22 April 2014

சாப்ட்வேர் டீம் லீடர் இப்படி வேலை வாங்கலாமா ?

''காலையிலே வேலைக்குப் போகும்போது தலைமுடியோடத் தானே போனே ,சாயந்திரம் வழுக்கைத் தலையனா  வர்றியே ,ஏன் ?''
''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை இன்னைக்கே 'கையோட முடி 'ன்னு சொல்லி 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....

''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்ன்னு கேக்கிறான் !''
'சிரி'கவிதை!நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது !
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவில்லை !



27 comments:

  1. நன்று.. தமிழ்மணத்தில் இணைத்து ஒட்டு போட்டுட்டேன்.. :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோவை ஆவி ஜி !

      Delete
  2. இரண்டு கத்தியை விட மத்தளம்...?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பக்கமும் அடி ?வாங்கிய அனுபவம் இல்லாதால் நினைவுக்கு வரவில்லை ஹிஹி ))))
      நன்றி

      Delete
  3. நாலு நாள் வேலைக்கே கையோட முடின்னா, ஒரு மாச வேலைக்கு என்ன பண்றது?

    ReplyDelete
    Replies
    1. தலை வலி தாங்க முடியாமல் கையோட தலையையும் கழட்டிவைக்க வேண்டி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஒரு ப்ராஜெக்டை முடிப்பதற்குள் டீம் லீடர் பாடும் கஷ்டம்தான் இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  5. கையோட முடின்னு.. சொன்னதும் - மண்டை காலியாப் போச்சு...
    ஆபீஸ்ல... குப்பை கொட்றதும் அள்றதும் கஷ்டந்தான்!..

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போனா ஆபீசும்,சலூன் மாதிரி ஆயிடும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. வெறும் மண்டைய பிச்சுக்கொண்டே இருந்துவிட்டாரா இல்லே வேலைய முடிச்சுக்கொடுத்தாரா?

    ReplyDelete
    Replies
    1. எட்டு மணி நேரம் ஆபிசில் இருந்தபோது என்ன நடந்து இருக்கும்னு CCTV கேமரா பதிவைப் பார்த்தால்தான் தெரியும் !
      நன்றி

      Delete
  7. ஐடி கம்பெனி டீம் லீடர்கள் ஹிட்லர்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டதாமே! இவர்களுக்கு பயந்தே பல நல்ல நிறுவனங்களிலிருந்தும் பலர் வெளியேறிவிடுகிறார்களாமே!

    ReplyDelete
    Replies
    1. அங்கே பணிபுரிபவர்களுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை ,பணி பாதுகாப்பு சட்டம் ஏதுமில்லை ...கொண்டையில் தாழம்பூவாம் ,உள்ளே ஈறும்பேனுமாம் என்பது I Tகம்பெனிகளுக்கு மிகவும் பொருந்தும் !
      நன்றி

      Delete
  8. டீம் தலவரு அவரு மண்டய பிச்சிருக்கிறதுக்கு பதிலாக வேல செய்யிறவங்க மண்டய பிச்சுக்கிறாரே....இந்தக் அராஜகத்தை வண்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போட்டி ,பொறாமை அதிகம் அதிகமாக விரும்பத் தகாத காரியங்களும் நடப்பது வருத்தப் பட வைக்கிறது !
      நன்றி

      Delete
  9. மூன்றுமே சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  10. உங்களுக்கு முடி நிறைய இருக்கே? அது எப்படி?

    ஒரே உறையில் இரண்டு கத்தி - அருமை.

    ReplyDelete
    Replies
    1. மண்டையைப் பிய்ச்சுக்க நீங்க இருக்கும்போது ,நான் எழுத மண்டையைப் பிய்ச்சுகிறதில்லை...அதான் !
      ஒரே உறைதான்,உள்ளே ஒரு தடுப்பு இருக்கக்கூடாதா ?
      நன்றி

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. முத்துக்கள் மூன்று.

    ReplyDelete
    Replies
    1. இந்த கமெண்ட்டைப் பதினெட்டு நிமிடத்தில் போட்டதற்கு நன்றி !

      Delete
  13. Replies
    1. வாங்க பாஸ் ,நேரம் கிடைக்கும் போது ....இதுதான் தொழில் தர்மமா ?http://www.jokkaali.in/2012/12/blog-post_7641.html..யை படிச்சுப் பார்த்து கருத்தைச் சொல்லுங்க !
      நன்றி

      Delete
  14. Replies
    1. சம்பளம் அதிகம்தான் எல்லோர் கண்ணிலும் படுகிறது ,அதற்காக அவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் ,நீங்கள் சொன்னதைத்தான் சொல்லத் தோன்றுகிறது !
      நன்றி

      Delete