5 June 2016

சோற்றுப் பண்டாரமா ,புருசன்:)

கிடு கிடுவென்பது  மேலா ,கீழா :)
          ''கிடு கிடு என்பதற்கு என்ன அர்த்தம்னே புரியலியா,ஏன் ?''
           ' தங்கம் விலை  'கிடு கிடு 'உயர்வு என்றும் , 'கிடுகிடு 'பள்ளத்தில் விழுந்தது பஸ் என்றும் சொல்றாங்களே !''
எதிலும்  ஒரு மெசேஜ் இருக்கணும்.இதோ .. :)
     '' ஜூலியஸ் சீசர் பிறப்பிலும் இறப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கா ,என்னது ?''
    '' அவர்  ஆயுதம் (சிசேரியன் )மூலம் பிறந்தார்  ,ஆயுதம்  (கத்தியால் குத்தப் பட்டு )மூலம்  இறந்தாரே  !''
சோற்றுப்  பண்டாரமா ,புருசன்:)
         ''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே,மாத்திரை  சாப்பீட்டீங்களா ?''
          ''மறந்தே போகுது,சாப்பாட்டுக்கு  முன்னாடி  சாப்பிடுற மாத்திரைன்னா  மறக்கவே மறக்காது  !''
மாமூல் நூறு வகை :)
    ''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
    ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''
நீங்கதான் சொல்லணும் பதிலை :)
தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ '  அடையுமோ தாக சாந்தி ?

20 comments:

  1. Replies
    1. உங்களின் சுருக்கமான கருத்துக்கான காரணத்தை நான் அறிவேன் நன்றி ஜி :)

      Delete
  2. இரண்டுக்கும் பொருந்தர மாதிரி ஒரு வார்த்தைய கண்டுபிடிச்சான் பாருங்க தமிழன் தமிழன்

    ReplyDelete
    Replies
    1. கிடுகிடுவென்று நம் மனதில் உயர்ந்து நிற்கிறானா,தமிழன்;)

      Delete
  3. Replies
    1. தாக சாந்தியை ரசிக்க முடியுதா :)

      Delete
  4. புருசன் சோற்றுப் பண்டாரமாக இருப்பது.சில மனைவிகளுக்கு நல்லதுதானே....!!!!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஏதோ தெரிந்து இருக்கிறது ,விபரமா சொல்லுங்களேன் :)

      Delete
  5. மனத் தீ அடையுமோ தாக சாந்தி........அருமை...
    மாமூல் வரும் 100 வழிகள் அருமை சகோ..
    சிரிப்பு சிரிப்பாய் வருகிறது இந்த யோசனைகளுக்கு.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தத்துவம் ,புரியுற மாதிரி இருக்கா :)
      மாமூலுக்கு நூறு வழின்னா,ஜெயிலுக்கு ஒரே வழிதான் :)

      Delete
  6. Replies
    1. உங்க புத்தகம் சேல்ஸ் அமோகம்தான் போலிருக்கு ,அதான் சிரிக்கிறீங்க :)

      Delete
  7. Replies
    1. செமை...ரம்பம்னு சொல்லாமல் போனதுக்கு நன்றி ஸ்ரீராம் ஜி :)

      Delete
  8. 01. ஆமா இது குழப்பமாகத்தான் இருக்கு.
    02. கண்டுபிடிப்பு சரியே
    03. சீக்கிரம் வியாதி குணமாகிடும்
    04. வலைப்பூவுலயும் எழுதச்சொல்லுங்க..
    05. அடையாது

    ReplyDelete
    Replies
    1. குழப்பம் தீர வழியே இல்லையா :)
      கண்டுபிடித்த நானும் மினி சீசரே:)
      நாலு பேர் நெருங்கி வந்துட்டாங்க போலிருக்கே :)
      அவர் விவரமான ஆளு ,காசு பார்ப்பதில் :)
      சரி ,என்னதான் தீர்வு :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    தவம் இருப்பதற்கு முனிவர்கள் ஞானிகள் படம் இல்லையா ஜி.. எல்லாம் சினிமாதன்... ஹீ..ஹீ... நீண்ட நாள் பதிவுகளை இரசித்து. இனி தொடர்வோம் ஜி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முனிவர்கள் ,ஞானிகள் தவம் செய்தால் வியப்பதற்கு ஒன்றுமில்லையே :)

      Delete
  10. ‘கிடுகிடு’ன்னாலே ஒரே நடுக்கம்தான்...!

    ஜூலியஸ் சீசரின் தலையெழுத்து... ஆயுத எழுத்தால்தானோ நிர்ணயக்கப்பட்டது...!

    ‘ஏ’ மாத்திரை... ஏமாத்திராய்...!

    ‘கம்பி எண்ண ஒரே வழி’ புத்தகத் தலைப்பை பார்க்கலையா...?

    ‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்... சாரச் சார்ந்து... தீரத் தீர்ந்து... சாரல் நாடன் கேண்மை... சாரச் சாரச் சார்ந்து... தீரத் தீரத் தீர்பொல் லாதே!’

    த.ம. 9



    ReplyDelete
    Replies
    1. குற்றாலத்தில் குளித்தால் கூட சிலருக்கு கிடு கிடுதான் :)

      காலண்டரின் தலையெழுத்தை அவர்தான் மாற்றியமைத்தார் :)

      ஏ மாத்திரை என்றால் வயாக்கிராவா:)

      அதை யார் வாங்குவாங்க :)

      யாப்பெருங்களங்காரிகை தரும் அந்தப் புகழ்பெற்ற இணைக்குறள் ஆசிரியப்பாவை இது வரை நான் படித்ததில்லை ,அதில் ,என் கருத்தின் ஒற்றுமையைக் கண்டு அசந்து போனேன் :)

      Delete