27 June 2016

குத்தாட்டம் பார்க்க வர்றீங்களா :)

 எரிவதைப்  பிடுங்கினால் கொதிப்பது அடங்குமா :)        
              ''என் பையன் தினசரி ஊர் வம்பை 'விலை'க்கு வாங்கிட்டு வர்றான் ,என்ன செய்றது ?''
              ''நாலு நாள் பாக்கெட் மணியை நிறுத்திப் பாருங்க !''
மந்திரியை தாரிலே முக்கி எடுத்தாலும்  தவறே இல்லை !
       ''  மந்திரி என்ன சொன்னார் ... அவர் மேலே செருப்பை எறியுறாங்களே ?''
        ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''

பதிவர் என்றானபின் ,சுற்றுலாப் பயண  அனுபவங்களை எழுதவில்லை என்றால், தலை இஞ்சி நூறாய்  (சுக்கு நூறாய்  என்று இன்னும்  எத்தனை நாள்தான் சொல்லிக் கொண்டிருப்பது ? )  உடைந்து விடும் என்பதால், சென்ற 2014 ஆண்டு இதே நாளில் போட்ட பதிவு இதோ .....
தினசரி இங்கே குத்தாட்டம்தானா ?
                             வட இந்திய டூர் - பாகம் 1
 அண்மையில் வட இந்தியச் சுற்றுலா  சென்றபோது,   நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும்  கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
       எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
         நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி  இருந்தனர் !
     எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும்  மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில்  விரும்பத்தகாத விளைவுகள்  ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
         பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை அவர்கள் கையில்  கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள்  ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது  !  ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !  
         ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
        பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின்  தேச பக்தியை நிரூபித்தார்கள் !
             இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு  அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது .      நம் நாட்டுதரப்பில்,  பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
    அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......(படத்தைக் கிளிக் செய்து பார்ப்பது கண்களுக்கு நல்லது :)




பயணம் தொடரும் ....
நன்றி மறக்காத டாக்டர் !
            ''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
         '' டாக்டரிடம் ஆப்ரேசன் பண்ணிக்க காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவர்கள்  !''

தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?
தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !

18 comments:

  1. 01. உண்மையான வார்த்தை ஜி
    02. அப்படினாக்கா வார் செருப்பாலை அடிக்கணும்

    கதையை காலையில் படிக்கிறேன் ஜி

    03. இது எந்த ஊருல..
    04. இவருகளையும் கடலில் போடணும்னஉ சொல்றீங்களா ஜி

    ReplyDelete
    Replies
    1. இதையுமா விலைக் கொடுத்து வாங்குவது :)
      அதையும் தாங்கிக்குவார்:)
      கதையல்ல ,உண்மை பயண அனுபவம் :)
      நம்ம ஊர்லே இதுக்கு பஞ்சமா என்ன :)
      போட்டால்கடல் பொங்கி ஊர்ருக்குள் வந்திடாதா :)

      Delete
  2. மணியான பையன்... நல்லா யோசிங்க... மணியை பிக் பாக்கெட் அடிச்சிடப் போறான்...!

    மந்திரி தார்மீகப் பொறுப்பெடுத்து எதையும் சொல்லவிட மாட்டேங்கிறீங்களே...!

    வாகா பார்டர்... ஆகா...! ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்!’ என்றால் யாரும் கேட்பதாகத் தெரியவில்லையே...!

    ஆப்ரேசன் சக்ஸஸ்... பேசண்ட் டெத்... இதுதானோ...?!

    வாயக் கட்டி வவுத்தக் கட்டிப் பிழைக்கப் பாருங்க...!

    த.ம. 3








    ReplyDelete
    Replies
    1. விட்டிலேயே வம்பா :)
      அனேகமா பதவியில் இருந்து டிஸ்மிஸ் ஆவார்ன்னு நம்பலாம் :)
      ஆனால் ,தமிழுக்கு அங்கே இடமில்லை :)
      பொருத்தமான் புதுமொழி :)
      ஓடி ஓடி உழைச்சா ஆகாதா :)

      Delete
  3. தங்களின் பயண நிகழ்வுகளைத் தொடருங்கள்நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நேரமின்மை ,அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது :)

      Delete
  4. ஹஹஹ்ஹ் தொப்பைக்குக் குட்பை ரசித்தோம்...அப்படின்னா எல்லாரையும் கடல்ல போட்டா நீஞ்சி வரதுலேயே தொப்பைக் குறைஞ்சுரும் இல்லையா....நீச்சல் தொப்பைக் குறைக்க நல்ல பயிற்சி ...

    வாழைத் தார் ஹஹஹஹஹ்...ரசித்தோம் அனைத்தையும்

    ReplyDelete
    Replies
    1. எதிர்நீச்சல் போடுவாது நல்லதுதானே :)

      Delete
  5. சமீபத்திய பயண அனுபவங்களையும் எழுதலாமே... ஜி

    ReplyDelete
    Replies
    1. எழுதத்தான் நினைக்கிறேன் :)

      Delete
  6. குத்தாட்டம் மட்டும் நிணைவில் வருகிறதே..! எப்படி??

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாததாச்சே :)

      Delete
  7. Replies
    1. பய பிள்ளே படம்தானே :)

      Delete
  8. Replies
    1. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்தானே :)

      Delete
  9. வாகா எல்லை நிகழ்வுகள் மறக்க முடியாத அனுபவம்.....

    அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அளவுக்கதிகமான அந்த கூட்டத்தில் மிதி பட்டதும் தான் ம மு அனுபவம்தான் :)

      Delete