25 May 2016

காதலிக்கையில் சொன்னது காத்துலே போயாச்சு :)

           '' பிள்ளையை உடனே பெத்துக்க மாட்டேன்னு  காதலிக்கும் போது சொல்லிட்டு ,இப்போ ஏன் உடனே வேணும்னு சொல்றே ?''
        ''ஒரு பேரப் பிள்ளையைப் பார்த்துட்டேன்னா  நிம்மதியா  போய் சேர்ந்துடுவேன்னு  உங்கம்மா சொல்றாங்களே !''
படிக்கிற காலத்திலேயே அப்படின்னா ...!
        ''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிரூபிக்க ,தலைமை 
ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''
        ''அப்போதே கஞ்சா அடித்து அடி வாங்கியதும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''
உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?
           '' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப் போச்சா ,எப்படி !''
            ''பொணத்து இடுப்புலே கிச்சுகிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''
வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''
புரியுது ,ஆனா புரியலே !              
            ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும், புரியுதா ?''
             ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''

14 comments:

  1. ஏன் முதல் நீல நிறத்தில் இல்லை? புதுசுன்னா நீல நிறத்தில் இருக்க வேண்டுமே..



    கிச்சு கிச்சு ஜோக்கும் துயரம் பருப்பும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய 24 மணி நேரத்தில் 19 மணி நேரம் பிழைப்புக்கே சரியாக போய்விட்டது ,வலைப்பூவின் ,நெற்றியில் நீல நிறப் பொட்டு வைக்க முடியலே :)

      டாக்டரின் துயரம் தாங்க முடியலையே:)

      Delete
  2. துவரம் பருப்பு விலையக் கேட்டாலே துயரம் வரத்தானே செய்யும்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் வெந்து தொலைத்தால் பரவாயில்லை ,நொந்து போக வைக்குதே :)

      Delete
  3. மாமியாரை வழி அனுப்பி வைப்பதில் என்ன ஆர்வம் மருமகளுக்கு

    ReplyDelete
    Replies
    1. பேரனைப் பார்த்தாச்சு ,பேத்தியைப் பார்த்து கண் மூடுறேன்னு சொன்னால் என்ன செய்வாரோ :)

      Delete
  4. மாமியார் பேச்சக் கேக்கலை என்ற அவச்சொல் எனக்கு வந்திடக் கூடாதில்ல...!

    அஞ்சா கஞ்சா நெஞ்சன்னு நிருபிச்சிட்டீங்க...!

    கிச்சுகிச்சு மூட்டிப் பார்த்தா கீச் மூச்சுன்னு சத்தம் கேக்குதான்னு அதிர்ச்சி வைத்தியம் செய்ய விடமாட்டீங்களே...!

    வேகுற பருப்பா இருந்தா ஏன் ரேஷன் கடையிலே போடுறோம்...?

    இதிலென்ன சந்தேகம் என்னோட கல்யாணத்துக்கு அப்புறம்தான்...!

    த.ம. 5



    ReplyDelete
    Replies
    1. பேரன் கல்யாணத்தை பார்த்தா,மனசு நிம்மதி ஆகிவிடும் என்றால் என்ன செய்வார் :)

      ஆனால் ,அந்த வாத்தியார் என்ன ஆனாரோ:)

      நல்ல டெக்னிக் .ஒரு நாள் பூரா இதையே செய்து பாருங்க :)

      நல்ல வேளை,சீனி பரவாயில்லை :)

      முதலில் கழண்டுக்கப் போறது அவங்கதானா :)

      Delete
  5. 01. ஆஹா தங்கமான மருமகள்
    02. உளறுவாயன்
    03. இப்படியும் கண்டு பிடிக்கலாம்தானே..
    04. ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான்
    05. விளக்கம் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. அதான் மாமியார் பூமியில் ரொம்ப நாள் தங்கக் கூடாதுன்னு நினைக்கிறாரோ :)

      உண்மையை சொன்னா உளறுவாயனா :)

      இருப்பதில் சிறந்த டெக்னிக் இதுதான் :)

      வயிறுக்கு மிஸ்டேக் பண்ணுதே :)

      வில்லங்கமா ஆயிடுமே :)

      Delete
  6. மாமியார் மெச்சிய மருமகள் இவராகதான் இருப்பாரோ...???????

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைச்சிருக்கணும் இப்படி ஒரு மருமகள் கிடைக்க :)

      Delete
  7. அருமையான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கடைசி ஜோக்குமா :)

      Delete