17 August 2017

நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா :)

 வேலைக்காரி என்றாலே  பெயர் அஞ்சலைதானா :)    
               ''அஞ்சலை ,என் வீட்டுக்காரர் ஆபீஸ் விஷயமா வெளியூர் போறார் ,தனியா படுக்க பயம்மா இருக்கு ,ராத்திரி வர முடியுமா ?'' 
              ''நீங்க பிறந்த வீட்டுக்கு போனால் ,அய்யாவும் இதேதான்  சொல்றார் ..புருஷன் பெண்டாட்டி இப்படியா பயந்தாங்கொள்ளியா  இருப்பீங்க ?''           

கூமுட்டைக்குத்  தெரியுமா கவிஞனோட வலி:)   
           ''ஜன்னல் வழியா விடிஞ்சிருச்சான்னு ஏன் அடிக்கடி  பார்க்கிறீங்க ?''

          ''இரவிலே வாங்கினோம் சுதந்திரம்,விடியவே இல்லைன்னு நேற்று டி வி யில் ஒருத்தர் சொன்னாரே !''

ஸ்ரீ தேவியை தெரியும் ,லேவாதேவி :)             
             ''பெண் சகவாசமே வேண்டாம்னு சொல்ற உங்க பையன் ,பரம்பரைத் தொழிலும்  வேண்டாம்னு சொல்றானா ,என்ன தொழில் ?''
             ''லேவா 'தேவி ' தொழில்தான் !''

 நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா  :)
           ''நம்ம டிவி நேயர் ஒருவர் ,நியூஸ் ரீடரை உடனே  மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா ,ஏன் ?''
          '' விஷுவலா எதுவும் இல்லைன்னாலும் ,நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''
வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு :)
            ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
            ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி :)
  அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
  எழுதியிருப்பதைப் போல ...
  டாஸ்மாக் கடைகளில் ....
  ஊக்க'மது 'கைவிடேல் என 
  எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

22 comments:

  1. டாக்டர் விஞ்ஞானிதான்...

    ReplyDelete
    Replies
    1. இதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானி ஆகணுமா :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன். முதல் ஜோக் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வேலைக்காரிக்கு அஞ்சலை என்ற பெயரும் சூப்பர்தானா :)

      Delete
  3. நாங்க எப்பவும் பேச்சு மாறமாட்டோம்...! ஒரே பேச்சுதான்...!

    நீங்க இருக்கிறப்ப விடிய விட்டிடுவீங்களா...?! எங்களுக்குன்னு வந்து வாச்சீங்களே...! அடச்சீ...!

    நீங்க பிறந்த ஊர் வாங்கலா...? நீ கொடுப்பியாம்... நான் வாங்குவேனாம்...! சேட்டுஜி சரியா...?! ‘தேவி’ தரிசனம் பார்க்கனும்...!

    ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்... கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்...!’ ரொம்பத்தான் கதைக்காதிங்க...!

    ‘புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?’ பாடலைச் சோதித்துப் பார்த்தேன்...!

    அரசுக்கு ஊக்கம் அதுதானாம்... ‘ஊக்கமது கைவிடேல்’ அரசின் கொள்ளை முடிவில் யாரும் தலையிட முடியாது...!

    த.ம. +1





    ReplyDelete
    Replies
    1. ஜோடி மாறிடாம பாரத்துக்குங்க :)விடிய விடிய என்னத்தை சொல்லி தருவாரோ :)
      வாங்கல்னா ஆந்திர சேட்டு ஜியோ :)
      காதுலே எதுவும் ஏறலே ,கண்ணும் இமைக்கலே :)
      சோதனை இல்லை இது ,வேதனை :)
      நீதி மன்றமும் ஒத்து ஊதுதே :)

      Delete
  4. Replies
    1. நியூஸ் ரீடரையும் தானே :)

      Delete
  5. முதல் ஜோக் சூப்பர்!!

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. உண்மையை கூற அஞ்சலையோ :)

      Delete
  6. ''நீங்க பிறந்த வீட்டுக்கு போனால் ,அய்யாவும் இதேதான் சொல்றார் ..புருஷன் பெண்டாட்டி இப்படியா பயந்தாங்கொள்ளியா இருப்பீங்க ?''//

    கலக்கல் ஜோக்! அபார கற்பனை!! ஜோக்குகளின் சுரங்கம் உங்கள் மூளை!!!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எத்தனை நாள் இந்த சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்க முடியுமோ :)

      Delete
  7. ஆத்திச்சூடிதான் செம

    ReplyDelete
    Replies
    1. ஆத்திச் சூடிக்கு நீங்க அடிக் ஆன மாதிரி இருக்கே :\)

      Delete
  8. முதல் ஜோக்கு நன்று

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பேரை சமாளிக்க முடியலே போலிருக்கே :)

      Delete
  9. திருடனுக்கு கபாலி வேலைக்காரிக்கு அஞ்சலை சரிதானே புத்திசாலி அஞ்சலை
    இதுமாதிரிதான் பலரும் சொல்கிறார்கள் எழுது கிறார்கள்
    அவனுக்கு லெவா தேவி வேண்டாம் ஸ்ரீ தேவிதான் வேண்டுமாம்
    செய்திகள் வாசிப்பதுபிடிக்கவில்லை என்றாலும் பார்க்கவாவது பிடிக்க வேண்டாமா
    கல்யாணம் செய்து கொடுக்க தாமதித்ததால் இதுவோ

    ReplyDelete
    Replies
    1. ஏட்டு ஏகாம்பரத்தை மறந்தாச்சா :)
      அதுவும் உண்மைதானே :)
      டூ லேட் ஆச்சே :)
      சேலையை பெண்களும் பார்க்கிறார்களே :)
      இந்த பிஞ்சும் பழுக்கும் என்று தெரியாம போச்சே :)

      Delete
  10. எல்லா தொலைக்காட்சி காரனும் அழகியைத்தான் நியமிச்சு இருக்காங்கே......பார்த்ததில் தெரிந்து கொண்டது...

    ReplyDelete
    Replies
    1. இப்போ நடந்து வேறு காட்டுகிறார்கள் ,இல்லை இல்லை ,வாசிக்கிறார்கள் :)

      Delete
  11. குடிமகன்களுக்கு பிடித்த ஆத்திச்சூடி யை இரசித்தேன். அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இப்படி அர்த்தப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரிந்து இருந்தால், அவ்வைப் பாட்டி இந்த வரியையை எழுதி இருக்க மாட்டார் :)

      Delete