19 June 2016

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை :)


நோயாளிக்குத் தான்  பேச்சு வராது ,டாக்டருக்குமா ?
           ''மூணு  மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !
          ''அலர்ஜிங்கிற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
           ''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
         ''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !
நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

15 comments:

  1. 01. அவரு சூழ்நிலை அப்படி
    02. அதானே...
    03. ஸூப்பர் ஜி

    ReplyDelete

  2. நிஷகந்திப் பூவே - உன்னை
    நானறியேன் - உன்னை
    ஜோக்காளி தளத்தில் தான் அறிந்தேன்...
    ஆனால்,
    நடுஇரவில் மலர்ந்து
    விடிவதற்குள் வாடிவிடும்
    உன் செயல் - என்னவள்
    உன்னைச் சூடிக்கொள்ள
    அஞ்சி வாடிவிடுவதா?
    விடிஞ்சாக் கொஞ்சம் - உன்
    மூஞ்சியைக் காட்டினால் தான்
    நானும்
    நீ யாரென்று அறிவேன்!

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  3. அம்மாவின் மூச்சு இருக்கும் வரைக்கும் அவர் வாய் திறந்து பேசவே மாட்டாரு...!

    மொதல்ல ஒடம்பு சொறியிறத நிப்பாட்டுங்க... குரங்கிலிருந்து பிறந்தவன்னு நிருபிக்கிறீங்களே...!

    மலர்ந்தும் மலராத பாதி மலரோ...நிஷா?!

    த.ம. 1

    ReplyDelete
  4. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
  5. டாக்டர் வீட்ல அவர் சம்சாரத்தோட வீட்ல யாராது ஒருத்தர சேத்தா என்ன நடந்திருக்கும் ? https://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  6. இரவில் பூத்து இரவிலேயே வாடி வடி விடுமா! இதுவரை தெரியாதே!

    ReplyDelete
  7. நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறதா ????

    ReplyDelete
    Replies
    1. ஏன் நம்ப முடியவில்லையா :)

      Delete