12 August 2017

காதலுக்குப் பெற்றோர்களே தடை போட்டால் :)

                ''காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது ,ஜட்டி போட்டுக்கிற மாதிரி ஆகிப் போச்சுன்னு ஏன் சொல்றே ?''
                ''ஒத்த கால்லே நின்னாவது காரியத்தை சாதிச்சுக்க வேண்டியிருக்கே !''

திறமைசாலிகளான  கொள்ளையர்கள் :)            
             ''நீதிபதி வீட்டிலேயே இருநூறு பவுன் கொள்ளையாமே ?''
            ''ஓடுற ரயிலிலேயே  கொள்ளை அடிக்கிறாங்க ,இது  என்ன அதிசயம் ?''

இந்த பயபிள்ள, பாஸாவானா :)            
          ''பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு  ஏன் சார் சொல்றீங்க ?''
          ''மனசுக்குள்ள  ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''
கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் :)                 
      ''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
     ''ஆமாம், 'பிறர்க்கு வாழ் 'என்பதை  மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''

கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா :)
         ''என்னங்க , அரசாங்க வேலை  கிடைச்சிடுச்சு , நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !
         ''ரொம்ப சந்தோசம் ..... நீ  'சனி'ங்கிறதை இப்பவாவது ஒத்துக்கிட்டியே !''

இந்த இசையை ரசிக்க முடியலே :)
   விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
   இடை இடையே சங்கொலி சத்தமும் ...
  'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469147

28 comments:

  1. Replies
    1. 'டய்ங் டய்ங்' சத்தம் வெறுப்பை தருமா இல்லையா ஜி :)

      Delete
  2. Replies
    1. 'பிறர்க்கு வாழ் ' என்பதால் மாணவர்கள் விட்டுக் கொடுப்பதில் தவறில்லைதானே :)

      Delete
  3. Replies
    1. புன்னகைக்கு ஒரு முகமே போதுமே ,மூன்று முகம் எதுக்கு ஜி :)

      Delete
  4. '//'பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு ஏன் சார் சொல்றீங்க ?''
    ''மனசுக்குள்ள ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''//

    படிப்பை காதலித்தால் பக்கம் பக்கமாய் எழுதலாம்.
    அருமை.

    கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் :)
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. படித்தால் மட்டும் போதுமா ,காதலிக்கவும் வேண்டுமா :)

      அந்த மாணவர்களில் நானும் ஒருவன் :)

      Delete
  5. Replies
    1. பொன் விழா கண்ட பள்ளியை, உங்களுக்கும் தெரியுமே ஜி :)

      Delete
  6. பரீட்சைத்தாள் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. மார்க்குதான் தேறுமான்னு தெரியலே :)

      Delete
  7. Replies
    1. நாமளும் டீல் போட்டுக்கலாமே ஜி :)

      Delete
  8. சனி ஞாயிறு அருமை

    ReplyDelete
    Replies
    1. சேர்ந்து வந்தாலே சந்தோசம்தானே :)

      Delete
  9. காதலிக்காதவர் ஜட்டி போடுவதில்லையா
    நீதிபதியிடமும் பணமிருக்கிறதே கொள்ளை கொடுக்க
    பரீட்சையில் ஸ்வீட் நதிங்ஸ் எழுத முடியுமா
    படிக்கா விட்டால் பிறர்க்கு வாழ்வதாக அர்த்தமா
    வார்த்தைகளை சரியாகப் பிரிக்காவிட்டால் அர்த்தம் அனர்த்தமாகும்
    இங்கு கர்நாடகாவில் சங்கும் மணியும் சுநாதமாகக் கருதப்படுகிறது எல்லா பூஜைகளிலும் இசைக்கப் படும்

    ReplyDelete
    Replies
    1. ஒத்தக் கால்லே நின்னு ஜெயிக்க முடியாதுன்னு காதலிக்காமல் இருக்கலாம் :)
      இவர் கணக்கு பார்க்கத் தெரிந்த நீதிபதி ,இவரிடம் பணம் அதிகமில்லை :)
      எழுதலாம் ,மார்க்குதான் கிடைக்காது :)
      படிக்காமல் விட்டதே ,மாரவர்கள் வாழட்டும் என்பதற்குத்தானே:)
      அனர்த்தமே இவருக்கு போட்டுத் தாக்க வசதியா போச்சு :)
      நமக்கு சாவுமணி, அவர்களுக்கு சுநாதமா :)

      Delete
  10. காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிறது... ஜட்டி போடாத மாதிரியோ...? அப்ப காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்... நடராஜனே...!

    கொள்ளை அடித்ததை மீண்டும் மீண்டும் தீண்டுகிறார்கள்...! அது தப்பில்லாதப்ப இது தப்பாப்பா...? அந்த குமாரசாமி கடவுளுக்கே வெளிச்சம்...! குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்...!

    அதான் ஒன்னுமே புரியலையா...?! மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல...!

    நாம அதை எடுத்துக்கிட்டா அவுங்களுக்கு அது கிடைக்காம போய்விடுமல்லவா...?!

    சனியன் பிடிச்சிடுச்சுன்னு சொல்லுங்க...!

    சங்கு ஊதியாச்சா...?! சங்கே முழகு...! இப்படி அபஸ்வரமான மணியோசை கேட்டு எழுந்து வர்றது பாடியான்னு பாருங்க...!
    த.ம. +1



    ReplyDelete
    Replies
    1. இதுக்கு ஒற்றைக்காலில் ஆடும் நடராஜன் என்ன செய்யணும் :)

      இதை மறுகொள்ளைன்னா சொல்றீங்க :)

      எதை தாண்டி புனிதமானது :)

      படிப்பில்தான் கோட்டை விட்டீங்க ,வேலையிலாவது சேரப் பாருங்க :)

      அது சுபயோக சுப தினத்திலேயே பிடிச்சிடுச்சாமே :)

      கண்ணு திறந்தாலும் காதில் விழும் சத்தம் கேட்டு மீண்டும் படுத்து விடும் பாடி :)

      Delete
  11. Replies
    1. ஒத்தக் காலில் நின்று சாதிப்பதுமா :)

      Delete
  12. பரிட்சைத்தாள் நன்று த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. அதில் எழுதப் படும் பதில் சரியாக இருக்கணுமே :)

      Delete
  13. ஒற்றைக்காலில் நின்றால் சாதிக்க முடியமா...????

    ReplyDelete
    Replies
    1. ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு என்கிறார்களே :)

      Delete
  14. அனைத்தும் ரசித்தேன்!

    த.ம. 16-ஆம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. 12ம் தேதிய பதிவுக்கு ,16ம் தேதி வந்து 16ம் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete