8 July 2016

சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா :)

 பிரமோஷன் எப்படி வந்ததுன்னு  தெரியுதா :)          
           ''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை  பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''
             ''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''

இது ஒரு குற்றமாய்யா :)         
           ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
           ''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''  

இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி !
            ''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
            '' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா   ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''

ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
       ''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
       ''தண்ணியா தான் !''

கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

22 comments:

  1. Replies
    1. பிரமோஷன் வந்த ரூட் தெரியுதா :)

      Delete
  2. ஹா.... ஹா... ஹா... நல்ல பரிசு!

    அடப்பாவமே..

    தேசபக்தி!

    கண்டுபிடிப்பு!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. பரிசு கொடுக்கவும் ரசனை இருக்கணும் :)

      தீர விசாரிக்க வேண்டாமா :)

      யாருக்கு வரும் :)

      அரிய பெரிய :)

      A கிளாஸ் என்றது ,ஞாபகம் வருதா :)

      Delete
  3. பரட்டை பத்த வச்சிட்டியே... இது எப்படி இருக்கு...?!

    மயிரளவில் தப்பித்து விட்டாய்...! அப்புறமா வந்து பேசிக்கிறேன்... அவசியம் வருவனாக்கும்...!

    வேடிக்கையாப் பேசுறீங்க...!

    ஒங்க காட்டுல மழைன்னு சொல்லுங்க...!

    கண்டவர்கள் மீண்டு வந்து சொன்னதாகத் தெரியவில்லை...!

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. பரிசு வாங்கிறவருக்கு புரிந்தால் சரி :)

      வாங்க வாங்க மொழு மொழுன்னு மொட்டை போட்டு விடுறேன் :)

      இப்படி பேசுறதே அவர் வாடிக்கை :)

      இதில் நனைய யாருக்குத்தான் பிடிக்காது :)

      ஆனாலும் நம்புறாங்களே :)

      Delete
  4. Replies
    1. இப்போ வெள்ளையை கருப்பாக்குறது சாதாரணம் தானே :)

      Delete
  5. கடவுளையும் புரிந்து கொள்ள இயலாது, கன்னியரையும் புரிந்து கொள்ள இயலாது என்பதை நகைச்சுவையாய் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. இருக்கிற கன்னியை புரிந்து கொள்ள முடியவில்லை ,இல்லாத தெய்வத்தை ....:)

      Delete
  6. 01. ஊமைக்குத்து
    02. குருட்டுக் கணக்கு
    03. நாட்டுப்பற்று
    04. அறிவுக்கொழுந்து
    05. நல்ல நினைவுதான்

    ReplyDelete
    Replies
    1. என்றாலும் உண்மைக் குத்து :)
      விடை தப்பாதான் வரும் :)
      இப்படியுமா :)
      கொழுந்து நல்லதுதானே செய்யும் :)
      பொருந்துதா இல்லையா :)

      Delete
  7. //''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''//

    பொண்ணு ரொம்பத்தான் அழகு!

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை கறுப்பானால் அழகு கூடத்தானே செய்யும் :)

      Delete
  8. //''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா பிடிக்காதுன்னு சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''//

    அது பெண்கள் விளையாடுற மேட்சா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே குழப்பத்தை உண்டாக்கி விடுவீங்க போலிருக்கு !பாவம் ,அவர் கால் பந்தாய் உதைப் படப் போகிறார் :)

      Delete
  9. வத்தி வெச்சால் ப்ரொமோஷனா
    அப்படியானால் பலரையும் அரெஸ்ட் செய்ய வேண்டுமே.
    சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் காணமுடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் அப்படித்தானே வாங்குறாங்க :)
      வெள்ளையப்பனைக் காட்டி தப்பிக்கச் சொல்லிடுவோம்:)
      காண முடியாது ,நுகர முடியும் :)

      Delete
  10. வாசம் இருக்கிறதலதான் கண் சிமிட்டாமல் பெரிசு முதல் சிறுசு வரை சைட் அடிக்குதுக...

    ReplyDelete
    Replies
    1. வாசம் மூக்கில் இருந்து கண்ணுக்கு தகவல் கொடுக்குமோ :)

      Delete
  11. சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு - அதை
    கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர்
    என்பதா...?

    ReplyDelete
    Replies
    1. வேற எப்படி சொல்வது ,சொல்லுங்க :)

      Delete