18 April 2014

கட்டாமல் வைச்சுகிட்டு இருக்கிறது தப்பா ?

''என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
''அடப் பைத்தியமே ,நாம சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி !

'' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''


'சிரி'கவிதை!படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை !

கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பை 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 




34 comments:

  1. பிளாட்டுன்னு சொல்லி தப்பிச்சிட்டாரு....

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா அவரை நம்பலே ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. சின்ன ப்ளாட்தான் ,ஆனா பெரிய வில்லங்கம் இருக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. கட்டினாலும் தப்பு
    கட்டாமல் சும்மா வச்சிருந்தாலும் தப்பு
    பாவம் அந்த மனுஷந்தான் என்னத்த பண்ணுவான்?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரியலே ,நீங்க எதைச் சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. இது நம்பி வாங்கிற பல்புங்க !
      நன்றி

      Delete
  5. ஆஹா ,சும்மா இருக்கிற மனுஷனையும் அந்த அம்மா உசுப்பி விடுதே !
    நன்றி

    ReplyDelete
  6. புத்திசாலியாய் இருப்பார்போல இருக்கே
    நமக்கெல்லாம் இப்படி சட்டென மூளை
    சட்டென வேலை செய்யாது

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டி சந்தேகப் படுறான்னா நியாயம் இருக்கு ..இப்படி எல்லோருமேஅவர் காலை வாருவது சரியா ?நீதியா ?
      இப்படி கோக்கு மாக்கா மூளை வேலை செய்வதைவிட செய்யாமல் இருப்பதே பெட்டர் !
      நன்றி

      Delete
  7. தகவலுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  8. கட்டாம வச்சிக்கிட்டிருக்கற ஃப்ளாட்டானாலும் சரி பொண்ணானாலும் சரி வேற எவனாச்சும் ஆக்கிரமிச்சிருவான் ஜாக்கிரதை :))

    ReplyDelete
    Replies
    1. ஆக்கிரமிப்பு செய்ஞ்சா கொலையே விழும் ,ஜாக்கிரதை !
      நன்றி

      Delete
  9. Replies
    1. இதுக்குதான் பகல்லே பக்கம் பார்த்து பேசுன்னு சொல்றாங்களோ ?
      நன்றி

      Delete
  10. இயமக் கில்லாடி தான் அந்த ஆளு இன்றைக்கு இல்லாது போனாலும்
    என்றைக்கோ ஒரு நாள் மாட்டினா கஞ்சி தாண்டி மவனே :)))))))

    ReplyDelete
    Replies
    1. அதை அவங்க பார்த்துக்குவாங்க ,நீங்க ரிலாக்ஸ் பிளீஸ் !
      நன்றி

      Delete
  11. கட்டினாலும் தப்பு

    கட்டிக் கெட்டாலும் தப்பு

    கட்டாமல் விட்டாலும் தப்பு
    .
    இதில

    தப்புறது எதில

    ReplyDelete
    Replies
    1. தப்பு செய்ஞ்சா தப்பவே முடியாதோ ?
      நன்றி

      Delete
  12. அவர் கில்லாடிதான் இன்னோர் கட்டாத மனை(வி)யை பிளாட் டுன்னு சொலி சமாளிச்சிட்டாரே

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள் ப்ளாட் ஆகி விடும் காலம் வரும் !
      நன்றி

      Delete
  13. அடடா, பிளாட்டா அது..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பல்பு வாங்கியாச்சா ?
      நன்றி

      Delete
  14. அடடா.. இன்னுமா கட்டி முடிக்கலே!?.. என்ன கொடுமை இது சரவணன்!..
    (சரவணன் யாருன்னு கேட்டா.. இவருதான் அந்த மனை (Plot) க்கு பழைய ஓனர்!..)

    ReplyDelete
    Replies
    1. அந்த சரவணனுக்கு மனையும் ரெண்டு ,மனைவியும் ரெண்டுன்னு சொன்னாகளே ,உண்மைதான் போலிருக்கு !
      நன்றி

      Delete
  15. சென்ற வாரம் இதே நாளில்.... இது நல்லா இருக்கே....

    ReplyDelete
    Replies
    1. ஒரு நொடிப் பதிவுன்னு இனிமேல் சொல்ல முடியாதில்லே !
      நன்றி

      Delete
  16. உண்மையச்சொன்னாரோ.பொய்யச் சொன்னாரோ!

    ReplyDelete
    Replies
    1. இதுவரைக்கும் யாருக்குமே வராத சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கு ,உண்மையில் உங்களுக்கு நல்ல மனசு !
      நன்றி

      Delete
  17. மனைவிக்கு ஊசிக்காதோ,சரியா விழுந்துடுதே !
    நன்றி

    ReplyDelete