. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

    02. பாதை மாறிப்போகும் போதும் போதை மாறிப்போகாது.

    03. நோயாளி பேரு காத்தவராயனோ....

    04. பென் கேட்டது சரிதான் என் பேன்.

    த.ம.இ.வா.ஒ.ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.அப்படி என்றால் விரல் சூப்பக் காணாமே:)
      2.இப்படியே (நாசமா )போகட்டும் :)
      3 காதுலே ஒலியலை போகலைன்னாஅது நல்ல பெயர்தான் :)
      4.குறில் கேட்பது நியாயமென்று நெடிலுக்கும் தெரிகிறது :)

      Delete
  2. Replies
    1. எய்தவன் இருக்க அம்பை நோவது சரிதானா :)

      Delete
  3. Replies
    1. பேனாவின் கேள்வி சரிதானே :)

      Delete
  4. ஹஹாஹ்ஹ் தமிழ் நாட்டில் தண்ணிப் பஞ்சம் என்று எவன்யா சொன்னது!??!! அதான் மூலைக்கு மூலை, வறண்ட பூமியிலும் கிடைக்குதே!!

    நீண்ட காது டாக்டருக்குத் தெரியல பாவம்....ஆனா டாக்டர் ஃபீஸ் சொன்னது மட்டும் கேட்டுருக்கணுமே....!!!!

    அனைத்தையும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ரேஷனில் பாட்டில் கொடுக்காதது மட்டும்தான் பாக்கி :)

      அதுவும் கேட்காத மாதிரி இருந்துக்கிட்டார் ,பைசாவை மிச்சப் படுத்த :)

      Delete
  5. அடப்பாவி... அதுவும் இதுவும் ஒண்ணா! எனி வே, ஹா...ஹா...ஹா...

    அதானே... அந்தத் தண்ணி கிடைக்கும்போது என்ன கவலை! ஹா..ஹா..ஹா...

    டாக்டர் பில் அமவுண்ட் சொல்லியிருப்பார்.. ஹா...ஹா...ஹா...

    நீதிபதி மன வருத்தத்தைக் காட்டராறாம்!

    ReplyDelete
    Replies
    1. அடப் பாவி இல்லே ,அடிப் பாவி :)

      அவருக்கு தாகசாந்தி செய்வதும் அந்த தண்ணிதான் போலிருக்கு :)

      எழுதிக் காட்டிதான் வசூல் செய்தாராம் :)

      அதுக்கு பலிகடா பேனாவா :)

      Delete
  6. கண்ணால் அறுபடுவதற்கும் கத்தியால் அறுபடுவதற்கும் வித்தியாசம் இல்லையா.?தேவையானது கேட்கும். தேவை இல்லாதது கெட்காது. அதானே பேனாவுக்கு மரண தண்டனை ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. கண்ணால் அறுபட்டால்காசு கொட்டு கொட்டுன்னு கொட்டுமே:)
      அதுக்குப் பேர்தான் டவுட்டுக் காது :)

      நீதிபதிக்கு மனசு வலிக்குதுன்னா தீர்ப்பை மாற்றிச் சொல்ல வேண்டியதுதானே:)

      Delete
  7. தண்ணீர்-டாஸ்மாக்-யதார்த்த ஜோக்

    ReplyDelete
    Replies
    1. குடிக்க நல்ல தண்ணீரை தர வக்கில்லையே எந்த அரசுக்கும் :)

      Delete
  8. கவிதை அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதில் 'நசுக்கி' என்பதை விட 'நசுங்கி ' என்று எழுதினால் பொருத்தமாய் இருக்குமோ ?
      இதற்கு பதிலை சகோதரி மைதிலி சொல்வார் ...ஏனென்றால் என் மறுமொழிகள் முழுவதையும் ரசித்துப் படிப்பவர்களில் முக்கியமானவர் அவர் :)

      Delete
  9. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அடுத்த கட்ட போட்டியை தொடங்கி விட்டீர்கள் போலிருக்கே :)

      Delete
  10. //மேஜிக் கன்னி நடிகையானதும் சரிதான் !//

    எது எப்படியோ, பார்வையாளன் மனசு பீஸ் பீஸா உடையாம இருந்த சரி!!!

    ReplyDelete
    Replies
    1. குத்துப் பாட்டை நிறைய பார்த்தா ,பீஸ் பீஸா போகத்தான் செய்வான் :)

      Delete
  11. அடடா முதல் பகிர்வில வெறுமனய சிரிப்புத் தான் வந்திச்சு அதனால
    கருத்துச் சொல்ல முடியாமப் போச்சு அதுக்கு அந்தச் சிரிப்பும் எங்கோ
    மாயமா மறைஞ்சிடிச்சே எங்க ?:)) இப்ப உங்களத் தண்ணி இல்லாத
    காட்டுக்கு மாத்தப் போறன் அது தான் சரி ஜீ :))

    ReplyDelete
    Replies
    1. வெறுமனய சிரிப்புத் தான் வந்திச்சு,வெறுப்பு ,நல்ல வேளை,வரவில்லை :)

      Delete
  12. ஜோக்ஸ் அனைத்தும் கலகலன்னு சிரிக்க வைத்தது! அருமை!

    ReplyDelete
    Replies
    1. சிரித்து மகிழ்ந்ததற்கு நன்றி :)

      Delete
  13. டூ பீஸ்
    டாஸ்மாக்
    டாக்டர்
    எல்லாவற்றையும் மிஞ்சியது.... பேனா... வாழ்த்துக்கள்.
    தம 11

    ReplyDelete
    Replies
    1. இப்போவாவது தெரியுதா பேனா முனை வலிமையானதென்று :)

      Delete
  14. அதானே...அன்னிக்கே வருத்தப் படலே ,இன்னிக்கா வருத்தப் படப் போறா......ங்க....

    ReplyDelete
    Replies
    1. காசு இப்போ டூ பீசைக்கூட கழற்றி எறியச் சொல்லுமோ :)

      Delete
  15. நன்று!அனைத்தும் !

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து தெருவில் பேசுறதெல்லாம் கேட்குது என்றால் செல்லின் மூலமாய்
      கேட்டிருக்குமோ :)

      Delete