23 June 2015

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலும் சண்டைதானா :)

--------------------------------------------------------------------------------------------------------------

சுவி(ட்)கார  விழா  என்று அழைத்து இருப்பார்களோ :)              

          ''பொதுவா ,பந்தியில் சாப்பாட்டுக்கு முன்னால் சுவிட் மட்டுமே வைப்பார்கள் ,நீங்க காரமும் வைக்கிறீங்களே ,ஏன் ?''

                 ''இந்த சுவிகார விழாவை நீங்க மறக்கக் கூடாதுன்னுதான் !''

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலும் சண்டைதானா ?

          ''காசிக்கு  முதல் தடவை வந்துட்டு , இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''நீங்கதானே இங்கே இருக்கிற  நாரதர் படித்துறையில் குளிக்கிற  தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத் தான் இருக்கும்னு சொன்னீங்க !''
இந்த கேள்விக்கு பதிலேது :)

''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''



உலக அதிசயம்னா சும்மாவா ?

பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்க செலவோ கோடிக்கணக்கில் !


கரந்தை ஜெயக்குமார்Mon Jun 23, 06:24:00 a.m.
நாரதர் படித்துறையா ?




  1. ஆமாம் ,காசியில் கங்கை ஆற்றின் ஓரம் பல படித்துறைகள்,அதில் ஒன்றின் பெயர் naartha ghat,அங்குதான் தம்பதிகள் குளிக்கக்கூடாதென்று வழிகாட்டி கூறினார் !

    1. கோமதி அரசுMon Jun 23, 01:41:00 p.m.
      நாரதர் படித்துறையா?
      காயப்போட்ட எலி நல்ல நகைச்சுவை.




      1. ஆமாம் ,தம்பதிகள் பார்க்க மட்டுமே வேண்டிய காசியில் இருக்கும் படித்துறை !
        சென்ற வாரம் (அதாவது 2014) அங்கே நாங்கள் சென்ற போது அறுபதாண்டு காலத்திற்கு பிறகு உச்சபட்ச வெயில் அளவான 48 டிகிரி வெயிலில் எலிப் புழுக்கை போலத்தான் காய்ந்து கருவாடாய் ஆனோம் !

40 comments:

  1. ஸ்வீட்காரத்தை சுவீகாரம் ஆக்கி விட்டாரா!!

    ஹா...ஹா....ஹா..... புத்திசாலி அவர்!

    ஹா...ஹா...ஹா.... எலி வந்து காயப்போடுவதை நினைத்துப் பார்க்கிறேன்!

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ நாக்குக்கு ருசியா இருந்தால் சரிதானே :)

      இங்கே குளிக்காமலே அதுதானே நடக்குது ?

      காயப் போட்டு எண்ணெய் பிழியப் போகிறதா :)

      சாய்ந்தும் இருக்கணும் ,சாய்வதையும் தடுக்கணும் ,கஷ்டம்தானே :)

      Delete
  2. சுவிட் உம் காரமும் வைத்தால்
    சுவி(ட்)கார விழாவோ

    காசிக்கு வந்துட்டு
    நாரதர் படித்துறையில் இறங்கிட்டு
    சண்டை போடும்
    தம்பதிகளைப் பார்க்க விருப்பம் தான்...

    ReplyDelete
    Replies
    1. எல்லா விழாவையும் இப்படி சொல்லி விட முடியாதே :)

      தம்பதிகள் வீட்டுக்கு வீடு இருக்கத்தானே செய்கிறார்கள் :)

      Delete
  3. சுவீகாரம் கேள்விப்பட்டுள்ளேன். சுவிகாரம் இப்போது உங்கள் மூலமாக.

    ReplyDelete
    Replies
    1. #எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் `சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு.#
      இது அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் கண்ணதாசன் எழுதி இருப்பது ,அதனால் 'சுவிகாரம்'தவறில்லை :)

      Delete
  4. சுவிட் "விட்டு" நல்லாயிருக்கு ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதை மனம் விட்டு பாராட்டியதற்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுதுன்னு வாத்தியார் நீங்களாவது விளக்கம் சொல்லலாமே:)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    எல்லாம் நல்ல கலாட்டா... இரசித்தேன் தமிழ்மணம்-5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கலாட்டாவை ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  7. 01. பொருத்தமான உபசரிப்புதான்.
    02.அங்கே போயும் சண்டையா ?
    03. காயப்போட்டது எலிதானா ?
    04. சில நேரங்களில் பெரிய பொரி உருண்டையை விட சிறிய மோதிரம் விலை கூடுதல் இல்லையா அதைப் போலதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.கல்யாண சாப்பாட்டில் கல் போடாமல் இருந்தால் சரிதான் :)
      2.காசிக்கு போனாலும் பாவம் மட்டுமா விடாது ,சண்டையும்தான்:)
      3.இதுக்கு விசாரணைக் கமிஷனா போடமுடியும் :)
      4.சில நேரங்களில் தானா :)

      Delete
  8. அனைத்தும் அருமை ஜீ,,
    ஏன் மறந்ததை நினைவுபடுத்துகிறீர்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நினைவு படுத்தினாலும் மறந்தது எப்படி நினைவுக்கு வரும் :)

      Delete
  9. சுவிகாரம் ஸ்வீட் காரம் ரசித்தேன் நாரதர் படித்துறை பற்றி யாருமே கூறவில்லையே. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. சுவிகாரம் ரசிக்கும்படியாக இருந்தது.
      நாரதர் படித்துறை ஆமாம் புதிதாக இருக்கிறதே...

      Delete
    2. gmb ஸார்>>>நாரதர் படித்துறைப் பற்றி தெரிஞ்சுக்காம இருப்பதே நல்லது :)

      Delete
    3. சகோ சசிகலா >>>
      காசிக்கு போனா ஜாக்கிரதையா இருங்க :)

      Delete
  10. சுவிகாரம்...ரசனை
    நாரதர் படித்துறையில் ஏன் காசிக்கு போகாமலேயே...நடக்கும் வாடிக்கை தானே....
    தம 8

    ReplyDelete
    Replies
    1. கருத்து ஒற்றுமையாய் தம்பதிகள் வாழ ஒரு படித்துறையும் இல்லை போலிருக்கே :)

      Delete
  11. நாரதர் என்றாலே கலகம்தானே

    ReplyDelete
    Replies
    1. அது நல்லதில் முடியும் என்று வேறு ஆறுதல் சொல்லிக் கொள்வார்கள் :)

      Delete
  12. நாரதர் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா....??ஃஃ

    ReplyDelete
    Replies
    1. நாரதரை நம்பாத எவனோ ,பட்டைக் கட்டி இருப்பானோ :)

      Delete
  13. ““““சுவி(ட்)கார விழா என்று அழைத்து இருப்பார்களோ “““

    பல“கார“துள் சுவிகாரத்தையும் அடக்கிவிட்டீர்கள் :)

    ''''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
    ''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''''''

    'காயப் போட்ட\ என்பதை இடக்கரடக்கலாகப் பயன்படுத்தி இருக்கிறீர்களோ பகவானே:))

    ReplyDelete
    Replies
    1. இடக்கர் அடக்கல்தான் ,எலி அடக்க முடியாமல் செய்த காரியத்தை வேறெப்படி சொல்வது :)

      Delete
  14. ''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
    ''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''

    உங்களால மட்டும்தான் இப்படிச் சிந்திக்க முடியும் ஜி :)))))))))))))))
    வாழ்த்துக்கள் மறக்காம ஒரு எலியையாவது சந்திச்சு கேளுங்க பிளீஸ் சகோதரா ..:))))))))

    ReplyDelete
    Replies
    1. நான் எலியை சந்திக்கிறேன் ,நீங்க முடிஞ்சா பெருச்சாளியை .......:)

      Delete
  15. காசிக்கு போய்வந்திருக்கிறீர்கள் போல! அனைத்தும் சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. போனது, போன வருடம் (அதாவது காசிக்கு போனது :)

      Delete
  16. ஹஹஹஹஸ்வீகாரம் நல்ல சொல்லாடல்

    ஓ நாரதர் காட்!!! ghat ஐ தமிழில் எழுதினால் இப்படித்தானே !!!

    அனைத்தும் ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட் காரமும் நன்றாய் இருந்ததை சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் :)

      ஒ மை காட் என்று சொன்னாலும் சரிதான் :)

      உங்களின் poet the great குறும்படத்தை நானும் பார்த்து ரசித்தேன் ,வாழ்த்துகள்:)

      Delete
  17. நாரதர் படித்துறை... நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கும் ,ஆனால் வில்லங்கம் இருக்கே :)

      Delete
  18. குளியல் கலாட்டா
    குடும்பஸ்தியிடம் வாலாட்டா(தீர்)!
    நாரதர் படித்துறை
    நகைச் சுவை பகவான் பார்த்ததா? கற்பனையா?
    த ம
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இது கற்பனை கலவாத நூறு சதவீத அக்மார்க் உண்மையே :)

      Delete
  19. குளியல் கலாட்டா
    குடும்பஸ்திரியிடம் வாலாட்டா(தீர்)
    நாரதர் படித்துறை
    நகைச் சுவை பகவான் பார்த்ததா? கற்பனையா?
    த ம 15
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இது கற்பனை கலவாத நூறு சதவீத அக்மார்க் உண்மையே :)

      Delete