6 June 2015

கல்யாணம் ஆனபின் கை அரிக்குதுன்னா :)

-----------------------------------------------

நம்பிக்கையான பினாமி :)
                
              ''நான் போலீஸ் ,பலருக்கும் நீங்கதான் 

பினாமின்னு கேள்விபட்டேன் ,யார் யார் 

உங்களிடம் பணத்தைக் கொடுத்து 

வைத்துள்ளார்கள் ?''
                    
            ''என்னைக் கொன்னாலும் சரி 

,அவங்களைப் பற்றி சொல்லவே மாட்டேன் !''
                     
          ''வெரி குட் ,இந்தாங்க ஐந்து கோடி ,நான் 

கேட்கும் போது கொடுங்க !''


வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

          ''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
            ''யார் என்ன சொல்றாங்க ?''
           ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு 
வரும்னும் சொல்றாங்களே !.


    

ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் ?

வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்கு தகுதியானவனே !

  1. Chokkan SubramanianFri Jun 06, 07:58:00 p.m.
    அது எந்த கை அரிக்கிறதுன்னு இருக்கு. 
    1.           நல்ல வேளை,கல்யாணம் ஆனபின் அரிக்கிறதுக்கு வேறு  ஒரு அர்த்தம் இருக்குன்னு சொல்லாம போனீங்களே :)

24 comments:

  1. 01. ச்சே இதற்காகவே நாமலும் போலீஸ் வேலைக்கு போகலாமோனு தோனுது.....
    02. ஒருவேளை படை, 10 சொறி. சிரங்காக இருக்குமே ?
    03. அவர் நிச்சயமாக போயிருக்கனுமே... ஜி

    ReplyDelete
    Replies
    1. 1.சரி அதான் முடியலே ,பினாமி ஆகலாமே :)
      2.பத்து விரல் இருந்தால் பத்து படைசொறி யாத்தான் இருக்கணுமா:)
      3.எங்கே பரிசு வாங்கவா :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய என் பதிவே மிகவும் சுருக்கம் ,நீங்களும் இப்படி சொன்னா எப்படி :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பதிலா ,நீங்க பினாமி போலீசுக்கு அரெஸ்ட் வாரென்ட் பிறப்பித்து இருக்கலாம் (கருத்தில் :)

      Delete
  4. 1)இப்பதான் தெரியுது தொப்பை ஏன் பெரிதாகி கொண்டே போகிறதுன்னு?
    ஐம்பது கோடியாச்சே!

    2)ஜோசியர் வரவு வரும்னு சொல்றது அவருக்கு!
    டாக்டர் செலவு வரும்னு சொல்றது நமக்கு!
    த ம +1
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.தொப்பை பெரிதாகி பெரிதாகி வெடித்து விடும் அபாயம் இருப்பதால் ஐம்பதை ,ஐந்து கோடி ஆக்கிட்டேன்,பாவம் பிழைத்துப் போகட்டும் :)
      2.ஆக மொத்தத்திலே அவங்களுக்கு வரவு ,நமக்கு செலவுதான் :)

      Delete
  5. ஜோசியர் சொல்றதும் சரி,
    டாக்டர் சொல்றதும் சரி,
    ஏன்னா ,,,,,,,,,,,,,,,,, ரெண்டு கை இருக்கே,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. எந்த கை யாருக்குன்னு சொல்லாமப் போயிட்டீங்களே :)

      Delete
  6. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த பிரஷ் சை நீங்க பயன்படுத்தி இருக்கீங்களா ,அய்யா :)

      Delete
  7. நம்பக்கூடிய பினாமிதான்
    எந்தக்கையை யாரிடம் நீட்டினா.....
    வேப்பங்குச்சியில் ப்ரஷ் இருக்கு. கண்டுபிடிக்கவில்லை. ......!

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு கியாரண்டீ வேறு யார் கொடுப்பா :)
      எந்தக் கையை யாரிடம் நீட்டினாலும் காசு விரயமாகத்தான் போகிறது :)
      இருக்கு ..ஆனால் ,கடிச்சாதானே தெரியுது :)

      Delete
  8. உண்மையான வரிகள்.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நோ 'பல் ' பரிசுக்கு தகுதியானவனே ! .....இதைத்தானே சொல்கிறீர்கள் :)

      Delete
  9. அவரை கொன்ற பிறகு எப்படி சொல்லுவாரு....?????

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை,எழுதி வைத்துக் கொல்வாரா:)

      Delete
  10. உண்மையான போலீஸ்..எதை எங்க பத்திரப்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கார் பாருங்கோ..

    ReplyDelete
    Replies
    1. இந்த துப்பறியும் அறிவை தொழிலில் காட்டி இருந்தால் ஸ்காட்லாண்ட் போலீசுக்கே சவால் விட்டிருப்பார் :)

      Delete
  11. ".வைத்தியச் செலவு
    வரும்னும் ." அருமை

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் ,நீங்களுமா இதை ரசிச்சீங்க :)

      Delete
  12. 1. போட்டு வாங்குவது இது தானோ...?

    ReplyDelete
    Replies
    1. போட்டுத் தள்ளுவது போல் கேட்டு விட்டு மடங்கி விட்டாரே :)

      Delete