4 July 2016

பெண்களுக்கு இது ஒண்ணுதான் பாக்கி :)

              ''அவளுக்கு பணக்காரத் திமிர் அதிகம்னு ஏன் சொல்றே ?''
             ''தொண்டை அணி விழான்னு பத்திரிக்கை வைச்சிட்டுப் போறாளே !''
தொப்பை , பெண்களுக்கு  அழகா :)
           ''நான் மப்டி போலீஸ்னு தெரியட்டும்னு ,போலீஸ்  கட்டிங் போட்டிருக்கேன் ..யாரும் என்னைப் பார்த்து பயப்படுற மாதிரி தெரியலையே !''
          ''இப்படி டிரிம்மா வயிறு இருந்தா யாராவது போலீஸ்னு நம்புவாங்களா ?''
முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி !
          ''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
            ''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது  அபசகுனமாபடுதாம் பையனுக்கு !''

இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் !
தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்ததாம் இந்தியா !

20 comments:

  1. தண்ணீர் கதை - பலரின்
    கண்ணீர் கதை ஆச்சே!

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் என்னைக்கு இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததோ,அன்னையில் இருந்து குடிக்கிற தண்ணீர் கூட விலைக் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது :)

      Delete
  2. Replies
    1. படங்களையும்தானே :)

      Delete
  3. நா காப்பு இதுதானோ...?!

    இடையா? இது இடையா? இது இல்லாதது போல் இருக்குது...!

    மாப்பிள்ளை தாலி கட்ட யோசிச்சதுனால நல்ல நேரம் முடியறதுக்குள்ள அய்யரே தாலியக் கட்டிட்டாராம்...!

    ஆண்களின் பூர்விகம் செவ் வாய்... செவ் வாயில் தண்ணீர் இருந்தால் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்ய வேண்டியதுதானே...!

    த.ம. 4



    ReplyDelete
    Replies
    1. இந்த காப்பால் பேச்சு வராதுன்னு தெரிந்தால் பல கணவன்மார்கள் வாங்கக்கூடும் :)
      இருக்கு ஆனா இல்லையா :)
      தாலியை எடுத்து கொடுக்கச் சொன்னா ,பெண்ணின் கழுத்தில் கட்டுற தலைவர்கள் இருக்கும் நாட்டில் ,நீங்க சொல்வதும் நடக்கும் :)
      முயற்சி வெறும் வாய் ஆகாமல் போனால் சரிதான் :)

      Delete
  4. Replies
    1. டெல்லியில் இந்த ஃபேஷன் வந்து விட்டதா :)

      Delete
  5. பணக்கார பெண்களுக்கு திமிர் ஜாஸ்திதான்....!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. பணக்கார ஆண்களுக்கு .....?:)

      Delete
    2. பணக்கார ஆண்களுக்கு..கொழுப்பு சாஸ்தி...ஜி

      Delete
    3. திமிர் ,கொழுப்பு இல்லைன்னா பணம் இருந்து என்ன பயன் இருக்க முடியும் :)

      Delete
  6. 01. இப்படியும் கூத்து நட்கிறதா ? நல்லவேளை எனக்கு பத்திரிக்கை வரலை
    02. போலீஸ்னா தொப்பை இருக்கணும் இதை சட்டமாக்கணும்.
    03. நியாயம்தானே... ?
    04. இது மானக்கேடுதான்

    ReplyDelete
    Replies
    1. எங்கே எங்கே வளையத்தை மாட்டுவது என்று .....:)
      கண்ணுக்கு நேரா தெரியுது ,ஒரு அவசரச் சட்டம் போடலாமே :)
      என்ன நியாயம் ,தாலி கட்டும் நேரத்தி இருந்து நல்ல நேரம் முடியும் என்பதா :)
      செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது மானக் கேடுதான் :)

      Delete
  7. //பெண்களுக்கு இது ஒண்ணுதான் பாக்கி :)//
    என்னவோ தெரியல. படத்தைப் பார்த்த முதல் நொடியில் ரொம்பவே பயந்துட்டேன் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் வாயைத் திறந்தான் ,அதில் உலகமே தெரிந்ததாம் !இந்த கன்னியின் தொண்டை வளையத்தைப் பார்த்து பயப்படலாமா :)

      Delete
  8. இப்படியும் நகை உண்டா.?
    தொப்பை மஃப்டி எதுவும் புரியலை
    மாப்பிள்ளை நினைப்பது சரிதானே
    இந்தியா பணக்கார நாடுதான் இந்தியர்கள்தான் ஏழைகள் என்று முன்னாள் அமைச்சர் விகெ கிருஷ்ண மேனோன் கூறியதாக நினைவு.

    ReplyDelete
    Replies
    1. நகைக்கடை பஜார்லே விசாரித்து பாருங்களேன் :)
      போலீஸ் மப்டியில் இருந்தாலும் தொப்பை இருந்தால் நம்பலாம் தானே :)
      இன்றுடன் நல்ல நேரம் முடியுதுன்னு நினைப்பதுதான் தவறு :)
      vkk கூறியிருப்பது ஓகே தானே :)

      Delete
  9. இங்கே இருக்கிற தண்ணீய விட்டுட்டு... செவ்வாய்க்கு போய் வெறும் வாயோடுதான்....?

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதைப் பிடிக்க நினைச்சா,அப்படித்தானே ஆகும் :)

      Delete