24 December 2013

சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ?

உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...

டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும்  பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
அந்த  பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
சோனியா காந்தி பெயரில் பிறப்புச்  சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருக்கும் தகவல் இது !



17 comments:

  1. வணக்கம்
    தலைவா....

    எல்லாம் பழைய பல்லவிதான்.. பாடுவர்கள்.....சூப்பர்.வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் சொல்கிறார்கள் ...இதுவும் முன்பு வழங்கப்பட்ட பொய் சான்றிதழ் என்று !
      நன்றி

      Delete
  2. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தவறான தகவல்களை வேட்புமனு தாக்கல் செய்தபோது தெரிவித்தார் என்று கூறி அர்விந்த் கேஜ்ரிவாலின் எம் எல் ஏ பதவியை பறிக்காமல் இருந்தால் சரி!
    http://saidaiazeez.blogspot.ae/2013/12/blog-post_2031.html

    ReplyDelete
    Replies
    1. கேஜ்ரிவால் எங்கே இதைப் பெற்றுகொண்டார் ?
      சுய ஆதாயத்திற்காக யாரோ சிலர் திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் !
      நன்றி

      Delete
  4. நல்ல மதுரை
    நல்ல கார்ப்பரேசன்
    நல்ல அதிகாரிகள்
    எங்கெங்கோ பிறந்தவர்களுக்கும்
    எங்கெங்கோ இறந்தவர்களுக்கும்
    எப்போதும் சர்டிஃபிகேட் தருவதற்கு
    வேறு யாருக்கு மனசு வரும் ?

    மாமதுரை போற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமென்றே சிலர் செய்த சதி !
      நன்றி

      Delete
  5. எங்கேயோ உள்ளவருக்கு, இருக்கற ஊரெல்லாம் விட்டுபுட்டு எப்படி மதுரை மாட்டிக்குது? ! ஒருவேளை மதுரை இது மாதிரி ஊழலுக்கு ஈசியா இருந்துச்சொ? இதற்கு முன் வரை......அதாவது மதுரையை ஆண்ட, தன் கைக்குள் வைத்திருந்த..........அதனாலோ?

    ReplyDelete
    Replies
    1. கம்ப்யூட்டர் மூலமாக பிறப்பு ,இறப்பு சான்றிதழ் வழங்கும் முறை வந்தபின் சம்பாதிக்க முடியாமல் பாதிக்கப் பட்டவர்கள் இந்த முறைக் கேட்டை செய்து இருக்கலாம் என்று கூறப் படுகிறது !
      நன்றி

      Delete
  6. காசு கொடுத்தால் எதையும் செய்ய முடியும் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தோன்றவில்லை ,சான்றிதழ் வழங்கும் காண்ட்ராக்ட் கிடைக்காதவர்கள் செய்த சதி என்றும் கூறப் படுகிறது !
      நன்றி

      Delete
  7. [[சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ? ]]
    தேவையில்லாத கேள்வி!

    சன்னி லியோன் எங்கு பி;றந்தார் என்பது முக்கியமல்ல;; எப்படி பிறந்தாரோ அப்படி இருக்கிறாரா என்பது தான் முக்கியம்...!

    [உங்கள்] நேயர் விருப்பம்: நீங்கள் கேட்டதிற்காக என் பின்னூட்டம்!


    ReplyDelete
    Replies
    1. அப்படி அவர் இருக்கிறனாலேதானே உலகப் புகழ் பெற்று இருக்கிறார் !
      நன்றி

      Delete
  8. +1
    உன் [கள்} கேள்விக்கு என் பதில்!
    எல்லா கேள்விகளும் நல்ல கேள்விகளே; கேள்விகளே அறிவை வளர்க்கும்.!

    ReplyDelete
    Replies
    1. பகுத்தறிவு வளர்வதெல்லாம் கேள்விகள் கேட்பதனால்தானே நம்பள்கி !
      நன்றி

      Delete