12 November 2016

நடிகர் சூர்யாவால் இப்படித்தான் பேச முடியும் :)

செத்த பிறகு காக்கா பிடிக்க யார் வருவா :)              
              ''தலைவர் சிலை மேலே காக்கா அசிங்கம் பண்ணியிருக்கே , சுத்தம்  செய்ய தொண்டர்கள்  யாருமே இல்லையே  ,ஏன்  ?''
               ''உயிரோட இருக்கும் போது தலைவரைச் சுற்றி இருந்தவங்க எல்லாம் காக்கா பிடிக்கிறவங்க தானே !''

அனுப்பும்போது இருக்கிற சந்தோஷம்,வரும் போது :)                
          ''உன் வீட்டுக்காரருக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு ஏண்டி சொல்றே ?''
          ''லீவு போட்டுட்டு வந்து , ஊருக்கு போக என்னை பஸ் ஏற்றி விடுறார் ,வரும்போது ... வீட்டிலே இருந்தாலும்  அழைத்து போக வர மாட்டேங்கிறாரே !''

நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி :)              
        ''என்னங்க ,போன தடவை புயல் வந்தப்போது  ,என்னோட அப்பா தீர்க்கதரிசின்னு  தெரிஞ்சுதா ,எப்படி ?''
        ''புயலுக்கு 'லைலா  'ங்கிற  உன் பெயர் பொருத்தமா இருக்கே !''
மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி :)
            ''ஆபீஸ் நேரத்திலே 'நெட்லே'பார்க்கக் கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே ?''
            ''லேடி P A ,எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்   வர லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !''

சுண்டி இழுக்கும் மாளவிகா:)
  (சில வருடத்துக்கு முன் ,மெரினா பீச் அருகில் கப்பல் ஒன்று தரைத் தட்டி நின்றபோது  வந்த ,என் மொக்கை  இது :)
            ''தரை  தட்டி நிற்கிற  கப்பலை ,இழுவை கப்பல் இழுத்து விடும்னு உறுதியா சொன்னீங்களே,எப்படி?''
             ''கருப்புதான் எனக்கு  பிடிச்ச கலருன்னு பாடி ,நம்மை சுண்டி இழுத்த மாளவிகா பேரை அந்த இழுவை கப்பலுக்கு வைத்து இருக்காங்களே !''
நடிகர் சூர்யாவால் இப்படித்தான் பேச முடியும் :)
நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
சினிமாவில் வன்முறைக்  காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்கிறார்கள்  ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார் ?

22 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எலி யார் என்பதை சொல்லலாமே ஜி :)

      Delete
  2. மணிக்கு எலி கட்டும் பூனை தாங்களே...!

    ReplyDelete
    Replies
    1. பூனைக்கு மணி கட்டறது எலிகளின் கவலை , மணிக்கு எலி கட்ட என்னால் முடியாதே :)

      Delete
  3. காக்கா கூட்ட‌த்தை பாருங்க‌ அதுக்கு க‌த்து குடுத்த‌து யாருங்க‌?

    வீட்டுக்காரருக்கு உன் மேல... கொல்லப்பிரியம்...!

    என்னென்ன... நாம பார்க்க கூடாதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்...!

    இந்த மாளவிகாகப்பல்... தரை தட்டி நிற்கிற வாய்ப்பே இல்ல... திரைகடல் ஓடி திரவியம் தேடும்...!

    ‘ஏ’ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...! இந்த பூனையும் பால் குடிக்கும்...!

    த.ம. + 1

    ReplyDelete
    Replies
    1. சிலை மேல் ஆயிருக்க யார் கற்றுக் கொடுத்து இருப்பாங்க :)

      எதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க :)

      நல்லா பார்த்து சொல்லுங்க :)

      சுண்டி இழுப்பதும் சுண்டிப் போகும் வரை திரவியம்தானே :)

      பால் குடிக்கலைன்னா அது பூனையே அல்ல :)

      Delete
  4. அனைத்தும் ரசித்தேன். நண்பரே!
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. செலக்ட் செய்து ரசீப்பீர்கள் போலிருக்கே :)

      Delete
  5. ஹாஹாஹா ஸூப்பர் பஞ்ச் ஜி
    எல்லாம் பாசம்தான் காரணம்
    நடிகையை சொல்ல வில்லையே...
    மேனேஜர் அம்பூட்டு நல்லவரோ...
    அவரு பொய் சொல்ல மாட்டாரு...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான தொண்டர்கள் யாருமில்லை போலிருக்கே :)
      இதென்ன ஒன்வே என்ட்ரியா:)
      அது ஒரு இனிய புயலாச்சே :)
      அவர் நிஜத்தை மட்டுமே பார்ப்பார் :)
      அவர் மட்டும்தானா,செவப்பா இருக்கிறவங்க எல்லோருமா :)

      Delete
  6. அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மாளவிகா உங்களையும் சுண்டி இழுக்குதா :)

      Delete
  7. செத்த பின் காக்கா பிடித்தால் யாருக்கு லாபம்
    தங்கமணி ஊருக்குப் போனால் குஷி. திரும்பிவந்தால் கவலை
    இப்போது லைலா புயல் எங்கே
    நெட்டில் இருப்பது எல்லாம் பார்ப்பதற்கல்லவா
    அந்த மாளவிகாவினாலும் இழுக்க முடியவில்லையா
    சூர்யா சொல்வதைத்தானே எல்லோரும் சொல்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்படி நன்றி மறப்பது நியாயமா :)
      சரியாக ஞாபகப்படுத்தி விட்டீர்கள் :)
      புயலும் ,லைலாவும் போன இடம் தெரியலே :)
      கண்ள் இருப்பதே அதற்குதானோ :)
      அதுதானே, கடலில் இழுத்து விட்டது :)
      எல்லோரும் இப்படிக் கொண்டிருந்தால் எப்படி விமோசனம் வரும் :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்......

    ReplyDelete
    Replies
    1. புயலுக்கு இவ்வளவு அழகான பெயர் வைத்திருப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  9. வழமை போல உங்க சிறந்த ஜோக்குகள்.

    ReplyDelete
    Replies
    1. வழமையான உங்க கருத்துக்கு நன்றி :)

      Delete
  10. ''கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" - அது
    கப்பலுக்குமா?

    ReplyDelete
    Replies
    1. கருப்போ வெளுப்போ காரியம் ஆனால் சரிதானே :)

      Delete
  11. எலி போயி பூனைக்கு மணிகட்ட முடியாது நல்லாத் தெரியுது...

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினை எலிக்குத்தான் ,அதுதான் வழியைக் கண்டுபிடிக்கணும் :)

      Delete