20 July 2017

இனியும் தேவையா இந்த கல்யாணம் :)

 இனியும் தேவையா இந்த கல்யாணம் :)          
           ''அறுபதாம் கல்யாணம் செய்துக் கொள்வதில் உங்கம்மாவுக்கு விருப்பமில்லையா ,ஏண்டா ?''
           ''பத்திரிக்கையில் , அழுவதாம்  கல்யாணம்னு தப்பா பிரிண்ட் ஆகியிருக்குன்னு சொன்னேன் ,அப்படியே இருக்கட்டும்னு சொல்றாங்களே !'' 

சந்தேகம் நியாயமானதுதானே :)
        ''அசைவம் சாப்பிட்டாலும்  ,DVD பார்த்தாலும்  தப்பான்னு ஏன் கேட்கிறே ?''

'      ' அவைகளை  ரகசியமா கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்களே !''
மூட் அவுட் ஆன நடிகையின் புது கணவன்:)
             ''கல்யாண போட்டோக்களில் , ஒரே ஒரு போட்டோவில் மட்டும் மாப்பிள்ளை முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
            ''சுற்றி நிக்கிறவங்க, நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''

 எங்கே வளரணுமோ அங்கே ?
வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466925

20 comments:

  1. அழுவதாம் கல்யாணம் கஷ்டம்தான் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா இவரைக் கட்டிக்கொண்டோம்னு நினைப்பு :)

      Delete
  2. அழுவதாம்....!! ஹா .ஹா... ஹா..

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. சிச்சுவேசனுக்கு பொருத்தமான சொல்தானே அது :)

      Delete
  3. ‘என்ன கல்யாணமடி கல்யாணம் உங்க கல்யாணமடி கல்யாணம்...!’

    ‘கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...!’

    ‘ கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா...!’

    ‘வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்...!’

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேட்கிற அளவுக்கு உங்களுக்கு ஏன் கல்யாணத்தின் மேல் வெறுப்பா :)

      கருப்பையும் வெள்ளையையும் ஏனோ கலராவே நினைக்க முடியலே :)

      இனி மேல் காயவைக்கும் போதுதானே தெரியும் .காய்ச்சாத பால் நிலாவைப் பற்றி :)

      ஒரு நாளைக்கு எண்பது முடி கொட்டினா சராசரி ,நிமிஷத்துக்கு எண்பதுன்னா...:)

      Delete
  4. சந்தேகம் நியாயமில்லை 😁😁

    ReplyDelete
    Replies
    1. கேரி பேக் கலரே உள்ளே இருப்பதை பறைச்சாற்றி விடுகிறதே :)

      Delete
  5. அழுவதாம் கல்யாணம்...ஹஹஹஹ..
    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. முதல் கல்யாணம் விரும்பி செய்துக் கொள்வது ,அறுபதாம் கல்யாணம் வேண்டா வெறுப்பாய் செய்துக்கிறது என்றாகிப் போச்சே :)

      Delete
  6. அறுபதாம்கல்யாணத்திலாவது சிரிக்கக் கூடாதா
    அப்படியா கவனிக்க வில்லையே
    விவாதிக்க வேண்டாதது. வக்கீல்களைக் கணவருக்குத் தெரியுமா
    எனக்கு வேண்டாம்ப்பா அந்த தைலம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரைச் சொல்றீங்க கிழட்டு மணப்பெண்ணையா ,கிழட்டு மணமகனையா :)
      இனி கவனிக்கலாமே :)
      ஊரறிந்த வக்கீலுக்கு கருப்பு கோட் எதுக்கு :)
      கை ரேகை ஜோதிடம் கூட பார்க்க முடியாதில்லே :)

      Delete
  7. //''சுற்றி நிக்கிறவங்க, நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''//

    பழைய கணவன்களும் அந்தக் கூட்டத்துக்குள்ள இருப்பாங்க!!!

    ReplyDelete
    Replies
    1. ஜீவனாம்சம் வாங்க வந்து இருப்பாங்களோ :)

      Delete
  8. இத்தனை நாள் கட்டிக்கிட்டு அழுதது போதும்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு! வாழ்த்துக்கள் ஜி! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனுபவ ஞானம் இப்போதான் வேலை செய்யுது போல :)

      Delete
  9. அழுவதாம் கல்யாணமா ? நன்று

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலருக்கு முதல் கல்யாணமே அப்படியாகி விடுதே :)

      Delete
  10. அழுவதாம் கல்யாணம்மா....? தேவையில்லை.....

    ReplyDelete
    Replies
    1. உங்களைக் கேட்டால் ,கல்யாணமே வேண்டாம்னு தானே சொல்வீங்க :)

      Delete