2 January 2015

இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ ?

--------------------------------------------------------------------------------------------------------------


'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

               ''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''

          ''எது ?''
           ''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு ஃபுல்லை ஒரே  மடக்கிலே குடிப்பான்னு ஒருவார்த்தைக்கூட சொல்லவே இல்லையே !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

என்னது ,இந்த கொலையிலே நியாயம் இருக்கா ?

           ''பரோல்லெ  வெளியே போய் யாரைக் கொலைப் பண்ணிட்டு  உள்ளே வந்திருக்கே ?''
             ''வாழ்க்கையில் அமோகமா வருவேன்னு .எனக்கு பெயர் வைத்தவரைத்தான் போட்டுத் தள்ளிட்டுவந்தேன் !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....



கண்டிப்பா செய்ய வேண்டியதைத்தான் செய்திருக்கிறார் :))
ReplyDelete

Replies


  1. ஒவ்வொரு முறை பெயரைச் சொல்லிக் கூப்பிடும் போதெல்லாம் வன்மம் வளர்ந்து இருக்குமோ ?
    நன்றி
  2. இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ ?

             ''எதைச் செய்ய நினைத்தாலும்  பெரிய அளவிலே 
  3. நினைக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
              
  4.         ''குதிரைமேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் உட்கார 
  5. முடியாதே !''
  6. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

  7. C-ஐ குண்டா எழுதுனா அதுதானே குண்டுC?
    அது மேல உட்காரலாமே?
    (நாங்கெல்லாம் கடல தாண்டறவங்க!)
    ReplyDelete

    Replies


    1. குண்டு C மேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் ?
      துபாய்க்குப் போகணும்னா கடலைத் தாண்டித்தானே ஆகணும்?
      நன்றி


    2013ம் ஆண்டு  இதே நாளில் ,ஜோக்காளியில்.....

  8. அளவிற்கு மீறினால் காபியும் போதைதான் !



    ''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''
    ''காப்பி நியூ இயர் 'ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறீயே !''


  9. இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா ?

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
    கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு  
    தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
    ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

34 comments:

  1. 01. வழக்கம் மாறிப்போனது தரகருக்கு தெரியலையோ... இல்லை தரகருக்கு தரவேண்டியதை தரலியோ... யாரு கண்டா ?

    02. நன்றிக்கடனோ...

    03. இந்தக்குதிரையும் ‘’அதை’’க்கடந்து ஓடி வந்ததுதானே...

    04. மெத்தப்படிச்சவனெல்லாம் இப்பிடித்தான்.

    05. ஏன் ? அந்தப்பணத்துலயே தண்ணஈர் பஞ்சத்தை தீர்க்கலாமே...

    தமிழ் மணம் இணைப்புடன் குத்து.

    ReplyDelete
    Replies
    1. 1.இதை இப்போ சாதாரணமா எடுத்துக்கணும்னு சொல்லிட்டாராம் :)
      2.சிறை தந்த ஞானமாய் இருக்கும் :)
      3.எந்தக் குதிரையுமே :)
      4.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் என்பது சரிதானே :)
      5.டாஸ்மாக் தண்ணி பஞ்சம் வேண்டுமானால் தீரும் :)
      குத்துக்கும் நன்றி !

      Delete
  2. ஜாடிக்கேத்த மூடி
    நியாயமான கொலைகாரன். இப்படி வாழ்த்துறதுக்கு கூட பயமாக இல்ல இருக்கு.
    கடி தாங்க முடியலை
    தட்டச்சு பிழை
    மனமில்லை என்பது தான் உண்மை

    ReplyDelete
    Replies
    1. .இருந்தாலும் இந்த ஜாடிக்கு மூடியை தாங்கிக்க மனசு வரலையே :)
      அடுத்து பரோலில் வர வாய்ப்பில்லை தைரியமா இருங்க ஜி :)
      தாங்க முடியலைன்னா என்ன செய்யலாம் :)
      ஆனால் ,டெங்கு நிவாரணப் பணிகளுக்கு என்று கோடி கோடியாய் செலவு செய்வார்கள் :)
      இல்லை ,காபி பிரியர் வேண்டுமென்றே செய்திருப்பார் :)

      Delete
  3. தரகரைக் கோபித்து என்ன செய்ய
    எல்லாம் தலையெழுத்துன்னு நினைச்சு
    இரண்டு ஃபுல்லா வாங்கிடவேண்டியதுதான்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கி வைப்பது எங்கே போகிறது என்பதுதானே அவர் வருத்தம் :)
      அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு நன்றி ஜி !

      Delete
  5. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  6. எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  7. எல்லாமே ரசித்தோம் ஜி!
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! அது சரி நேற்று இட்ட வாழ்த்து எங்கே போயிற்று.....செவாய்க்கு பறந்து போயிருச்சோ....ஜி நீங்க நேத்து செவாய்க்கு போய் உங்க ஜோக்குகள போட்டுருக்கீங்க போல...மக்கள் எல்லாம் அங்க குடியேற முயற்சியாமே..கல்க்குங்க...செவ்வாயே அதிரப் போகுது சிரிப்பலையினால்.....இது எப்புடி?!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம இந்தியா வேற செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக சொன்னதில் இருந்து அங்கே போய்விட வேண்டும் ஆவல் அதிகரித்து விட்டது ஜி :)

      Delete
    2. உங்கள் செவ்வாய் மலர்ந்த ஜோக்குகள் என் மெய் வாய் கண் மூக்கு செவி என எல்லா புலன்களையும் புன்னகிக்க செய்தது.

      நம் அரசு நமக்கு ஒரு வாய் தண்ணீரையாவது சுத்தமாக தினசரி வழங்கினால் செவ்வாயும் கிறங்கி இங்கே வரும்.

      கோ

      Delete
    3. தவிச்ச வாய்க்கு தண்ணீர்தர வக்கில்லை ,செவ்வாயில் தண்ணீர் இருப்பதைக் கண்டு பிடித்து என்ன பலன் :)

      Delete
  8. ஜி நீங்கள் செவ்வாய்க்குப் போனால் செவ்வாய் தோஷமாவது ஒன்றாவது....சிரிப்பலைதான்.....

    ReplyDelete
    Replies
    1. செவ்வாயில் சிரிப்பலை என்றால் ரசிக்கத்தானே தோணும் :)

      Delete
  9. எல்லாமே ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  10. //'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !//

    இது கலிகாலம் மட்டுமல்ல ‘குடி காலமும்’கூட ‘பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. கலிகாலம் நம்புறவாளுக்குத்தான் ,நாம் வாழ்வது குடிகாலமே :)

      Delete
  11. இது கலிகாலம் மட்டுமல்ல, குடிகாலமும்கூட பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா உங்களாலே நம்ப முடியலே :)

      Delete
  12. தரகர் பொருத்தம் பாத்து தான் பொறுத்திருப்பார் போல:))) நல்ல குடும்பம்,,,கள் களை கலகம்:)))

    ReplyDelete
    Replies
    1. தரகர் எட்டு பொருத்தம் அமைவதாய் வேறு சொன்னார் ,அதில் இதுவும் ஒன்று போலிருக்கு:)

      Delete
  13. பேர சொல்லி கூப்பிட்டவன விட்டுபிட்டு...பேரு வச்சவன போட்டுத் தள்ளுரது...ரெம்ப அநியாயம்.

    ReplyDelete
    Replies
    1. பெயரின் கூட்டுத்தொகை ஒன்பதில் முடிந்தால் நல்லதுன்னு சொன்னதும் பலித்துவிட்டது ,கைதி என்னும் ஒன்பதில் முடியுதே ,அதனால் இந்த கொலைவெறி :)
      கூப்பிட்ட அப்பன்காரன் இல்லாமப் போனதும் இந்த கொலைக்கு காரணம் :)

      Delete
  14. Replies
    1. நேமாலஜி நாமம் போட்டதையும் தானே :)

      Delete
  15. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென
    கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு
    தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை
    ஒழிக்க பணமில்லை ...மனமில்லை
    அருமை அருமை

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருமுன் காப்போம் என்பதெல்லாம் மக்களுக்கு மட்டும்தான் போலிருக்கு :)

      Delete
  16. பாட்டிலுக்கு ஏத்த மூடி! :)

    ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. மறை கழன்ற மூடியா இருக்குமோ :)

      Delete