15 May 2016

ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவளுக்குத் தெரியாதா :)

இனிமேல் முட்டை வாங்க வேண்டியதே இல்லை :)                 

            ''உன் புதுப் பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலையிலே ஏண்டா அடிச்சுக்கிறே?''

             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
இப்படி ஆள்கிட்டே நெருங்கி பழகலாமா :)
            ''தரித்திரம் கூட தொற்று நோய் மாதிரிதானா  ,ஏண்டா ?''
            ''என் தரித்திரம் எப்போ தீரும்னு கிளி ஜோசியம் பார்த்தேன் ,ஜோசியர் கூண்டைத் திறந்ததும் கிளி பறந்து போயிடுச்சே !''
ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவள் அறிவாளா ?
           ''வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடுன்னு  சொல்றதை ,
நம்ம தேர்தல் கமிஷனருக்கு ஞாபகப் படுத்தினால் நல்லதா.ஏன்  ?''
          '' விரல்லே வச்ச  மை காணாமப் போற  முன்னாடி  ,
ரிசல்ட்டை அறிவித்தால் நல்லது !''
பழசை மறக்க நினைத்தாலும் ....!
            ''டேய் மச்சி ,H B D ன்னு சுருக்கமா ,பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
             ''முந்தி நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''
மனைவியின் அர்ச்சனை ,கணவனின் கற்பனை ?
ஆயில் புல்லிங் செய்யும் போது ..
ஆயிலை  வாயிலே அடக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ...
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !

19 comments:

  1. அத்தனையும் அருமை ஜி !

    ''தரித்திரம் கூட தொற்று நோய் மாதிரிதானா ,ஏண்டா ?''
    ''என் தரித்திரம் எப்போ தீரும்னு கிளி ஜோசியம் பார்த்தேன் ,ஜோசியர் கூண்டைத் திறந்ததும் கிளி பறந்து போயிடுச்சே !'' ஹா ஹா ஹா நாம அதுதான் கிளி யோசியம் கேட்க்கல்ல அவ்வ்வவ்வ் !

    தம +1

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு தரித்திரம் என்றாலும் கிளிக்கு சுதந்திரமாச்சே :)

      Delete
  2. நீதான் கூமுட்டைன்னு நெனைச்சேன்...!

    தரித்திரத்துக்கிட்ட இருந்தா ஒரு புரயோஜனமும் இல்லைன்னு... கிளிக்கு றெக்கை முளச்சிடுச்சு... ‘கூண்டுக்கிளி’யா இல்லாம பறந்து போயிடுச்சு... பாவம் கிளி ஜோஸ்யக்காரர்தான் தன்னுடைய எதிர்காலத்தப் பத்தி கவலைப்பட வேண்டும்... இனியாவது ஏமாற்றி பிழைக்காமல் ‘உழைத்து வாழ வேண்டும்...!’

    வியர்வை வருமுன்னே கூலி கொடுத்து விடுகிறார்களே...!

    ஒனக்கு... முந்தி நாம குடிச்ச எச்சி பீடி மட்டும்தான் ஞாபகம் வருதா...? நல்ல வேளை எச் ஐ வி வராம போச்சே...!

    சொல்லாதிங்க... யாரும் கேட்டால்... மூஞ்சியில் துப்பியதை...!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்துக்கு முன்னாடியே கூமுட்டைன்னு தெரியாம போச்சே :)

      இப்போதெல்லாம் கிளி ஜோதிடம் மிகவும் குறைந்து விட்டது ,நல்லதுதானே :)

      போன தேர்தலில் தாமதமாச்சே :)

      அந்த சேஷ்டையுமா :)

      வெளியே சொல்லிக்கிற விஷயமா அது :)

      Delete
  3. Replies
    1. நல்ல வேளை , நகைச்சுவை தோ 'ரணங்கள் ' ன்னு சொல்லாமல் போனீர்கள் ..நன்றி :)

      Delete
  4. அனைத்தும் அருமை. கிளிஜோசியம் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கிளி பாசம் ,எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது :)

      Delete
  5. 01. போகப்போக புரியும் அந்த பூவின் வாசம் தெரியும்..
    02. சோசியருக்கு சனி எட்டாம் இடத்துல இருக்கான் போலயே...
    03. நியாயமான கோரிக்கைதான்
    04. ஹாஹாஹாஹா
    05. எல்லா மனைவியும் இப்படித்தானோ...

    ReplyDelete
    Replies
    1. பூவின் வாசம் தெரியுதோ இல்லையோ ,முட்டை வாசம் இல்லைன்னு ஆயிடுச்சே :)
      அதென்ன எட்டாம் இடம் ,அரையைக் கூட்டிச் சொல்றீங்களே :)
      கோரிக்கை நிறைவேற ,மூன்று நாள் பொறுத்துக்குவோம் :)
      அவனுங்க அனுபவம் அப்படி :)
      உங்க அனுபவம் எப்படி :)

      Delete
  6. ஸ்மார்ட் போனில் பதிவை ரசிக்க முடிந்து இருக்காதே ,நாளை முதல் சரியாகி விடும் :)

    ReplyDelete
  7. அத்தனையும் அருமை ஜி !.......ரசித்தேன்....
    ......
    ஊத்திக் கொடுத்த அம்மா வாசித்தேன் அருமை...
    கருத்திடும் வசதி இருக்கவில்லையே!..
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்து மட்டுமே எனக்கு சொந்தம் என்பதால் ...நன்றி !
      ஊற்றிக் கொடுத்த அம்மாவுக்கு நண்பர் பசி .பரமசிவம் அவர்கள் மறுமொழி கூறுவார் :)

      Delete
  8. அருமை நண்பரே....
    சிரிக்க உங்களின் தளம்
    இருப்பதால் கொஞ்சம் சிரிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கே இது 'டூ மச்'சா தெரியலையா :)

      Delete
  9. வாயை மூடிக் கொண்டிருப்பதால்.... :))))

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மௌனமாய் இருப்பது என்பது வேறு :)

      Delete
  10. ஆறின கஞ்சி கூட கிடைக்கமால்மக்களி அல்லல்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்களா...??

    ReplyDelete
    Replies
    1. அறியாமல் இருக்க முடியாது ,கறி சாப்பிடும் போது மட்டும் மறந்து விடுகிறார்கள் :)

      Delete