12 February 2017

மனைவி என்றதும் இதுவா ஞாபகம் வரும் :)

க்ளு  கொடுத்த 'அன்பே சிவம் ' சிவசக்திக்கு  நன்றி :)          
                ''என்ன சொல்றீங்க ,தலையிலே முடி இல்லாததும்  ஒரு வகையிலே வசதியா இருக்கா ?''
              ''எந்தப் பிரச்சினை என்றாலும்,நான் மண்டையைப் பிச்சுக்க  வேண்டியது இல்லையே ''

பையன் சொல்லியதில் தப்பிருக்கா:)
        ''உங்க அப்பாவோட வயதைக் கேட்டால் ,உன்னோட அண்ணன் வயதுதான்னு  எப்படி சொல்றே ?''
         ''என் அண்ணன் பிறந்த போதுதானே அவர் அப்பாவானார் !''  

ராஜா ரொம்பத்தான் நொந்திருக்கிறார் :)                
         ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு நாம் ஏன் போகணும் ?''
          ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''

காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)
            ''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி 'வால்' டெல்லியில் ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே மட்டும் ஏன் இப்படி ஒரு அதிரடி மாற்றம் வர மாட்டேங்குது ?''
           ''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே  நடந்துகிட்டு இருக்கு ?''
இன்றைய இளைஞர்கள் நீதிபதியின் கணிப்பு :)         
            ''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
           ''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''

மனைவி என்றதும் இதுவா ஞாபகம் வரும் :)
           ''என்னங்க ,நீங்கதான் மந்திரியாச்சே ,ஏதாவது ஒரு திட்டத்திற்கு என் பேரை வைங்களேன் !''
            ''அடுத்து புயல் வரும்போது ஞாபகப் படுத்து !'

பாடல் அருமை !படத்தின் பெயர்தான் கொடுமை :)
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பது 
ஆயிரத்தில் ஒரு வார்த்தை !
'ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் ' என்று தொடங்கும் இனிமையான 
பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர்  ...
கொம்பேறி மூக்கன் !

24 comments:

  1. மண்டையைப் பிச்சுக்கத்தான் மனைவி இருக்காங்களே...!

    அப்ப... அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்திருக்கு...!

    ‘அந்தப்புரம் எந்தப்புரமோ விழி தாலாட்ட பிள்ளைத்தமிழ் சொல்லித்தருவேன்...!’ எங்கே மன்னா அந்தப்புரம்? சண்டையைப் நான் பார்த்துக் கொல்கிறேன்...!

    காஜல் தெரிகிறது... இந்த கஜல்தான் ஒன்னும் புரியல... உலகத்திலே...! தலை இருக்க வால் ஆடக்கூடாதில்ல...!

    முதல் மூன்றுக்கு கரண்ட் முதலில் வேண்டும்... கடைசிக்கு கரண்ட் வேண்டாம்... கரண்ட் அக்கவுண்ட் குளோஸ்... ஒரு வாலுமில்ல... நாலு காலுமில்ல... அந்த நாலுக்கு நன்றி...!

    இதுக்குப் போயி ஏ சசி... கலகலன்னு சிரிக்கிறாய்...?! கலா கலா கலக்கலா...?! மயக்கமா...தயக்கமா... வாழ்விலே கலக்கமா...?!

    ரொம்பத்தான் மூர்க்கத்தனம் போங்க...! ச்சீ...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் யாரோட மனைவியும் வழுக்கை ஆனதா தெரியவில்லையே :)

      மூத்த பிள்ளையா இளையபிள்ளையா :)

      உள்ள பிரச்சினை போதாதா என்று இதென்ன புது வம்பு :)

      காஜலை உற்று பார்க்கிற மாதிரி கஜலை ரசித்துக் கேளுங்கள், புரியும் :)

      சவப் பெட்டிக்கு பதிலா மின்சார நாற்காலியை சொல்லலாமா :)

      கலக்கல் என்றாலே கலக்கம் வரத்தானே செய்யும் :)

      மூக்கனோட மூக்கு இடைஞ்சலா இல்லையா :)

      Delete
  2. நாட்டு நடப்பை பார்த்தால் சிகையில்லாத கவலை பறந்து நகை மிகுந்து வருகிறது ஜி...

    ReplyDelete
    Replies
    1. இப்போவாவது ஒத்துக்குங்க இரும்பு பெண்மணி என்று :)

      Delete
  3. நாட்டு நடப்பை பார்த்தால் சிகையில்லாத கவலை பறந்து நகை மிகுந்து வருகிறது ஜி...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான ஜல்லிக்கட்டு இப்போதானே தொடங்கியிருக்கு :)

      Delete
  4. Replies
    1. புயலுக்கு லைலான்னு பெயராம் ,நல்லாவா இருக்கு :)

      Delete
  5. பிச்சு பிச்சுதான் மண்டை அப்படியாகிவிட்டதோ என்னவோ!

    வயது... வித்தியாசமான பார்வை!!

    இங்க நடக்கற சண்டை எங்கே பாதிக்குது பாருங்க!!!

    பாடல் -படம் பெயர் - ரசித்தேன்.



    தம பொறுமையைச் சோதிக்கிறது. அடுத்த இரண்டு மணிநேரத்தில் சுற்றிமுடித்து வாக்கு விழுந்துவிடும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தம வாக்கு விழுந்துடுச்சு!

      Delete
    2. இனிமேல் பிச்சுக்க தேவையில்லையே :)

      ரொம்பத்தான் குழப்பிட்டேனோ :)

      கமல் சொன்ன கேயாஸ் தியரி இதுதானோ :)

      படத்து பெயரையுமா :)

      பொறுத்தார் பூமிஆள்வார்ன்னு சொல்றாங்களே :)

      Delete
    3. சிறிது சுற்றவிட்டு பேக் சென்று, மீண்டும் வாக்களித்தால் வாக்கு விழுந்து விடுகிறது ஜி ,இது நான் கடைபிடிக்கும் பாணி :)

      Delete
  6. Replies
    1. நீதிபதி சந்துரு சொன்னது சரிதானே ஜி :)

      Delete
  7. ஸூப்பர் ரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. 'ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 'சூப்பர் நேரம்தானே :)

      Delete
  8. ரசித்தேன் அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. மனைவி புயல் என்றால் இவர் அவருக்கு பின்னல் இருக்கும் அமைதியா :)

      Delete
  9. முடியையா மண்டையையா
    புத்திசாலிப் பையன்தானே
    இரு கோடுகள் கதையா
    உங்கள் டூத் பேஸ்டில உப்பு இருக்கா
    ரேடியோப் பெட்டியுமா
    புயலுக்குப் பெயர் கேட்களியே திட்டத்ட்க்ஹுக்கு அல்லவா
    என்னவெல்லாம் பெயரிலோ படங்கள் வருகின்றன

    ReplyDelete
    Replies
    1. மண்டைக் காயுது என்றால் டெம்பரேசர் பார்க்கலாமா :)
      இவன் பிறக்கும் அப்பன் மறுஜென்மம் எடுத்திருப்பாரா:)
      இந்த இரு கோடு தத்துவம் இரு நாட்டுக்கு கேடாச்சே :)
      உப்பு உறப்பு மசாலா எல்லாமே இருக்கு :)
      இசையைக் குறிப்பதாய் எடுத்துக்குவோமே :)
      புயலுக்குத்தான் உன் பெயர் பொருந்தும்னு சொல்லாமல் சொல்லிவிட்டார் :)
      கதைப் பஞ்சம் போலவே பெயர் பஞ்சமும் :)

      Delete
  10. ''எந்தப் பிரச்சினை என்றாலும்,நான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியது இல்லையே ''//

    தலைக்கு ஆகும் செலவும் மிச்சம்!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலர் நிறைய செலவு செய்து தலையில் முடியை நட்டுக்கிறாங்களே :)

      Delete
  11. ஐயொ அப்ப இப்ப தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் முடி பிஞ்சுருக்குமே!!ஹிஹிஹி

    அப்பா!!! அட! ரொம்பவே அழகான் சிந்தனையுடனான பதில்!!!!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் பதவிப் போட்டிக்கு நாம ஏன் மண்டையைப் பிச்சிக்கணும் :)

      தாய் பிறந்தாள் என்று சொல்வதில்லையா :)

      Delete