2 February 2017

நல்ல நாட்கள் 'குடி'மகன்களுக்கு கருப்பு தினங்களா :)

 பழமொழி சரிதான்  :)                         
            ''பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சொல்றாங்களே ,அது என்னைக்கு ?''
            ''போலீசுக்கு மாமூல் தராத அன்னைக்குத்தான் !''

     ஒரு நாய் குரைத்தால் .....:)
           ''நான் இங்கே நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்கேன் ,பியூன் எங்கேயா போனான் ?''
           '' வாசல்லே வந்து  குரைச்சுக்கிட்டிருக்கிற நாய்களை விரட்ட போயிருக்கான் ,சார் !''

 மொக்கைப் படமானால் :)
          ''இடைவேளை  நேரத்தில்  கோன் ஐஸ் ,பாப் கார்ன்  எதுவுமே விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''
          ''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''

 நல்ல நாட்கள் 'குடி'மகன்களுக்கு கருப்பு தினங்களா :)
            ''காந்தி ஜெயந்தி ,மகாவீரர் ஜெயந்தி ,வள்ளுவர் தினம் ,வள்ளலார் தினம் என்னைக்கு வருதுன்னு கேட்டா ,நொடியிலே சொல்றீங்களே ...அவங்க கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?''
            ''அட அது இல்லீங்க ,அன்னைக்கு எல்லாம்  டாஸ்மாக் கடை லீவாச்சே, ஞாபகமா முதல் நாளே சரக்கு வாங்கிக்குவேன்,அதான் !''

ஜாக்கி சானைதான் எல்லோருக்கும் தெரியும் :)
             ''உங்க நண்பர் ஜானை ஏன் 'பாக்கி ஜான் 'னு சொல்றீங்க ?''
             ''கடனோ ,கைமாத்தோ  வாங்கினா முழுசா திருப்பித் தர மாட்டாரே !''

26 comments:

  1. முதல் அடியே ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. எல்லா நாட்களும் குடிமகன்களுக்கு கருப்பு தினங்கள்தானே :)

      Delete
  2. Replies
    1. முக்கிய தலைவர்களின் அல்லது மகான்களின் முக்கிய தினங்களில், கறிக்கடையையும் சாராயக் கடையையும் மட்டும் மூடினால் போதும், அவர்களுடைய போதனைகள் தேவையில்லை என்று நினைக்கும் நாடு இந்த நாடு.

      Delete
    2. போதைதான் தேவை ,போதனைகள் தேவையில்லையா ?இதென்ன சோதனை:)

      Delete
  3. இதுதான்... திருடன் போலிஸ் விளையாட்டா...?!

    திறந்த வீட்ல கண்ட கண்ட நாய்கள் உள்ளே புகுந்து விட்டதே...!

    அதுக்கு ஏன் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி முழிக்கிறீங்க...?!

    மது விலக்கை எப்பொழுதும் விலக்கி வைப்பேன்...!

    ஜான் ஏற முழம் வழுக்குதே...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. இவங்க விளையாட்டு ,நமக்கு வினையாயிருக்கே :)

      இது நாய்க்கு புரிந்தால் சரி :)

      நான் சொல்றதை நம்பாட்டி , செல்பி எடுத்துக்கூட பார்த்துக்குங்க :)

      நாடு விளங்கிடும் :)

      இனிமேல் ஏறாதீங்க :)

      Delete
  4. Replies
    1. மரியாதை தெரிந்த குடிமகன்களையும் தானே :)

      Delete
  5. Replies
    1. ரொம்பத்தான் ஸ்டடி :)

      Delete
  6. இன்னொரு திருடனிடமே அகப்பட்டுக் கொள்வான்.......!
    நாய் என்றால் கேவலமா. இலக்கியங்களிலும் நாயைப் பற்றி கூறும்போது தாழ்வாகவே கூறுகிறார்கள்
    நிலைமை தெரிந்து படம்காணச்செல்லவேண்டும்
    அவர் கவலையால் விளையும் ஆற்றல்
    பாவம் ஜாக்கி சாரி பாக்கி ஜான்

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசம் சீருடைதானா :)
      விடுங்க ,நாயின் அருமைத் தெரியாத நாய்ங்க :)
      விமர்சனத்தைக் கூட நம்ப முடியலை :)
      கேட்டால் கவலை மறக்க ஊற்றிக் கொள்கிறேன் என்பார்கள் :)
      வாங்கிய அவரா பாவம் :)

      Delete
  7. Replies
    1. ஒரு நாய் குறைப்பதையுமா :)

      Delete
  8. இதுக்கு என்னோட ஸ்பெஷல் நன்றி :)

    ReplyDelete
  9. நல்ல நாட்களை நினைவில் கொள்வது நல்ல குடிமகனுக்கு அழகு.......

    ReplyDelete
    Replies
    1. இல்லையென்றால் பாட்டில் கிடைக்காமல் தவிக்க நேரிடும் :)

      Delete
  10. Replies
    1. ஜாக்கி சானையும்தானே :)

      Delete
  11. ''போலீசுக்கு மாமூல் தராத அன்னைக்குத்தான் !''//

    இந்த ஜோக்குக்குள்ள உண்மை ஒளிஞ்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உண்மை மட்டுமா ,வேதனையும்தான்:)

      Delete
  12. அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் அனுபவம் உங்களுக்கும் இருக்குமே :)

      Delete
  13. சீரணிக்க முடிந்த சிரிப்புகள் சகோதரா.
    தமிழ் மணம் 12.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு .இதைச் சொல்ல உங்களுக்கு ஒரு வாரம் தேவைப் பட்டிருக்கே :)

      Delete