26 June 2015

மாப்பிள்ளையால் முடிந்ததும்,முடியாததும் :)

                ''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
            '' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு  முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''
 

மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)

        

                  ''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''

            ''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''



காலம் செய்த கோலமடி !

ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 

ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !

செல் போனில் டயம் தெரிவதால் ...

வாட்ச் வாங்குவதே  நின்று போனது !


  1. காமக்கிழத்தன்Thu Jun 26, 12:41:00 p.m.
    பணத்தை எடுத்துட்டே இருந்தா, பவித்ரா ‘தரித்திரா’ ஆயிடுமே. அது தெரியாதா அவங்களுக்கு?

    1. தரித்திராக்கள் எல்லா பெயரிலுமே இருக்கிறார்களே 
    2. !Thulasidharan V ThillaiakathuSun Jun 29, 11:08:00 a.m.
    3. கவிதை அட அட அட......சூப்பர்! ஜி! உண்மைதான்!
    4. மனுஷன் இன்னும் சோம்பேறி ஆகின்றான்....அதாங்க மொபைல் சும்மா தொட்டாலே அது டைம் பாக்கக் கூட வேண்டாம்...காதுல சொல்லுமாமே!..அப்படியும் வந்து விட்டதாகக் கேள்வி!!!!
    5. தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்....லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துடுவோம்...அதாங்க லேட்டஸ்டா போடற பதிவும் பார்த்துடுவோம்! 
    6. Bagawanjee KASun Jun 29, 08:30:00 p.m.
    7. அடப் பாவமே ,நேரம் பார்க்கக் கூட முடியாத அளவிற்கா  மனிதன் பிசியாகி விட்டான் ?போற போக்கை பார்த்தால் சாப்பிட நேரமின்றி மாத்திரை தேவைப் படும் போலிருக்கே !     
    8. தாமதம் பரவாயில்லை ,ஆனால் 48மணி நேரத்திற்குள் போடப் படும் வாக்கின் அடிப்படையில் தான் தமிழ் மணத்தில், வாசகர் பரிந்துரை,மற்றும் மறுமொழிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் 'தொழில் ரகசியத்தை' நம் பதிவர்கள் அனைவருக்கும் இதன் மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன் !


24 comments:

  1. ஜீ...உண்மையாலுமே கவிதை சூப்பர்ஜீ..

    உங்களோட கவிதை மற்றும் தத்துவம் டைமன்ஷன் என்னை ரொம்ம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு...

    God Bless YOU

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா சொல்றீங்க ,இது 'வெட்டிப் பேச்சு' கிடையாதே :)

      Delete
    2. சேச்சே... உண்மையாலுமே ஜீ....

      நீங்க ஜோக்காளி மட்டும் கிடையாது. வாழ்க்கையை அழகாக தெரிந்து வைத்துக் கொண்டு உங்களது humour sense ஆல ரொம்ப லாவகமாக நடத்திச் சென்றுகொண்டிருக்கும் ஒரு சீரியஸ் பர்ஸன் நீங்க..

      இன்னும் என்னவெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்கன்னு தெரியலை.

      ஏதோ ஒன்னு ரெண்டு கவிதை தத்துவம் அகஸ்மாத்தா சொல்லப்போய் அது எனக்கு ரொம்பப் பிடிச்சு எங்கரேஜ் பன்னதாலே உங்களுக்குள்ள இருக்கிற இத்தனை 'பெரிய மனுஷன்' வெளி வந்திருக்கார்னு நினைக்கிறேன். நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை.

      நல்ல criticism ஒரு எழுத்தாளனை வளரவைக்கும் என்பது என் கருத்து.

      ஆல் த பெஸ்ட் ஜீ..

      God Bless You

      Delete
    3. நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்க மருந்து நன்றாக வேலை செய்யும் என்று உணர முடிகிறது,நன்றி :)

      Delete
  2. பேரை மாற்றிட வேண்டியது தான்! :)

    ரசித்தேன்.

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. பெயர் மாறினாலும் குணம் மாறுமா :)

      Delete
  3. பெரும்பாலோர் கையில் இப்போது கடிகாரம் இல்லை. அதுபோல் வீட்டிலும் அலாரம் கடிகாரம் இல்லை. அந்த வேலையைத்தான் கைபேசி செய்து விடுகிறதே.

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞான முன்னேற்றத்தால் வந்த செல் ஒரு வரப்பிரச்சாதம்தான்,சாதம் உள்ளே போகும்போதுகூட இடது கையில் இருந்து இறங்க மாட்டேங்குதே :)

      Delete
  4. மாப்பிள்ளைக்கு என்ன தொழில்...?

    ReplyDelete
    Replies
    1. தொழில் கிடக்கட்டும் .செய்ய வேண்டியதை விட்டுட்டு ,செய்யக்கூடாததை எல்லாம் செய்துகிட்டு இருக்காரே :)

      Delete
  5. உணவிற்கு பதில் மாத்திரையும் வரும் காலத்தில் வந்துவிடும்...

    ReplyDelete
    Replies
    1. இப்போதே ,விண்வெளி வீரர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்களே:)

      Delete
  6. வணக்கம் ஜீ,
    அப்ப மாப்பிள்ளையால் எதுவும் முடியாது என்று சொல்லுங்கள்,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எதுவும் முடியாது என்றால் தாம்பத்யம் விரைவில் முடிவுக்கு வந்து விடுமே :)

      Delete
  7. மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்....கண்டிப்பா....

    ReplyDelete
    Replies
    1. நாம எடுக்க வேண்டியது இல்லை ,அவங்களே எடுத்துப்பாங்க :)

      Delete
  8. மாப்பிள்ளைக்கு முடிந்ததையும் முடியாததையும்தான் சொல்லி விட்டீர்களே பேரிலேயே வித்ரா இருக்கும் போது ஏன் மாற்றணும்

    ReplyDelete
    Replies
    1. இனி அவர் பாடு ,அவர் மனைவி பாடு :)
      பெயரில் இருக்கலாம் ,பணம் பாங்கில் இருக்கணுமே :)

      Delete
  9. மூழ்கிப் போன ஜோக்கில் மூழ்கிப்போனேன்! கவிதை கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கு ...நீங்களும், உங்கள் தளத்தில் போட்டிருக்கும் ,மூழ்கிப் போன ஜோக்கை நானும் ரசித்தேன் :)

      Delete
  10. காலம் செய்த கோலம்! வாழைப்பழத்தில் ஊசி!

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ,!தாய்க்குலம் அனுபவிக்கும் நவீன வசதிகளை நான் சொல்லலைங்கோ :)

      Delete
  11. கவிதை கலக்கல்!

    ReplyDelete
    Replies
    1. நம்புறேன் ,முதலில் வந்த கருத்தும் இதையே சொல்வதால் :)

      Delete