12 June 2016

'புருசனதிபதி 'என்று மனைவியை சொல்லலாமா :)


 கண்ணன் பிறந்தது அயோத்தி அருகில் உள்ள ஜெயிலில் :)                 
             ''ரயிலில் 'வித்தவுட்'டில் ராமர் பொறந்த இடத்துக்கு போய் காண்பிக்கிறேன்னு சவால் விட்டாரே  ,அவர் அங்கே போயிட்டாரா ?''
             ''செக்கரிடம் மாட்டிகிட்டு கண்ணன் பிறந்த இடத்துக்கு போயிட்டார் !''

பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !
             ''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
             ''ஆமா ,அவன் கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

மனைவியை 'புருசனதிபதி 'என்று சொல்லலாமா ?
ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
கைடு லைன் சொல்லிக் கொண்டே ...
ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !

8 comments:

  1. ஹா.... ஹா... ஹா....

    ஹா... ஹா...

    ஹா!

    ReplyDelete
  2. இங்கு சொக்கத்தின் திறப்பு விழா...!

    ‘தீ’பாவளிக்குத் ‘தீ’பாவளிக்குத்தானே குளிப்பான்... அதை ‘தீ’க்குளிக்கப் போறேன்னு சொல்லி இருப்பான்...!

    'பள்ளம் மேடு பார்த்துப் போகணும்... பார்த்துப் போ யோவ் பார்த்துப் போ...!’

    த.ம. 2

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன். குளித்து 6 மாதம் மிக அருமை.

    ReplyDelete
  4. 01. எப்படியோ போனால் சரிதான்
    02. தண்ணீர்ப்பஞ்சம் போல...
    03. வாழ்க்கையையும்தானோ...

    ReplyDelete