12 November 2015

CCTV கேமரா ,மேனேஜரின் பிரைவசி ?

அனுப்பும்போது இருக்கிற சந்தோஷம்,வரும் போது ?                 

                ''உன் வீட்டுக்காரருக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு ஏண்டி சொல்றே ?''
                  
            ''லீவு போட்டுட்டு வந்து , ஊருக்கு போக பஸ் ஏற்றி விடுறார் ,

வரும்போது வீ ட்டிலேயே  இருந்துகிட்டு அழைத்து போக வர மாட்டேங்கிறாரே !''



நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி !               
               
              ''என்னங்க ,போன தடவை புயல் வந்தப்போதான் ,என்னோட 


அப்பா தீர்க்கதரிசின்னு  தெரிஞ்சுதா ,எப்படி ?''
          
         ''புயலுக்கு 'லைலா  'ங்கிற  உன் பெயர் பொருத்தமா இருக்கே !''

மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?

                     ''ஆபீஸ் நேரத்திலே 'நெட்லே'
பார்க்கக் கூடாததை எந்த 
தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே ?''
                      
              
          ''லேடி P A ,எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்  வர 

லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !''

நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ?

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்பார்கள் ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சுண்டி இழுக்கும் மாளவிகா:)

            ''தரை  தட்டி நிற்கிற  கப்பலை ,இழுவை கப்பல் 

இழுத்து விடும்னு உறுதியா சொன்னீங்களே,எப்படி?''

             ''கருப்புதான் எனக்கு  பிடிச்ச கலருன்னு நம்மை சுண்டி 

இழுத்த மாளவிகா பேரை அந்த இழுவை கப்பலுக்கு வைத்து 

இருக்காங்களே !''

19 comments:

  1. விட்டில் பூச்சி மாதரி வாழ்க்கை ஆயிடுச்சேன்னு அடிக்கடி சொல்றாரு...! போனா வராது... பொழுது சாஞ்சா கிடைக்காதுல்ல...! முடியல... முடியல...அவ்...அவ்...!


    'லைலா ' புயலுக்கு எத்தனை பேர் செத்துப் போறத லைவ்வா காட்டினாங்க... நீங்களும் பாத்திட்டு உயிரோடதானே இருக்கீங்க...[


    புரியாததைப் புரியவைக்கும் புதுஇடம் அல்லவா? நா நெட்லதானே பார்க்கிறேன்... ! மேனேஜர் கொடுத்து வச்சவரு... அவரு இன்டர்....நெட்ல எல்லாம் பார்க்கத் தெரியாது...! அதான் லேடி P A கொஞ்ச(ம்) கொஞ்ச(ம்) சொல்லிக் கொடுக்கிறாங்க...!


    ரசிகர்கள் விரும்பியதைக் காட்டினால் பரவாயில்லையே...! நடிகர் யாரை விரும்கிறார்களோ அதைத்தானே காட்டச் சொல்கிறார்கள்!!


    கப்பல் இனி நகரமுடியாம நின்னு போனதால மாளவிகா பேரை வச்சு நங்கூரம் போல இருக்கட்டும்ன்னு வச்சு இருப்பபாங்க...! ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு’ பாடுறப்பவே பாடையில போறப்ப காத்து கருப்பு அண்டாம ‘கருப்ப’குத்தி குத்தாட்டம் போடுவாங்கல்ல...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. விளக்கைச் சுற்றி சுற்றி வந்து உயிராய் விடுற விட்டில் பூச்சி மாதிரி ,இவரை வீட்டிலே பூச்சியாக்கிட்டாங்களோ :)

      அதுக்காக செத்து செத்து பிழைக்க முடியுமா :)

      நெட்டிலே பார்க்கிறதை விட்டுட்டு , இவரும் நேரடியா எட்டி பார்க்காம இருந்தா சரி :)

      அதைச் சொல்லுங்க :)

      குத்தாட்டம் போடவே வேண்டாம் ,மாளவிகா பெயரே சுண்டி இழுக்குதில்லே:)

      Delete
  2. Replies
    1. கரை தட்டிய கப்பலை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  3. ரசித்தேன்.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. லேடி PA இருந்தால், மேனேஜர் ரூமுக்கு CCTV அவசியம்னு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லதுதானே ஜி :)

      Delete
  4. Replies
    1. புயலுக்கு லைலாங்கிற பெயர் பொருத்தமா ,ஜி :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    எல்லாம் சொல் விளையாட்டுஜி.... இரசித்தேன்.. வாழ்த்துக்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. செல் விளையாட்டுக்களை ரசித்த காலமெல்லாம் போச்சே ,இப்போ சொல் விளையாட்டு :)

      Delete
  6. அனைத்தும் சிரிக்க வைத்தன! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. லைலாவோட அப்பா தீர்க்கதரிசி என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா :)

      Delete
  7. நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ,சொல்லுங்க ஜி :)

    ReplyDelete
  8. 01. மனசுல உள்ளதுதானே வெளியில வரும்
    02. புயலுக்கு வேறு பெயரே இல்லையா
    03. ஆபீஸுல இப்படியும் நடக்குதா
    04. எல்லாப்பயலும் தவறுக்கு நான் காரணம் இல்லைனுதான் சொல்வாங்கே...
    05. மாளவி அக்காதான் எனக்கு பிடிச்சது.

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் தொண்டையில்உள்ளதும் வரும் :)
      அதானே ,மென்மையான பெயர் புயலுக்கா :)
      அபுதாபியில் நடக்கலையா :)
      திருட்டுப் பய புள்ளைங்க, என்னைக்கு தவற ஒத்துக்கப் போறாங்க :)
      அக்காவா ,அடேங்கொக்கா ஆஆஆ :)

      Delete
  9. மனைவிஊருக்கு போனது..அவருக்கு சுதந்திரம் போல.....

    ReplyDelete
    Replies
    1. இப்படி நினைக்கிற அளவுக்கு வீட்டிலே அவருக்கு என்ன டார்ச்சரோ :)

      Delete
  10. //நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி ! //

    மறுபடியும் புயல், வீட்டுக்குள்ளேயே வந்திருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. பத்து மடங்கு தீவிரமா :)

      Delete