28 September 2013

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

10 comments:

  1. தொல்லையிலிருந்து விடுபட்டாளே..

    சந்தோஷம் நியாயமானது தான்.

    ReplyDelete
    Replies
    1. குடிகார புருஷன் வெளிநாட்டு வேலைக்குப் போனால் ,இங்கே சந்தோஷமாய் இருக்கும் பல பெண்மணிகளை பார்க்க முடிகிறது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    சுகத்தை விட நொம்பளம் இல்லாமல் இருப்பதே
    சாலச் சிறந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சம்பளமும் வீட்டுக்கு வராது ,நொம்பளம்தான் வாழ்க்கை என்றால் நொந்து போகத்தானே செய்வார்கள் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. நிறைய நிறைய பேர்கள் இன்னும் உள்ளனர்...!

    ReplyDelete
    Replies
    1. 'குடிகார கணவனின் மனைவிகள் சாத்தானின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் 'ன்னு புது மொழி சொல்லலாம் இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  4. இதுவும் நல்லாயிருக்கே!

    ReplyDelete
    Replies
    1. தாலி அறுந்தாலும் பரவாயில்லை புருஷன் செத்தா சரின்னு நினைக்கிறது ,நல்லாவா இருக்கு ?
      நன்றி அய்யா !

      Delete