25 November 2016

அனுஷ்கா ,அன்று கொடுத்ததும் இன்று கெடுப்பதும் :)

டேய் டேய் இது அநியாயம்டா :)      
        ''உங்க கடையிலே தீபாவளிக்கு எடுத்த சேலை சாயம் போகுதே ,வேற கொடுங்க !'' 
       ''அரசாங்கம் போட்ட  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுலேயே சாயம் போவுதாம் ,சேலையத் தூக்கிட்டு வர்றீங்களே !''

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் :)
         ' 'கல்யாண ஆல்பத்தில் உள்ள எல்லா போட்டோக்களிலும்   சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
         ''அதில் , நிற்கிறவங்க எல்லோரும் நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !'' 

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா :)
          ''சாரி  ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
          ''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''

அனுஷ்கா ,அன்று  கொடுத்ததும் இன்று கெடுப்பதும் :)
          ''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வருமாமே  ,உண்மையா?''
          ''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க ! இப்போ ,நடிகை ஆகி  தூக்கத்தைக் கெடுக்கிறாங்களே!''
ரோஜாக்கள் ஜாக்கிரதை :)
         ரோஜாவை முத்தமிடாதே ....
         உன் தாடி முள் குத்தி விடலாம் !
     
ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?
வருடத்தில் ஒருநாள் ....
 சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் படுமாம்  ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வராததாலா ...
இல்லை, கோர்ட் புறக்கணிப்பா ...
இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கேஉரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?

22 comments:

  1. தூங்குவதற்க்கு முன் ஒரு பார்வை விடலாம் என்றால் தூக்கம் கெட்டுவிட்டதே ஜி.
    கோர்ட் செய்தி புதுசா இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. இனிமேலே தூங்கி எந்திரிச்சு என் பதிவுக்கு வாங்க !

      Delete
  2. நீரில், வெந்நீரில், ஆசிடில் என்று எல்லாவற்றிலும் அந்த 2000 ரூபாய் நோட்டைப் போடும் அந்த வீடியோ பார்த்தீர்களா ஜி?

    ஐ.... அனுஷ்கா!

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் ,வியப்பாகத்தான் இருக்கிறது இதுவும் மோடி வித்தையோ :)

      காலையிலேயே நல்ல தரிசனம் ,இன்று நாள் நல்லாயிருக்கும் :)

      Delete
  3. இரண்டையும் தண்ணியில் எதுக்காக போடுகிறீர்கள்...!

    அதுல ஒரு வக்கில் புது மாப்பிள்ளை டைவர்ஸ் கேஸ்க்கு ரேட் அதிகம் வாங்கிட்டாராம்...!

    சாரி ஆண்ட்டி நா வச்ச குறி தப்பி விடுகிறது... நீங்க எங்க நிப்பிங்க ஆண்ட்டி...?!

    நல்ல யோகம் அனுஷ்காவிற்கு... வரு(ம்)மான வரியை மட்டும் நீங்க கட்டுறீங்களா...?!

    ரோஜாவை முத்தமிடாதே .... அவளோட கணவன்... கதிரவன் கோபித்துக் கொள்வான்...!

    ‘உழுதவனுக்கு நிலம் சொந்தம்...’ சட்டம் இருக்கில்ல...!

    த.ம. 3


    ReplyDelete
    Replies
    1. குடிகாரன் காசை 'தண்ணி'யில் போடாமல் வேறெங்கே போடுவான் :)

      அதுக்கு நடிகைஇல்லே பணம் அழணும்:)

      இன்னும் நூறு ரூபாய் வாங்கிக்க குறி தவறாம அடி :)

      வொயிட்டுக்கு மட்டும் நான் கியாரண்டி :)

      கதிரவனுக்கு எத்தனைப் பெண்டாட்டி :)

      சட்டம் இருக்கு ,தற்கொலைகள் ஏன் பெருகுது :)

      Delete
  4. ரசித்தேன். த.ம. +1

    ஸ்ரீராம் : )

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ராம்ஜி ரசித்ததை நீங்க ரசீச்சிங்களா ஜி :)

      Delete
  5. இந்திய 2000 ரூபாய் நோட்டும் சாயம் போவுது
    இந்தியக் காஞ்சிபுரம் பட்டுச் சேலையும் சாயம் போவுது
    என் பெண்டாட்டி 200 அகவையிலும்
    லெக்கின்ஸ், சொக்ஸ்கின்ஸ் வேண்டித் தாவென்று
    சிப்பிலி ஆட்டுறாள் - ஆண்டவா
    கொஞ்சம் இங்கே வாவேன்டா - இந்த
    கொடுமைக்கு தீர்வே இல்லையாடா?

    ReplyDelete
    Replies
    1. சிப்பிலி ஆட்டுறாளா,அதென்ன சிப்பிலி ?எனக்கு தெரிந்ததெல்லாம் திப்பிலி மட்டும்தான் :)

      Delete
  6. //ரோஜாவை முத்தமிடாதே ....
    உன் தாடி முள் குத்தி விடலாம் !//

    பகவான்ஜி, நீங்கள் இளகிய இதயம் படைத்த கவிஞரும்கூட!


    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் கவிஞர்கள் எல்லோரும் அப்படித் தானே :)

      Delete
  7. ரூபாய் சாயம்மட்டுமா

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்தில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரியிருக்கே :)

      Delete
  8. ரசித்தேன் சகோதரா
    கொஞ்சம் கூடுதலான எழுத்து வேலையிருந்தது.
    அதனால் வருகை குறைவுhனது
    தமிழ் மணம் 7.

    ReplyDelete
    Replies
    1. கங்காரு பயணப் பதிவு வேலைதானே ,முடிச்சிட்டு வாங்க :)

      Delete
  9. ஒன்றில் சாயம் போவது தெரிகிறது மற்றதில் சோதனை செய்ய மனம் இல்லை
    நல்லவேளை வக்கீல்கள்தானே கணவர்கள் இல்லையே
    கார்க் பாலில் ஆண்டியின் தலையில் அடிபட வாய்ப்புண்டு
    அனுஷ்கா எனக்கு ஒன்றுமே செய்யவில்லையே
    பறிக்கும் முன் இருந்த முள் குத்தாது. முகரும்போது தாடிமுள் குத்தும் ரோஜா ஜாக்கிரதை
    நீதி மன்ற உரிமை கோரி யார் ஆக்கிரமிக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டாயிரமாச்சே எப்படி சோதிக்க மனசு வரும் :)
      முன்னாள் மனைவியின் கல்யாணத்தைப் பார்க்கும் பெருந்தன்மை அவர்களுக்கு இல்லையே :)
      மருமகள் தலையிலும் அடிபட வாய்ப்புண்டே :)
      வயசானாலேயே இப்படித்தான் :)
      ரோஜாவின் மென்மை இதைக் கூட தாங்காதோ :)
      தள்ளு வண்டியில் ஆரம்பித்து,இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அல்லக்கைகள் இருக்கிறார்களே :)

      Delete
  10. ஹாஹாஹா! ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. படங்கள் பதிவை விட அருமைதானே :)

      Delete
  11. சும்மாவே தூங்க முடியல..இதில..அனுஷ்ஷ்கா வேறா .........அய்யோ.....

    ReplyDelete
    Replies
    1. ஞாபகம் இருக்கா ,நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் :)

      Delete