6 June 2016

கல்யாணமானவனின் கை அரித்தால் ,அர்த்தமே வேற:)

 யார் சொன்னது மௌனம் சம்மதமென்று :)          
           '' உன்  மௌனத்தை  காதலுக்கு சம்மதமா எடுத்துக்கலாமான்னு  அந்த பொண்ணுகிட்டே கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
             ''பேசாமலே , அவ கல்யாணப் பத்திரிக்கையை  என் கையிலே கொடுத்துட்டாளே!'' 
நம்பிக்கையான பினாமி :)
                 ''நான் போலீஸ் ஆபீசர் ,பலருக்கும் நீங்கதான் பினாமின்னு கேள்விபட்டேன் ,யார் யார் உங்களிடம் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளார்கள் ?''
              ''என்னைக் கொன்றாலும் சரி ,அவங்களைப் பற்றி சொல்லவே மாட்டேன் !''
               ''வெரி குட் ,இந்தாங்க ஐந்து கோடி ரூபாய்  ,நான் கேட்கும் போது கொடுத்தா போதும் !''
கல்யாணமானவனின் கை அரிக்குதுன்னா,அர்த்தமே வேற:)
          ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
           ''யார் என்ன சொல்றாங்க ?''
           ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.
ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் :)
வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்குத்  தகுதியானவனே !

18 comments:

  1. முதலிலேயே சொல்லி விடுகிறேன் ,தலைப்பைப் பார்த்து யாராவது 'பல்பு'வாங்கியிருந்தால் அதற்கு ஜோக்காளி பொறுப்பல்ல :)

    ReplyDelete
  2. ஏமாறவில்லை ஜி. இப்படி ஏதாவது இருக்கும் என்று தெரியாதா என்ன! ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,எதை நினைச்சி ஏமாறலைன்னு சொல்லுங்களேன் :)

      Delete
  3. ‘மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்?’ இனி கேக்க முடியாது...!

    சின்ன விடுதல் ஐந்து இல்ல 507 கோடி...!

    வரவு எட்டணா... செலவு பத்தனா...!

    ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல்...!

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. இவன் மனதில் பாரம் கூடிப் போச்சே :)

      507 இல்லே ,570 கோடி:)

      குடும்பஸ்தன் என்றால் சும்மாவா :)

      வேலங்குச்சிதான் அதிலும் பெஸ்ட்:)

      Delete
  4. Replies
    1. பல்பு எச்சரிக்கை சரிதானே :)

      Delete
  5. 01. சோளி முடிஞ்து போச்சு
    02. நம்பிக்கையானவருதான்
    03. செந்தவட்டியை தடவச்சொல்லுங்க...
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. டூ லேட் என்று சொல்லாமல் சொல்லி விட்டாளோ:)
      இப்படிப் பட்ட ஆளைத்தான் அவரும் தேடிக்கிட்டு இருந்தார் :)
      அது அரிப்பு போறதுக்கா ,உடம்பு பூரா வர்றதுக்கா :)
      பழங்காலத்தில் நோபல் பரிசு இருந்திருந்தால், நம்மாளுங்க நிறைய அள்ளியிருப்பாங்க :)

      Delete
  6. ரசித்தோம்.
    ஜோக்காளி என்ன செய்வார்னு எங்களுக்கு தெரியும்

    ReplyDelete
    Replies
    1. கல்யாணப் பத்திரிக்கைக்குப் பதிலாய் செருப்பால் அடித்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாமோ ,ஜி :)

      Delete
  7. நிலமயை பார்த்தா...வைத்தியர் சொல்வதைத்தான் நம்ப வேண்டியதிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஏன் ,ஜோஷியர்கள் அளவுக்கு டாக்டர்களும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்களா :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. இந்த நிமிடம் வரை ,இன்றைய பதிவுக்கு 'பல்பு 'வாங்கியோர் எண்ணிக்கை 901,ரசித்த நீங்களும் வாங்கினீர்களா :)

      Delete
    2. இன்றுடன் ,ஆக மொத்தம் 1019 பேர் பல்பு வாங்கியதால் பல்பு அமோக சேல்ஸ்:)

      Delete
  9. நீங்க பல்பு வித்தாலும் நாங்க ஏமாற மாட்டோம் பாஸ்! அனைத்தும் ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இது வெளியிலே எரியிற பல்பு இல்லை ,இது மனசுக்குள் வெளிச்சம் போடுற பல்பாச்சே :)

      Delete