22 December 2013

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '

'வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...
இப்படி இவ்வளோ பீல் பண்றது ...
திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...
நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...
டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !
யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...
யமுனாவின் கணவரை ...
கணவரின் நண்பரை ...
நண்பரின் கார் டிரைவரை ...
தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...
 அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்ல ...சூரசம்ஹாரமாம் ...
இந்த சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...
யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...
கராத்தே பயின்றதால் இவனுக்கு டாங் லீ என்று பட்டப் பெயர் வந்ததாம் ...
வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !


23 comments:

  1. வணக்கம்

    வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
    டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !
    சிரியா சொன்னீர்கள்.......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்னதான் கள்ளக்காதல் என்றாலும் அதுக்காக ஐந்து கொலையா ?உண்மை விரைவில் வெளிவரும் என்றே நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Replies
    1. சம்ஹாரம் என்பதற்குப் பதில் சம்சாரம் என்றும் சொல்லலாமா /
      நன்றி

      Delete
  5. நல்ல வார்த்தை விளையாட்டு.
    பணிதொடர இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. கொலைக்கான காரணத்தை ரூம் போட்டுத்தான் யோசித்திருக்கான் போல, பக்கி!

    ReplyDelete
    Replies
    1. அதென்னவோ தெரியலே ,கொலை செய்ததைப் பற்றி சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் மூன்று பேர் எப்படி இருந்தார்கள் என்பது ஒரே மர்மமாய் இருக்கிறது !
      நன்றி

      Delete
  7. ஆல் சுவாமிஜிஸ் ஸேம்! ஷேம்!!
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அவன் போட்டோவைப் பார்த்தால் ,கரப்பான் பூச்சியைக்கூட கொல்லமாட்டான் போல் சாந்தமான முகம் ,அவன் நெற்றியில் மட்டும் பட்டை போடவில்லை ...!
      நன்றி

      Delete
  8. அவருக்கு வர்மக் கலை மூலம் தண்டனை தர யாரும் இல்லையா!

    ReplyDelete
    Replies
    1. மர்மம் இன்னும் விலகவில்லை ,அப்புறம் வர்மத் தண்டனையை கொடுக்கலாம் !
      நன்றி

      Delete
  9. டங் லை (Tongue lie ) - பொய் நாக்கு அழகாயிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆனா ,பொய் நாக்குகாரன் செய்த காரியம் அழகாயில்லையே !
      நன்றி

      Delete
  10. இத்தனை கொலை செய்தும்
    அவன் முகம் மட்டும் எப்படி இப்படி
    பாவமா இருக்கு

    அது குறித்து ஒரு கோர்ஸ் எடுத்தாக் கூட
    நிறைய பேர் சேருவாங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அநேகமாய் அந்த படம் கொ.மு .(கொலைக்கு முன் )படமாய் இருக்கலாம் ,கொ .பி . எப்படி என்று நாம் வேண்டுமானால் ஒரு நாள் ஜாலியா திருச்சி ஜெயிலுக்கு போய் பார்த்து விட்டு வரலாமா ?
      நன்றி

      Delete