18 February 2017

கபாலின்னா உங்களுக்கு என்ன தோணுது :)

ஜெயிக்கப் போறது  எது :)
            ''நம்ம  MLA க்களுக்கு  மனசாட்சி  இருக்கா இல்லையான்னு  இன்னிக்கு  தெரிந்து விடுமா ,எப்படி ?''
             ''சட்ட மன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு  நடக்குதே !''

கபாலின்னா , என்ன இமேஜ் தோணுது :)
         ''ஜோசியரே ,என் பையனுக்கு  ஜாதகப்படி வருகிற பெயரை, நீங்களே வைக்க வேண்டாம்னு ஏன் சொல்றீங்க ?''
         ''கபாலின்னு  வருதே !''
நல்ல வேளை ஜட்டி சைஸை கேட்கலே :)
           ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்னு வந்து என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
          ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே !''

ரிவால்விங் சேரில் இருந்தால் ரிவால்விங் சேர்மனா :)
         ''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
          ''சேர்மன் சேர்லே இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே  !''

நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை:)
           ''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாமே  !'''
          '' அப்படின்னா ,இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக்கிட்டு இருந்ததை ஒத்துக்கிறாங்களா  ?''

மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு :)
ஒருவர் கையிலே உள்ள ரேகையைப்  பார்த்து ..
ஒரே ஒரு யானையைத் தடவிய குருடர்கள் போல் ...
 நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 
ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்
கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !

22 comments:

  1. கூவம் ஊர்தான் நாரிப்போச்சே...! மானம்... மனம்... இதெல்லாம் நம்ம MLA க்களுக்கு மனசாட்சி இருக்கா...? ஒரு MLA மனசாட்சி உறுத்தலால் தப்பித்து வந்தானாடி...சொந்த ஊர் போய்ச் சேர்ந்தானடி...! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...!

    அந்த ‘கபாலி’ன்னு நெனச்சியா...?!

    உப்புச் சப்பில்லாமல் இருக்கு... சொரணை இல்லையே...!

    எல்லாத்தையும் வாட்ச் பண்ணுவோமில்ல...!

    ஒ பணம்... எ பணம்...! எ பணம்... எ பணம்...!

    ஜோதிடருக்கு வாழ்க்கை ‘ஜோதி’யா... நல்ல பிரகாசமா இருக்கு... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. கூவத்தூர் ரிசார்ட்டையும் இழுத்து மூடி விட்டார்களாமே :)

      கேடியை சொல்றீங்களா :)

      அதான் இந்த கேள்வி கேட்கிறானோ :)

      அப்பத்தானே மாமூல் கிடைக்கும் :)

      கண்ணுலேயே காட்ட மாட்டேன் என்கிறார்களே :)

      சில ஜோதிடர்களுக்கு தங்கள் தரித்திரத்தை மாற்றிக்கக் கூட தெரியவில்லையே :)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தடவை சொன்னா... இரண்டு தடவை சொன்னதா அர்த்தங்கிறதே...!

      Delete
    2. இரண்டு முறை படித்தாலும் உங்கள் கருத்துக்கள் திகட்ட வில்லையே :)

      Delete
  3. Replies
    1. சேர்மன் பதவியே ரிவால்விங் பதவி போலத்தானே :)

      Delete
  4. Replies
    1. நம்ம பணம் அவங்க பையில் என்பது ரைட்டுதானா:)

      Delete
  5. Replies
    1. மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு என்பது சரிதானே :)

      Delete
  6. உப்பிட்டவரை உள் அளவும் நினை.
    ''சேர்மன் சேர்லே இருந்தார் நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்க
    நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு விதம்!
    ஒரு நேரத்தில் எல்லோருக்கும் ஒரே நேரம் காட்டும்
    கடிகாரம் காட்டுவதே நல்ல நேரம் !
    மிக நன்று சகோதரா ரசித்தேன்.மிக்க நன்றி.
    தமிழ் மணம் 7

    ReplyDelete
    Replies
    1. நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு விதமாய் சொன்னாலும் மக்கள் திருந்துவதாய் தெரியவில்லை :)

      Delete
  7. மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு?
    ஏனோ, இதனை உணர மறக்கிறாங்களே!

    ReplyDelete
    Replies
    1. என் வருத்தமும் அதுதான் :)

      Delete
  8. Replies
    1. நம்ம MLA க்களின் மனசாட்சி எப்படி :)

      Delete
  9. 1. இன்றைக்கு நடந்த கூத்துதான் எல்லோரும் அறிந்தாயிற்றே..

    2 உப்பிட்டவரை ரசித்தோம்...

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. இந்த கைப்'பாவைக்' கூத்து எத்தனை நாளோ :)

      உள்ளளவை நினைக்கவில்லையே :)

      Delete
  10. நல்ல பதிவு. ரசித்தேன். . https://www.sigaram.co/

    ReplyDelete
    Replies
    1. உப்பிட்டவரின் உள் 'அளவை 'நினைப்பது தப்புதானே :)

      Delete