8 July 2015

சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா ?

  இது ஒரு குற்றமாய்யா :)         
              
                ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
                ''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''  
                                                                                                                                                             
இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி !

            ''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் 

பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''

           '' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் 

ஆளில்லை வேடிக்கைப் பார்க்கவுமா   ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு 

தான் ! ''

ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !

''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''

''தண்ணியா தான் !''

கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?

'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !



  1. ஸ்ரீராம்.Thu Jul 10, 02:36:00 p.m.
  2. என்னவொரு தேசபக்தி! ஆனால் என்ன செய்ய, கை தட்டித் தட்டியே வளர்ந்த நாடாச்சே..!
  3. சிரிச்சேன். எப்படிங்கறீங்களா... வாயெல்லாம் பல்லாத்தான்!
  4.  A கிளாஸ் ஜோக்!




    1. எல்லாவற்றையும் அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் தியாக பூமி இதாச்சே!

      ஏன் பல்லெல்லாம் வாயா சிரிக்க கூடாதா ?

      நல்ல வேளை,,A ஜோக்னு சொல்லாம விட்டீங்களே !
    2. ஸ்ரீராம்.Thu Jul 10, 10:17:00 p.m.
       ஹிஹிஹி... அதைத்தாங்க சொல்லியிருக்கேன்! :))))
    3. அப்ப,கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் என்பது அடல்ட்ஸ் ஒன்லி டயலாக்கா ?
  5. துரை செல்வராஜூThu Jul 10, 02:42:00 p.m.
    குவைத்தில் நடுப்பகல் (12.10).
    வேலை முடித்து விட்டு இப்போது தான் வந்தேன்.. உச்சந்தலை கொதிக்கின்றது. இருந்தாலும் கணிணியைத் திறந்து கொண்டு உட்கார்ந்து ஜி - பக்கங்களுக்கு வந்தால் - ,
    1, 2, 3 - இளநீர் குடித்த மாதிரி இருக்கின்றது!..
    1. நீங்கள் சொல்வது , இளநீரின் வழுக்கையை நீங்கள் கீறிக் கொடுத்து ,அதை நான் சுவைத்தது போல் இனிக்கிறது !

24 comments:

  1. Replies
    1. சேலைக் கட்டிய மாதரை நம்பாதேன்னு ஒரு பழைய பாட்டு வருமே ,அதையும் ரசிக்க முடிகிறதா :)

      Delete
  2. ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
    ''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
    ''தண்ணியா தான் !''
    அதனால்தான் தண்ணியிலே எல்லோரும் ஆட்டம் போடுறாங்களா? பகவான் ஜி!

    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,என்ன பொருத்தம் ,இந்த பொருத்தம் :)

      Delete
  3. வணக்கம்
    ஜி

    என்ன விளையாட்டு... நிச்சயம் மணமும் .ஒரு வித அழகும் ஜி... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்ன விளையாட்டு ....goal ஆட்டம்தான் :)
      மணம் என்றால் என்ன மணம்:)
      வெள்ளையைக் கறுப்பாக்குவதும் அழகுதான் :)

      Delete
  4. ஹா...ஹா...ஹா...

    வேதனையான உண்மை!

    ப்ளேடு ஜோக்!

    ஹிஹிஹி... என் பழைய கமெண்ட்ஸ் நல்லாருக்கு இல்லே?

    :))))

    ReplyDelete
    Replies
    1. பழைய கமெண்ட்ஸ் நல்லாயிருக்கப் போய்தானே மீள் பிரசுரம் பண்ணியிருக்கேன்

      Delete
  5. வேறேதும் கேஸ்(ஷ்) கிடைக்கல போல...!

    ReplyDelete
    Replies
    1. கேஸ் கிடைக்காட்டியும் நம்மாளு கேஷ் பார்த்து விடுவார் :)

      Delete
  6. ஏற்கனவே..தலை முடி.. இப்போ சேலைக்கா..... கொளுத்துங்க.....!!!!

    ReplyDelete
    Replies
    1. போகி அன்னிக்கு கூட கொளுத்துற பழக்கம் எனக்கில்லையே :)

      Delete
  7. ஏன் ஜீ இப்படி?
    அடுத்த வாதம் இப்படியா
    சேலைக் கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டா இல்லையா
    தலைப்பு எப்படி
    அனைத்தும் அருமை ஜீ,,,,,,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரி இனி இப்படி வராது ,போதுமா :)

      Delete
  8. கண்டு பிடித்துச் சொல்ல ஒரு தருமி(பதிவர் அல்ல!) வர வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த தருமி ,பிரமச்சாரியாய் இருந்து விடக் கூடாது :)

      Delete
  9. எனகுத் தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் 'இக்கு'வைப்பார்கள் ,நீங்கள் அதை விடுவதில் இருந்தே உங்க நல்ல மனசு புரிகிறது அய்யா :)

      Delete
  10. எல்லா ஜோக்குகளும் அசத்தல் ரகம்! வாய்விட்டு சிரித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் ஜி ,இன்று வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியுள்ளதற்கும் சேர்த்து , இரட்டிப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் :)

      Delete
  11. பெண்ணுக்கொரு வாசமுண்டு மட்டுமா
    கோபம் வந்தால்
    அடுப்பில் எரியும் நெருப்புக் கொள்ளியை
    எடுத்துச் சுடும் குணமும் உண்டு
    அதற்கும்
    கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர்!

    ReplyDelete
    Replies
    1. அந்த அனுபவம் உண்மையாய் எனக்கில்லை :)

      Delete
  12. ஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்.....கறுப்பு வெளுப்பு அருமை....

    பின்னூட்டங்களும் ரசனையாக இருக்கின்றன....ஜி!

    ReplyDelete
    Replies
    1. நான் நார்தான் ,உங்களின் பின்னூட்டங்களினால் மணக்கிறேன் :)

      Delete