17 February 2017

இந்திய சாப்ட்வேர் மூளைக்கு நல்ல கிராக்கி :)

 எதிர்கட்சி தீவிரத் தொண்டனின் கேள்வி :)   
              '' யுவர் ஹானர் , முதல் எதிரி காலமாகி விட்டதால்  தண்டனையில் இருந்து விடுவிக்கப் படுகிறார் என்று தீர்ப்பு சொல்லியிருக்கீங்க ....
இன்னும் அவரோட ஆன்மா உயிரோட இருக்கிறதா சொல்றாங்களே ,அதுக்கு தண்டனைக் கொடுக்கலாமே !''    

கிட்னி பெயிலிராகி இருந்தால் :)               
            ''எல்லோரும் அவரோட 'ஆஸ்துமா சாந்தி அடையட்டும் 'னு இரங்கல் தெரிவிக்கிறாங்களே ,ஏன் ? ''
            ''ஆஸ்துமா நோயால் காலமான அவருக்கு 'ஆன்மா 'நம்பிக்கை இல்லையாமே !'' 

பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்:)
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு  ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத் பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல் நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார்  ...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள் ...
குடிவெறியில் ஆட்டம் போடும் கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம் பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்ச்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ் மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும் பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால் சரி !
ரொம்ப முக்கியம் நடிகையோட வயசு :)
         ''தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறா பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்களே ,ஏன் லாயர் ?''
        '' என் கனவுக் கன்னி நடிகையோட  வயசைத் தெரிஞ்சுக்க முடியுமானு ஒருத்தர் கேட்கிறாரே !''

இந்திய சாப்ட்வேர் மூளைக்கு நல்ல கிராக்கி :)
மட்டன்  ஸ்டாலில் ...
ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
அமெரிக்காவில் ...
இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக கிடைப்பதால் !

22 comments:

  1. Replies
    1. லாயர் சொன்னது சரிதானே :)

      Delete
  2. கல்லறையில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு... மூன்று முறை அடிச்சும் பார்த்தாச்சு... எழுந்திருக்கிற மாதிரி தெரியல.... “நல்ல வேளை நா செத்தேன்...” யாரு ஆன்மாவா பேசுறது...?!

    ‘எல்லாத் தப்புக்கும் காரணம் நீ தான்... எ ஆத்மாகூட மன்னிக்காது...!’ தவறுக்கும் தவறான தவறைத் செய்துவிட்டுப் தனிப்பட்டுப் போன பொண்னே... இல்லை பொம்பளையே...! போதுமடி ஆத்தா... ஒ சகவாசம்...!

    சட்டம் என் கையில்... சாரி... லத்தி என் கையில்... ‘எங்கே குடி... மகனே பாத்திக்கிறேன்...!’

    கனவுலேயே கேட்க வேண்டியதுதானே...?!

    ‘அய்யா... அம்மா... தாயே...!’

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆன்மாவையும் கொன்றாச்சா :)

      என்னாலே நீ கெட்டே, உன்னாலே நான் கெட்டேன்:)

      லத்திக்கு மரியாதை :)

      சொன்னாங்களே ,மறந்து போச்சு :)

      சீ சீ வேற நாட்டைப் பாரு :)

      Delete
  3. Replies
    1. ஆன்மாவை ரசிக்க முடியுதா :)

      Delete
  4. Replies
    1. இந்திய சாப்ட்வேர் மூளைக்கு நல்ல கிராக்கி இருக்குதானே ஜி :)

      Delete
  5. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பெரியார் பாசறையில் இருந்து வந்தவர்கள் செய்யும் கூத்துக்களை ரசிக்க முடியுதா :)

      Delete
  6. Replies
    1. முதல் இரண்டு ஜோக்ஸையும் கன்னாபின்னா என்று ரசித்தேன்.

      Delete
    2. 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் ஞாபகம் இருக்கா ஜி :)

      Delete
    3. ஸ்ரீ ராம்ஜி ,நாகேந்திர பாரதிக்கு நீங்க மறு மொழி கூறியிருப்பதில் இருந்தே தெரிகிறது ,நீங்க கன்னாபின்னா என்று ரசித்து இருப்பது :)

      Delete
  7. முதல் எதிரி..? குற்றவாளி ஆன்மா இல்லாமல் ஆண்டதால்தான் இறந்தபின்னும் அலைக்கழிக்கப்படுகிறார்
    அவரது அங்கங்கள் சாந்தி அடையட்டும்
    காவல் துறை பார்த்துக் கொண்டிருக்கவா
    தெரிந்து என்ன செய்ய. கூட்டவோ குறைக்கவோ முடியுமா
    நம்மைப் பற்றி நாமே உயர்வாக எண்ணுகிறோமோ

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் அய்யா :)
      இருக்கும் போதே அடையவில்லையே :)
      கடமையை செய்யாதவர்கள் அப்படித்தான் இருக்கணும் :)
      அதானே ,இதனால் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் வரப் போவுதா :)
      சூப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருப்பது தப்பாச்சே :)

      Delete
  8. அனைத்தும் அருமை !!!

    ReplyDelete
    Replies
    1. பிங் கேங் படமும்தானே :)

      Delete
  9. Replies
    1. வக்கீல் நீங்களே சொல்லிட்டீங்க ,அப்பிலே இல்லை :)

      Delete
  10. முதல் இரண்டும் செம!!!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. இரண்டிலுமே ஆன்மா புகுந்து விட்டது :)

      Delete