7 June 2015

இவர் 'சிலுக்கு ' ரசிகராய் இருப்பாரா :)

 ---------------------------------------------------------------------------

அப்பன் குணம் அறிந்த பிள்ளைங்க  :)

                ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாடும் போது, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா  நாயேன்னு கேட்கிறானே !''


இவர் 'சிலுக்கு ' ரசிகராய் இருப்பாரா :)

             ''அவர்,தற்கொலை செய்துகொண்ட கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ..அளவுக்கு அதிகமாய் தூக்க மாத்திரையை உண்டு துக்கத்தை ஏன் கொடுத்தாய்னு புலம்புறாரே !''




முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல் !

பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !


  1. Chokkan SubramanianSat Jun 07, 07:04:00 p.m.
    கவிதை மிக அருமை. சிசுவின் அழுகையோட காரணத்தை மிக அழகாக சொன்னீர்கள்
  2. Bagawanjee KA......நல்ல வேளை ,எந்த சிசு இதை என்னிடம் சொன்னது என்று கேட்காமல் போனீர்களே :)


30 comments:

  1. பகவான்ஜி..! சல்யூட் டு யு..

    அற்புதமான கவிதை.. அருமை.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. என் மூன்று வரிக்கு உங்களின் மூன்று வரி கருத்துக்கு நன்றி :)

      Delete
  2. கவிதை மனதைத் தொட்டது.

    மறுபடியும்.மாமூலா?

    சிலுக்கை ஞாபகப் படுத்திட்டீங்களே!

    ReplyDelete
    Replies
    1. இது மாமூலான கவிதை அல்ல சிலுக்கு ,ஸாரி சிறப்பு கவிதை:)

      Delete
  3. பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து கற்கின்றன.சிலுக்கு மட்டுமா.?நல்ல கற்பனை....!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இப்போ பெற்றவங்க பிள்ளைகளிடமிருந்து நிறைய கற்றுக்கவேண்டியிருக்கே :
      சிலுக்கு ஒரு உதாரணம் மட்டுமே :)
      சிசுவின் அழுகையிலும் பிறக்கும் கவிதை எனலாமா :)

      Delete
  4. சிசு நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை உண்மையும் கூட :)

      Delete
  5. நகைப்பணி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வெல்லட்டும் ,தொடரட்டும் இவையெல்லாம் நமக்கே உரித்தான சொற்கள் இல்லையா தோழரே :)

      Delete
  6. Replies
    1. தம வுக்கும் +க்கும் நன்றி :)

      Delete
  7. Replies
    1. வேலூருக்கு போய் அசத்திட்டீங்க போலிருக்கே :)என்னால்தான் வர முடியலே:)

      Delete
  8. உண்மையான சிலுக்கு ரசிகர்தான்

    ReplyDelete
    Replies
    1. அதான் இப்படி கவிதை பொங்கி வழியுதா :)

      Delete
  9. கவிதை அருமை ஜி!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிலுக்கு ரசிகனின் கவிதையை சொல்லி இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)

      Delete
  10. அப்பாவுக்குப் பிள்ளை தப்பாதவன்!
    நீங்க யார் ரசிகர்?
    வயதானதும் தாயின் வலி உணரத்தவறி விடுகிறஹு!

    ReplyDelete
    Replies
    1. DNA டெஸ்ட் செய்யாமலே கண்டுபிடிச்சாச்சு :)
      அந்த கால சினிமா பாணியில் சொன்னால், கலாரசனை மிக்கவன் :)
      விவரம் தெரிந்து விடுவதாலா :)

      Delete
  11. கமெண்ட் காணாமப் போச்சு! எனவே மீண்டும்.... த ம 9
    அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை
    நீங்க யார் ரசிகர்?!
    வயதானபின் தாயின் வலி உணரத் தவறி விடுகிறதே?

    ReplyDelete
    Replies
    1. காணாமல் எங்கேயும் போகலே ,கடந்த பதிவில் நீங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருதே ...அது >>#ஆம் !நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன ;இதை உணருங்கள்!#
      கை கொடுங்கள் ,இந்த வார த ம முன்னணி வலைப் பட்டியலில் எனக்கு ஜோடியாக முதலிடம் வந்திருப்பதற்கு வாழ்த்துகள் ஜி :)

      Delete
  12. 01. ப்யூச்சர்ல பெரிய அரசியல்வாதியாக வருவான்.
    02. நல்லவேளை ஆப்பிளைக் கடித்துக் கொடுத்து எனக்கு ஆப்பு வைத்தாய் என்று எழுதாமல் போனானே...
    03. ஸூப்பர் ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1அப்பவும் இந்த கேள்வியைத்தான் கேட்பான் ,அப்படித்தானே :)
      2.ஒருமுறை ,சிலுக்கு கடித்த கொய்யாப்பழ எச்'சிலுக்கு' லட்சக்கணக்கில் செலவழித்தவர்கள் நம்மவர்கள் ஆச்சே :)
      3.இரு வரிகள் .உங்கள் விழிகளையும் ஈரம் ஆக்கிடுச்சா :)

      Delete
  13. Replies
    1. ரசித்ததற்கு மட்டுமல்ல ,உங்களின் நூல் மின்னூல் ஆனதற்கு வாழ்த்துக்களும் ,நன்றியும் ,, :)

      Delete
  14. அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை :)

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக இப்படி பேசினால் அப்பனால் தாங்கிக்க முடியுமா :)

      Delete
  15. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமையாக உள்ளது இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நூலைப் போல சேலை ,தந்தையை போல பிள்ளைன்னு சொல்லலாமா :)

      Delete