24 July 2015

காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் :)

------------------------------------------------------------------

இதுக்கு அப்புறமும் சாப்பிட மனசு வருமா :)
                    ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
               ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு  நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''




 இதுக்கு போய்  பெண்டாட்டிய உதைக்கலாமா  ?

                     ''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
             ''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''


காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !


  1. வலிப் போக்கன்Thu Jul 24, 07:56:00 p.m.
    அப்போ காதலிக்கு பொருந்துற தத்துவம் என்னாதுங்க........




    1. காதலியோட ஜீன்ஸ் பேண்ட்டைப்பார்த்தா அந்த தத்துவம் புரியும் ,பாக்கெட்டே இருக்காது .ஏன்னா ,செலவு செய்யத்தான் எவனாவது ஒரு ஈனா வானா கிடைத்து விடுகிறானே !


29 comments:

  1. Replies
    1. ஈனா வானாவை உங்களுக்குத் தெரியுமா :)

      Delete
  2. புத்திசாலித்தனத்துடன் கூடிய
    நகைச்சுவைத் துணுக்குகள்
    குறிப்பாக மாப்பிள்ளையின் கோரிக்கை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மாப்பிள்ளை இப்படி உதைச்சு காட்டித்தான் கேட்டு வாங்கிக்கணுமா :)

      Delete
  3. அடப்பாவி... நாய்க்கு இருக்கும் மதிப்பு நாயகனுக்கு இல்லையே!

    அங்க உதைக்க இங்கயே, இப்பவே பயிற்சி எடுக்கறார் போல!

    கஞ்சர்களாகவும் இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாயகன் ' நாய் ' ஆகி விட்டதோ :)

      போலீஸ்கிட்டே உதை வாங்கினால் சரியா போகும் :)

      கஞ்சக் காதலிகள் :)

      Delete
  4. என்னவொரு பாசம் பைரவர் மீது...!

    ReplyDelete
    Replies
    1. பைரவி மேல் வைக்கலாம் ,பைரவர் மேலா :)

      Delete
  5. ரசித்தேன் நண்ப்ரே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete
  6. ஹஹஹஹஹ்...

    அந்த அப்பா தன் பெண்ணிற்கு கராத்தே/குன்ஃபூ கத்துக் கொடுக்க கூட்டிக்கிட்டுப் போறாராம்..

    பொண்ணுங்க ஜீன்ஸ்ல பாக்கெட் இல்லையா ஜி எந்தக் காலத்துல...அவங்க தங்க தேவைகளுக்குன்னே பாக்கெட் வைச்சுருக்காங்க ஜி!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் ,முதலிலேயே செய்திருக்கலாம் :)

      அவங்களை தப்பு சொல்லக்கூடாது ,பாக்கெட் இருந்தால் தானே பணத்தை வைச்சுக்க:)

      Delete
  7. படித்தேன்! சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட் எனக்கு தேன்,தேன்:)

      Delete
  8. 'இரண்டு'க்கு நன்றி :)

    ReplyDelete
  9. பொருளாதார புளி-கலை விட காஞ்சப்புளிகள் என்று பட்டம் கொடுக்லாம் தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. ஏழைகளை காயடிக்கும் புலிகள் என்றும் சொல்லலாம் :)

      Delete
  10. ஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு முதலில் பசி அடங்கும் :)

      Delete
  11. நாயினும் கேவலம்! ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. சீச்சீ,நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு :)

      Delete
  12. நாய்க்கு இருக்க மரியாதை புருஷனுக்கு இல்லை...
    மிதிக்க விடுதா ( நான் வண்டியைச் சொன்னேன்)

    அனைத்தும் ரசிக்க வைத்தது ஜி...

    ReplyDelete
    Replies
    1. அவர் நன்றி கெட்டவராய் இருப்பாரோ :)

      நானும் அதையே நினைத்தேன் :)

      Delete
  13. Replies
    1. அது சரி ,அந்த நிலைமை நமக்கு வராதவரை எல்லாமே அருமைதான் :)

      Delete
  14. உங்களின் ரசனைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. வணக்கம்
    ஜி

    இந்த காலத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் கிடையாது போல... ஹா...ஹா.. த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete