3 February 2017

இடுப்பளவைப் பார்த்து வேலை தரணுமோ :)

காதால் கேட்பதெல்லாம் உண்மையில்லே :)               
             ''அருவியில் தண்ணி கொட்டுதுன்னு சொன்னாங்க ,இங்கே வந்து பார்த்தா வறண்டு கிடக்கே ?''
               ''நீங்க கேள்விபட்டது 'பால்ஸ் 'நியூஸ் னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க !''
சம நிலை என்பது ,சமதளம்னு நினைச்சிட்டார் போலிருக்கு :)                     
              ''உலகம் சமநிலை பெற வேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்னு சொல்றது  தப்பா ,ஏன் ?''
               ''இப்படி  இருக்கும் போதே சுனாமி ,வெள்ளம்னு வருதே ,சமமா இருந்தா என்னாகும் ?''

பசங்க பேச்சு ,பெருசுங்களுக்கு புரியலே :)     
              ''என்னங்க ,சமையலறை பல்பு  எரியலே ,வேற  வாங்கியாங்க !''
              ''நேற்று ரிலீசான படத்தைப் பார்த்து  'பல்பு 'வாங்கிட்டேன்னு பையன் சொன்னான் ,அவன்கிட்டே கேட்டுப் பார்க்கிறேன் !''

இடுப்பளவைப் பார்த்து வேலை தரணுமோ :)
           ''போலீஸ்காரங்க தொந்தி வைக்காம இருக்க ஐடியாவா ,என்னது ?''
           ''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா  'இன்கிரிமென்ட் கட்'ன்னு சொல்லிட வேண்டியது தான் !''

 முதல் மனைவியா ,இரண்டாவது மனைவியா:) 
          ''மனைவிக்கு எத்தனை  சுழி 'ன 'போடணும்னு கேட்டது தப்பாப் போச்சா ,  ஏன் ?''
           ''முதல் மனைவியா ,இரண்டாவது  மனைவியான்னு கேட்கிறாரே !''
             
நிற வேற்றுமை இதிலுமா :)
நம்ம ஊர் சாமிகள் எல்லாம் கருங்கல்லில்  கருப்பாக ...
வடநாட்டில் சலவைக் கல்லில் வெளுப்பாக ...
காலண்டர் ,சினிமாவில் 'ஈஸ்ட்மன் 'கலர் கலராக ...
உண்மையில்  சாமி எந்த நிறம் ?

14 comments:

  1. முதல் ஜோக்கை மிகவும் ரசித்தேன்.

    மற்றவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படம் அதைவிட அருமைதானே :)

      Delete
  2. அருவியில் தண்ணி கொட்டுமுன்னு சொன்னாங்க...! தண்ணி கொட்டுனதெல்லாம் அந்தக் காலம்...! இதுதான் ‘சில்வர் பால்ஸ்...!’

    சமமா இருந்தா என்னாகுமுன்னுதான்... இருக்க விடுறது இல்லை...!

    நல்ல பல்பு... நீங்கதான்...!

    'இன்கிரிமென்ட்தானே கட்' சம்பளம் உண்டுல்ல... அப்புறம் கிம்பளம் இருக்கில்ல...!

    சுழி யாரை விட்டது...?! சுழியன் ஆனதுதான் மிச்சம்...!

    கல்லைக் கண்டால் நாயைக் காணோம்...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. சில்வர் பால்ஸ் என்றதும் அந்த சோப்பு விளம்பர அழகி கண்ணில் தெரிவது ,எனக்கு மட்டும்தானா :)

      அதான் ,கிரானைட் மலைமுழுங்கிகள் பெருகி விட்டார்களே :)

      பல்புக்கு தானே வீட்டில் பூச்சிகள் வருகின்றன :)

      அதானே ,தினசரி இன்கிரிமென்ட்தானே :)

      இந்த சுழியில் மாட்டிக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை சொற்பமே :)

      ஏன் ,எறிவது என்று வேண்டுதலா :)

      Delete
  3. Replies
    1. நானும் தலைப்பு மூலம் பல்பு கொடுக்கிறேனாம் ,சகோ .ஜோதிஜி சொல்கிறார் :)

      Delete
  4. பால்ஸ் ஹஹஹ்ஹஹ் மற்றும் பல்பு ஹஹாஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. பால்ச்சில் குளித்ததால் வந்த குளிரை விரட்ட ,இந்த பல்பு தேவைதானே :)

      Delete
  5. Replies
    1. ஐந்தருவியில் குளித்த சுகம் தந்தது ,உங்களின் த ம 5 :)

      Delete
  6. இது ஒரு ஃபால்ஸ் ஜோக் ....!
    அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்
    எரியாத பல்ப் தெரியாத பரிபாஷை
    தொந்தியே ஒரு அடையாளம்தானே அதைக் குறைக்கச் சொல்லலாமா
    கல்லிலே கலைவண்ணம் தான் காண வேண்டும் நிற வண்ணம் அல்ல
    நல்லகாலம் மூன்றாவது மனைவிக்கு என்று கேட்கவில்லை. ஆளுக்கு ஒரு சுழி போட்டுக் கொள்ளட்டும்


    ReplyDelete
    Replies
    1. main பால்ஸ் ஜோக்கென்றும் சொல்லலாமே :)
      கிணற்றுத் தவளையா இருப்பாரோ :)
      பரி என்றால் குதிரை ,அதோட பாஷை புரியாதே :)
      இப்படியாகிப் போச்சா :)
      நன்றாக சொன்னீர்கள் ,கடவுளைக் காணலாம் என்கிறார்களே :)
      அதிலும் சண்டை வருமே ,ரெண்டு சுழி ஒற்றைச் சுழி யார் என்பதில் :)

      Delete
  7. Replies
    1. நிற வேற்றுமை இதிலும் இருப்பது உண்மைதானே :)

      Delete