10 May 2016

சுனாமிஸ்ரீன்னு மனைவியை செல்லமா அழைப்பாரோ :)

நகை வாங்குறதும் ,அடகு வைக்கிறதும்  அவங்ககிட்டேதானே :)                
                     ''அதோ ,அந்த தம்பதிகள் தனித் தனியா போனாலும்   மலையாளிகள் கடைக்கே  போறாங்களா ,எதுக்கு  ?'' 
                     ''நகை வாங்க ...பெண்டாட்டி நகைக்கடைக்கும் ,நகையை அடகு வைக்க ....புருஷன் பைனான்ஸ் கடைக்கும்தான் !''




ஆறிலும் சாவில்லை ,நூறிலும் சாவில்லை :)
                  ''இந்த மருத்துவ மனையில் ரூம் நம்பர் ஆறும் ,நூறும் இல்லையே ,ஏன் ?''
                    ''ஆறிலும் சாவு ,நூறிலும் சாவுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு தான் !''
இதுக்கு டாக்டர்தானே காசு தரணும்:)
                ''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
                ''அடுத்தவங்களுக்கு அதை கொடுக்கலாமா வேண்டாமான்னு நான் தெரிஞ்சுக்கத்தான் !''
சுனாமி ஸ்ரீன்னு மனைவியை செல்லமா அழைப்பாரோ :)
              ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
              ''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''
தெய்வத்தை தொலைத்த கோவில்கள் :)
அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !

22 comments:

  1. எல்லாமே அதானா!

    எந்து ஒரு ஐடியா!

    எந்து ஒரு டாக்டாரானு!

    எந்து ஒரு சோக நினைவான்னு!

    எந்து ஒரு பொழைப்பானு!

    ReplyDelete
    Replies
    1. பஜார் பக்கம் போய் பாருங்க ,உண்மை புரியும் :)
      கிளினிக்கை காப்பது கடமை இல்லையா :)
      கடவுள் மட்டும் தான் சோதிப்பாரா:)
      சுனாமி நாளை கணித்தவரை அல்லவா அவர் அடிக்கணும் :)
      இந்த பொழப்புக்கு லீவும் எடுக்காம வேலைக்குப் போறாரே :)

      Delete
  2. சாதுர்யமான நகைச்சுவை .ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. கண்ணில் பட்டதை எப்படியாவது சொல்ல வேண்டியிருக்கே ஜி :)

      Delete
  3. Replies
    1. சுனாமி ஸ்ரீ பெயர் ரசிக்க வைக்குதா இல்லையா :)

      Delete
  4. ‘ஆளுக்குக்காசு’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க...! தன் கண்ணைத் தன் கையாளயே குத்த வைப்பதுங்கிறது இதுதானோ...?

    நல்லாப் பாருங்க... அதுனாலதான்... நூறுக்கு மேலதான் நெம்பரே ஆரம்பிக்குது... இப்ப யாரும் எதுவும் பேச முடியாதில்ல...!

    ‘மெய்ப் பொருள் காண்பது அறிவு’ன்னு திரு.வள்ளுவரு சொல்லியிருக்காருல்ல...!

    இரண்டு பேரதிர்ச்சியத் தாங்கிட்டீங்க...! இனி உங்களுக்கு சாவே இல்ல...!

    உண்டி கொடுத்தோர் உயிர் கொ(எ)டுத்தோரே...! ‘லோக் ஆயுக்தா’ வருது... வருது... வருது...!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. இப்படியே போனா ,ஆளுக்கு காசு மட்டும் பண்ண மாட்டாங்க உயிரையே எடுப்பாங்க :)

      இருக்கிறது நாலு ரூம் ,நம்பர் மட்டும் நூறில் இருந்தா :)

      அதுக்காக ,அடுத்தவன் உயிரை எடுக்கிறதா :)

      செத்தாலும் பிழைக்கிறது கஷ்டம்தான் :)

      வருதுன்னு சொல்வாங்க ,ஆனா வராது :)

      Delete
  5. ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தெய்வத்தைத் தொலைத்த கோவில்கள் உங்க ஊரிலும் இருக்கணுமே :)

      Delete
  6. ஹாஹாஹா! அனைத்து ஜோக்ஸும் டாப்பு!

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் என்பதில் முதலும் கடைசியும் தவிர மற்றது எல்லாமே டூப்பு :)

      Delete
  7. 01. இதுதான் உண்மை
    02. நல்ல பாலிஸி
    03. மைக் டெஸ்டிங்
    04. சுனாமி போயிருச்சு...
    05. இதுதான் இந்தியா

    ReplyDelete
    Replies
    1. இந்த உண்மையை ,பாண்டிக்காரன் உணர்வானா :)
      ஏகப்பட்ட பேரை கொன்னுகிட்டு இருக்காங்க போலிருக்கே :)
      டெஸ்ட் பண்ண இன்னும் எத்தனை உயிர் போகணுமோ :)
      அதன் வடு இன்னும் மாறலே :)
      வல்லரசாயிடும் :)

      Delete
  8. Replies
    1. தெய்வத்தை தொலைத்த கோவில்களுக்கு போகத் தோணுமா :)

      Delete
  9. ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் சிலர் கொன்னுகிட்டு இருக்காங்க :)

      Delete
  10. சுனாமியையும் மனைவியையும் மறக்காமல்இருப்பதற்கு எம்புட்டு அறிவு அவருக்கு.....!!!!

    ReplyDelete
    Replies
    1. தினமும் வாங்கு பட்டிருக்காரே :)

      Delete
  11. Replies
    1. ரசித்தது, நகைக் கடையையா ,அடகு கடையையா :)

      Delete