7 December 2013

இப்படியும் மனைவி மேல் பாசமாய் இருக்கக் கூடாது !

''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
''நல்ல வேளை ,வண்டிக்கு  ஒரு கீறலும் இல்லையாம் !''
''உங்க மனைவிக்கு ?''
''ஒரு கைதான் உடைஞ்சுப் போச்சாம் !''

24 comments:

  1. நமக்குள்ளும் இவ்வளோ பாசம் ?பதிவர்களுக்கு இராத்தூக்கம் என்பதே இல்லாமே போச்சு ,இல்லையா சீனி ?
    நன்றி ,குட் நைட் !

    ReplyDelete
  2. அது யாருடைய மனைவி

    ReplyDelete
    Replies
    1. வண்டியை வாங்கிக் கொடுத்தவருடைய மனைவிதான் ,உங்கள் ஆர்வம் எனக்கும் புரியுது !அவ்வ்வ்வவ்வ்வ்வ் ...
      நன்றி

      Delete
  3. ஆஹா இவரல்லவோ
    கண் கண்ட தெய்வம்

    ReplyDelete
    Replies
    1. வேண்டுதல் அதிகமானதால் கண் கண்ட தெய்வமும் நொந்து நூடுல்ஸ் ஆனமாதிரி தெரியுது !
      நன்றி

      Delete
  4. பகவான்ஜி!
    கை உடைந்தா என்ன? அதுக்கும் பில் போட்டு மாமனார் கிட்ட பணம் வாங்கிடலாம்!
    வோட்டு தமிழ்மணம் +1

    ஒரு சிறிய விண்ணப்பம்;
    நீங்கள் எழுதிய ஒன்பது மாச கர்ப்பிணி பெண் பற்றி தான் இந்த கேள்வி.ஆறு மாதம் வயிற்றில் குழந்தையுடன் கல்யானம்? அந்த அளவிற்கு அவன் மூடனா? பல கேள்விகள். நிற்க.

    அந்த செய்தி வந்த பத்திரிக்கையின் சுட்டி கொடுத்தால் நன்று! ஒரு மருத்துவராக இதை நான் கேட்கிறேன்; இதனால் பல உண்மைகள் வெளி வரும். நமது குலத்திற்கு நல்லது!

    இந்த செய்தியை நான் follow செய்ய ஒரு [ மருத்துவராக] விரும்புகிறேன்.

    அந்த செய்தி வந்த சுட்டியை தர முடியுமா?
    I would sincerely appreciate, if you can provide the link to this news.
    Thanks!

    ReplyDelete
    Replies
    1. அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருந்த மாமனாருக்கும் கொள்ளி வைத்தாகி விட்டதால் யாரிடம் வசூல் பண்ணுவது ?
      ஒன்பது மாத கர்ப்ப செய்தி வந்தது கடந்த 4ம்தேதி தினத்தந்தி நாளிதழில் ...
      நானும் அந்த மேட்டரை தொடர்ந்து பாலோ செய்து தகவல் தருகிறேன் !
      நன்றி

      Delete
  5. ''அய்யய்யோ, டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களாமே?''
    ''வண்டிக்க மேல அவ விழுந்து, வண்டி துண்டுத் துண்டா சிதறிப் போச்சாம்"

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோணமும் சூப்பர் ...இத்தனை நாளா எங்கே இருந்தீங்க ?இல்லே ,இப்பத்தான் ரஷ்யாவில் இருந்து வந்தீங்களா ?
      நன்றி

      Delete
  6. அடடா.... என்னவொரு பாசம் மனைவி மேல்!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அவரை பாராட்டத்தான் வேண்டும் ,பாசம் இருக்கிற மாதிரி வேஷம் போடாமே இருக்காரே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. இந்த அளவு பாசம் வெச்சுருக்கார்ன்னா ரொம்ப வாங்குபட்டிருப்பாரோ ?
      நன்றி

      Delete
  8. நல்ல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சன்

    ReplyDelete
    Replies
    1. டுர்ர்ர்ர்ரர்ன்னு போன மனைவிக்கு இப்படி ஆச்சுன்னு தெரிந்த பிறகும் அலட்டிக்காதவனா நல்ல புர்ர்ர்ரர்ர்ர்சன் ?
      நன்றி

      Delete
  9. ரொம்பவே நல்ல கணவன்??!!!! பகவான்ஜீ மனைவிமார் (மாதர்) சங்கம் எல்லாரும் கட்டையைத் துக்கிட்டு வராங்களாம் !! ஜாக்கிரதை!! நல்ல ஜோக்! வோட்டெல்லாம் போட்டாச்சு!

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிலவரம் என்னை விட மாதர் சங்க மனைவிமார்களுக்கு நல்லாவே தெரியும் ஆதலால் ,உண்மை விளம்பி ன்னு எனக்கு பட்டம் வேண்டுமானால் தருவார்கள் !
      நன்றி

      Delete
  10. நீங்க பிளாக் எழுதுறது உங்க இல்லாளுக்குத் தெரியாதில்லையா? இனியும் தெரியாமலிருப்பது நல்லது, உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. என் இல்லாள் தீர்க்கதரிசின்னு இப்பதான் தெரியுது ,அவுக வண்டி ஓட்டுவதை நிறுத்தி விட்டார்களே !
      இந்த நிமிட ஜோக்காளி வருகையாளர்கள் 113759ல் அவரும் 'அடங்கி '(இதில் மட்டும்தான் )இருப்பது எனக்கும் தெரியும் !
      நன்றி

      Delete

  11. இதுதான் எல்லா கணவன்களின் மைன்ட் வாய்சாக இருக்கும்... பின்ன நம்மால முடியாதத டூவீலர் செஞ்சுடுதே,,,

    ReplyDelete
    Replies
    1. கணவன்மார்களின் ஏக பிரதிநிதியாக வந்து உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete