9 February 2017

இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது :)

 அறுப்பதற்கு அஞ்சாத டாக்டர்  :)   
         ''பரவாயில்லையே ,  இது வரை அந்த டாக்டரால் ஒரு உயிரும் போனதில்லையா ?''
         ''அட நீங்க ஒண்ணு ,அவர் போஸ்ட்மார்ட்டம் மட்டும்தானே செய்றார் !''

இவரோட கையை எடுக்க வேண்டி வரலாம் :)
           ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா ,சிலர் வரவு வரும்னும் ,சிலர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்க !''
           ''நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
             'வரவு வந்த பிறகு டாக்டரைப் பார்க்கலாம்னு இருக்கேன் !''
                                                                
இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது :)
           ''உன்னோடகேஸ் முடியிறவரைக்கும் ,தினசரி காலையிலே போலீஸ்  ஸ்டேசனில்  கையெழுத்து போடணும் ,சரியா ?''
          ''முடியாது ...ராத்திரி என் தொழிலைப் பார்த்துட்டு  வந்து  நான் தூங்க வேண்டாமா ?சாயந்தரம்தான் வர முடியும் ,சரியா?!''

இரண்டாவது லட்டு தின்ன யாருக்குதான் ஆசை வராது :)
           ''கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தின் பார்ட் 2வருதா , என்ன டைட்டில் ?''
           ''2வது லட்டு தின்ன ஆசையா?'' 

நோய்கள் தானாய் வருவதில்லை :)
 TV ல் ADS இடைவேளை வரட்டுமென்று 
அடக்கிக் கொண்டே இருந்தால் ...
கல்லடைப்பு  கேட்காமலே வரும் !

20 comments:

  1. அந்த போலீஸ் ஜோக் கொஞ்சம் பரவாயில்லை!
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. மற்றதெல்லாம் போர் என்று சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி :)

      Delete
  2. உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு இன்னும் படம் எடுக்கலை போல!

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உப்பு சப்பில்லாத தலைப்பாகி விடும் என்று வைக்கவில்லை போலிருக்கு :)

      Delete
  3. Replies
    1. வரவு எட்டணா செலவு பத்தணா ஆகலாம் என்பதையும் தானே ஜி :)

      Delete
  4. போஸ்ட் மார்ட்டம் டாக்டர் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ரிஸ்க் இல்லாத வேலைதானே :)

      Delete
  5. ஐயையோ 2 வது லட்டா! ஒன்றாவது லட்டே..

    போஸ்ட் மார்ட்டம் ஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. முதல் லட்டே டிக்கட்டி விட்டதா :)

      தைரியமாய் அறுக்கலாம்தானே :)

      Delete
  6. ஆயிரம் பேரைக் கொன்றவனே அரை டாக்டர் செத்தவனை அறுப்பவனும் டாக்டரா
    அரிப்பதற்கு கை வேண்டுமே வரவுக்கும் செலவுக்கும் கூடத்தான்
    முடியாத கேஸ் .தொடரும் உறவு
    திகட்டும்வரை லட்டு தின்றால்
    கல்லடைப்பு...அப்படீன்னா

    ReplyDelete
    Replies
    1. அதானே செத்த பாம்பை கிழவி அடிப்பாளே :)

      சில்லறை இல்லையென்றால் கை அரிக்கத்தான் செய்யும் :)

      இரண்டாவது தேவைபடாதுதான் :)

      பிளாடர் பிளாக் கேள்விப்பட்டதில்லையா ?அது சரி நமக்கு தெரிந்ததெல்லாம் நம்ம blog தானே :)

      Delete
  7. Replies
    1. கல்லடைப்பு வந்தால் கஷ்டம்தானே :)

      Delete
  8. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கொள்ளைக் காரன் இவ்வளவு துணிச்சலாக கேட்பது நல்லாவாயிருக்கு :)

      Delete
  9. போலி டாக்டருக்கு... வெட்டி வேலை கொடுக்கலாமுன்னுதான்...!

    வந்ததை வரவில் வைப்போம்... போனதை செலவில் வைப்போம்...!

    சாயும் காலம்... கொஞ்ச நேரம் கொடுக்க வேண்டியதுதானே முறை...!

    கண்ணா...ஆசை 2.

    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா...?!

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. கிட்னியைத் திருடிவிடப் போகிறார் ,ஜாக்கிரதை :)

      வரவேயில்லையே எப்படி செலவு பண்றதாம் :)

      மாமூலா செய்றதுதானே அது :)

      டூவுக்கு ஆசைப் படாதே :)

      அடைப்புக் கல் மாதிரி எந்த கல்லும் வலி தராது :)

      Delete
  10. Replies
    1. இந்த எட்டு லட்டு இரண்டுக்கா :)

      Delete