25 May 2013

என்றும் வாழும் TMS !

என்றும் வாழும் TMS !
நம் நெஞ்சங்களை எல்லாம் தன் வசீகரக் குரலால் மகிழ்வித்துக் கொண்டிருந்த TMS  வர்களின் உயிர் இன்றுடன் ஓய்வுப் பெற்றது !காற்றுள்ள வரைக்கும் அவர் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
சில வருடங்களுக்கு முன்னால் எதிர்ப்பார்க்காமல் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது ... 
என் உறவினர் ஒருவர் மதுரை கீழவாசல் அருகில் உள்ள கிளினிக்கில் அட்மிட் ஆகியிருந்தார் .அந்த கிளினிக் இருக்கும் இடத்தை யாரிடம் விசாரிப்பது என்று பார்த்தபோது ...சிக்னல் அருகே ஒரு வீட்டில் ,ஈசி சேரில் ஒரு பெரியவர் சாய்ந்து அமர்ந்து இருந்தார் ,அவரிடம் சென்று என் மனைவி விலாசம் கேட்டு வந்தார் .டூ வீலரில் வெளியே நின்று இருந்த என்னிடம் வந்து 'அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது 'என் மனைவி சொல்லவும் நான் அவரை பார்த்தேன் ...அதிசயமாய் இருந்தது ,,அவர் அய்யா TMS தான் !மிகவும் எளிமையாக மேல்சட்டைக் கூட இல்லாமல் இருந்தஅவரை  சந்திப்போமென நினைக்கவே  இல்லை ..பிறகு அவரிடம் சென்று நலம் விசாரித்து  எங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினோம் .
தமிழ் உலகத்திற்கே முகவரியாய் இருந்தவரிடமே இன்னொரு முகவரி விசாரித்தது நாங்களாத்தான் இருப்போம் .இனி எந்த முகவரியில் அவரை சென்று  சந்திப்போம் ?
உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
துக்கத்தில் ...
பகவான்ஜி ,

2 comments:

  1. // உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்... //

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் TMS அவர்களின் குரல்தான் நம்மை ஆறுதல் தருகிறது ...
      #இரவல் தந்தவன் கேட்கின்றான் ,இல்லையென்றால் அவன் விடுவானா ?#
      ....................................................................................
      என் துக்கத்திலும் உடனே பங்கு கொண்ட பண்பாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி !

      Delete