31 July 2015

பாக்கியசாலி மனைவிமார்கள் யார் :)

---------------------------------------------------------------------------------

வள்ளுவருக்கும் வடிவேலுவுக்கும் உள்ள பொருத்தம் :)
            ''வள்ளுவர் குறள்லே ஒரு முறை கூட சொல்லாததும் ,வடிவேலு அடிக்கடி சொன்ன எழுத்தும் ஒண்ணுதானா ,என்னது :)''
            ''தான்,இதுகூடவா தெரியாது ?''

இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !
                ''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
          ''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொன்னாரே !''


யார் பாக்கியசாலி மனைவிமார்கள் ?

தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு 
பெற்றவர்கள் !

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி ...பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு!

கிளைமேக்ஸ்சை மறந்தவர்கள் மீண்டும் படிக்கலாம் :)

என் முதல் கணினி அனுபவம் !
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
     சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
     அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
    எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
    அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
 அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
  கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
  அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
  பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
 கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவுகிறார்கள் !
 எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு 
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !


  1. KILLERGEE DevakottaiThu Jul 31, 12:44:00 a.m.
    தலைப்பை படிச்சுட்டு நான் என்னோமோமோமோமோமோமோனு நினை''ச்சே''ன் ப்பூ..
    நல்லவேளை மப்பும் மந்தாரமுமாக இருங்கனு சொல்லாமே போனாரே...
    எல்லா மனைவிமார்களுமா ?




    1. புருஷன் மடியிலே மடிக்கணணியை வைச்சுக்கிட்டு இருந்தாலே மனைவிக்கு பிடிக்காது ,மடியிலே  இன்னொரு கன்னியா?

      1. சைதை அஜீஸ்Wed Jul 31, 11:05:00 a.m.
        அதாவது தண்ணி அடிப்பதெல்லாம் இப்போ சர்வசாதரணமாகிவிட்டது என்று சொல்ல வருகிறீர்கள்.
        என்ன கொடும சரவணா !




        1. என்ன கொடுமைன்னு சரவணனிடம் கேட்டா விளங்குமா ?அவனே டாஸ்மாக்கிலேயே சரண்டர் ஆகிக் கிடக்கிறானே !





            1. ஊருக்கு கவியாழி என்றாலும் வீட்டுக்கு தலைஆட்டி தான் இல்லையா நண்பரே ?


26 comments:

  1. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  2. அடடா...! என்ன பொருத்தம்...!

    கணினி அனுபவம் சுவாரஸ்யம் ஜி....

    ReplyDelete
  3. saamaaniyan saamFri Jul 31, 02:31:00 a.m.
    வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
    Reply>>>
    வாழைப் பழமும் கொடுத்து அதை உரித்தும் கொடுத்த மாதிரி ,வலைச்சரத்தை நான் பார்க்கும் முன்பே தகவலும் கொடுத்ததற்கு நன்றி :)
    அறிமுகம் செய்ததற்கு இரட்டிப்பு நன்றி :)

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன்Fri Jul 31, 08:06:00 a.m.
    அடடா...! என்ன பொருத்தம்...!

    இன்று வரையில் எனக்கும்தான் :)
    கணினி அனுபவம் சுவாரஸ்யம் ஜி....
    Reply>>>
    அவ்வ்வ்வ்வ்வ்வ் ன்னு சொல்லத் தோணுதா :)

    ReplyDelete
  5. தலையாட்டி கனவன்மார்களை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்தான் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  6. இந்த விஷயத்தில் பெரும்பாலோர் பாக்கியசாலிகள் தான் இல்லையா :)

    ReplyDelete
  7. பொதுவாகப் பார்க்கும் போது வலைத்தளத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலோர் முறையாகக் கணினி அறிவு பெற்றவகளல்ல என்று தெரிகிறது. தலையாட்டி பொம்மை கணவன் ஒப்பீடு ரசித்தேன் .

    ReplyDelete
  8. கணினி அறிவு பதிவர்களுக்கு எதற்கு ?கற்பனை செய்ய யார் சொல்லி தருவார்கள் அதுவல்லவா முக்கியம் ?

    எல்லா பக்கமும் சாயும் தஞ்சாவூர் பொம்மையை விட தலையாட்டி பொம்மை பரவாயில்லைதானே :)

    ReplyDelete
  9. ரசித்தேன்...
    கணினி அனுபவம் அருமை ஜி.

    ReplyDelete
  10. அருமை ,பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளது தானே :)

    ReplyDelete
  11. ஜோக்ஸ் அருமை....

    ReplyDelete
  12. வணக்கம்,
    அனைத்தும் அருமை,
    நல்ல கண்டுபிடிப்பு,
    நன்றி.

    ReplyDelete
  13. மற்றுமொறு கணவன் மனைவி நகைச்சுவை

    ReplyDelete
  14. மற்றுமொரு கணவன் மனைவி நகைச்சுவை

    ReplyDelete
  15. ezhilFri Jul 31, 12:57:00 p.m.
    ஜோக்ஸ் அருமை....
    Reply>>>
    நீண்ட நாளைக்கு பிறகு வருகைதந்து கருத்திட்டமைக்கு நன்றி :)

    ReplyDelete
  16. mageswari balachandranFri Jul 31, 02:53:00 p.m.
    வணக்கம்,
    அனைத்தும் அருமை,
    நல்ல கண்டுபிடிப்பு,
    நன்றி.
    Reply>>
    நோபல் பரிசுக்கு தேர்வாகுமா:)

    ReplyDelete
  17. rmnFri Jul 31, 04:20:00 p.m.
    மற்றுமொறு கணவன் மனைவி நகைச்சுவை
    Reply>>>
    மொறு மொறுன்னு இருக்குதா :)

    ReplyDelete
  18. rmnFri Jul 31, 04:20:00 p.m.
    மற்றுமொறு கணவன் மனைவி நகைச்சுவை
    Reply>>
    அதே கமெண்ட்,மற்றொரு முறையுமா :)

    ReplyDelete
  19. தலையாட்டி பொம்மை!

    ReplyDelete
  20. ஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
  21. புலவர் இராமாநுசம்Fri Jul 31, 06:41:00 p.m.
    தலையாட்டி பொம்மை!
    Reply>>>
    முன்பு வீட்டுக்கு வீடு பொம்மை மட்டுமே இருந்தது ,இப்போ ...:)

    ReplyDelete
  22. ‘தளிர்’ சுரேஷ்Fri Jul 31, 08:10:00 p.m.
    ஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!
    Reply>>
    நானும் உங்க கருத்தை படித்து மகிழ்ந்தேன் :)

    ReplyDelete
  23. ஆஹா... என்னே உங்க மனைவியின் பெருந்தன்மை???

    ReplyDelete
  24. அவ்...வ்....வ்...வ்...... அவ்வையாரை அய்யனுக்கு புடிக்காதோ...? அவ்வையாருன்னாக்கூட வடிவேலுக்கு பிடிக்கும்...!தமிழ்க்கடவுளுக்கே பிடித்த பெண்பாற் புலவர் அல்லவா...? ஔஷதம்...ன்னா... மருந்து....மருந்து விருந்துக்குகூட ஆகாதோ...? ஓ... நீங்க எழுத்துதானே சொன்னீங்க... அவ்...வ்....வ்....வ்...!


    ஈரும் பேணாக்கி பேண பெருமாள் ஆக்கிற திருமால்ன்னு தெரியாது போல...!


    அவர்களுக்குத்தான் நம்ம மாப்பிள்ள தஞ்சாவூர்க்காரர் நம்மள்ட்ட தஞ்சம்ன்னு தெரியுமே...!


    புருடாவை இத்துடன் நிறுத்திக் கொல்லுங்கள்... மொதல்ல சின்ன வீடு செட்டப்பண்ணுங்க,,,!

    த.ம. 6...




    ReplyDelete
  25. அ. முஹம்மது நிஜாமுத்தீன்Fri Jul 31, 09:11:00 p.m.
    ஆஹா... என்னே உங்க மனைவியின் பெருந்தன்மை???
    Reply>>
    மடிக்கணனிக்குப் பதிலாய் , மடியிலே ஒரு கன்னி வந்தால் அல்லவா தெரியும் பெருந்தன்மை :)

    ReplyDelete
  26. ReplyDelete

    manavai jamesFri Jul 31, 10:01:00 p.m.
    அவ்...வ்....வ்...வ்...... அவ்வையாரை அய்யனுக்கு புடிக்காதோ...? அவ்வையாருன்னாக்கூட வடிவேலுக்கு பிடிக்கும்...!தமிழ்க்கடவுளுக்கே பிடித்த பெண்பாற் புலவர் அல்லவா...? ஔஷதம்...ன்னா... மருந்து....மருந்து விருந்துக்குகூட ஆகாதோ...? ஓ... நீங்க எழுத்துதானே சொன்னீங்க... அவ்...வ்....வ்....வ்...!
    ஈரும் பேணாக்கி பேண பெருமாள் ஆக்கிற திருமால்ன்னு தெரியாது போல...!
    அவர்களுக்குத்தான் நம்ம மாப்பிள்ள தஞ்சாவூர்க்காரர் நம்மள்ட்ட தஞ்சம்ன்னு தெரியுமே...!
    புருடாவை இத்துடன் நிறுத்திக் கொல்லுங்கள்... மொதல்ல சின்ன வீடு செட்டப்பண்ணுங்க,,,!
    Reply>>>
    வள்ளுவருக்கு மருந்துக்கு கூட ஔ பிடிக்காது போலிருக்கே ,அவர் காலத்தில் ஔ பிறக்கவே இல்லையா :)
    திருமாலின் சக்தி வியக்க வைக்கிறது :)
    மருமகனும் மாமனாரை இப்படியே நினைக்கிறாரே :)
    உத்தரவு மகாராஜா ,உடன் ராணியாருடன் கலந்து ஆலோசிக்கிறேன் :)

    ReplyDelete