11 October 2015

தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ:)

          இன்று புதுக் கோட்டையில் நடை பெறும் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா ,புதிய சரித்திரம் படைக்க 'ஜோக்காளி 'யின்  வாழ்த்துக்கள் !
-------------------------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை , அதை விட இது அதிகம் !                   
                   ''என்னடா சொல்றே , பக்கத்திலே  பள்ளிக்கூடம் இருந்தால் மட்டும்தான் டாஸ்மாக் கடைகள்  திறக்கப் படணுமா ?''
                  ''அப்படியாவது பள்ளிகள்  எண்ணிக்கை பெருகுமே !''


திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு !
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ....
திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !


கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???

            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும் கொசு குறையலையே ,ஏன்?''
              ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ?

வளர்ந்த பிறகு 
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
சிறிய வயதில்  பள்ளி சேர்க்கையில் ...
தொடையில் மச்சமென்று  பதிந்த  அப்பாவையும்  ... 
மச்சத்துடன் கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !


8 comments:

  1. அரசிடம் இருக்க வேண்டிய பள்ளி தனியாரிடம்... தனியாரிடம் இருக்க வேண்டிய மதுக்கடை அரசிடம்... பாஸ்மார்க் எடுக்க வேண்டிய மாணவர் டாஸ்மாக்கில்... என்னம்மா... இப்படி பண்றிங்களேம்மா...? இனி இப்படித்தான் எழுத வேண்டும் ‘நாடு குடியை கெ(கொ)டுக்கும்!’

    த.ம.1
    நம் நாட்டிலும் பல்கலைக்கழகங்கள் இதுபோல ஆய்வுசெய்து முடிவு வெளியிட்டால்... ஆண்கள் சாமியாராவதாவது குறையுமில்ல...! பல்கலை வித்தகராக இருக்கமாட்டார்கள் அல்லவா?

    தண்ணி தேங்கிற குளத்தில தண்ணியில்ல... பாவம்... மீனு செத்துப் போயிருமுல்ல...!

    பேரு வேற ‘மச்சக் கன்னி’... தானாடவில்லையம்மா... ஆடா தொடையாடுது...!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே தலைகீழ் ,வல்லரசு ஆகும் லட்சணம் இதுதானோ :)

      சாமியார்கள்தான் பலகலை வித்தகராய் இருக்கிறார்களே :)

      அதனால் ,கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு முடிவெடுத்து விட்டார்களோ :)

      மச்சக்கன்னி என்றால் ரொம்ப கஷ்டம்தான் :)

      Delete
  2. 01. இதுவும் சரிதான்
    02. நாமலும் திருமணம் செய்யாமல் இருப்போமா ?
    03. மனுசன் கொசுவைவிட கேவலமா ?
    04. தலையில் மச்சம் இருந்தால் ?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைங்களும் குடிச்சிட்டு அலையும் ,வருமானம் பெருகினால் சரிதானே :)
      இருக்கணும்னுதான் ஆசை ,ஆனா ...?
      இல்லையா பின்னே :)
      காட்டி விடலாமே :)

      Delete
  3. Replies
    1. வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவையும் நேரலையில் பார்த்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் :)

      Delete
  4. பள்ளித் தலமனைத்தும் டாஸ்மாக் செய்குவோம்!

    ReplyDelete
    Replies
    1. பாரதியார் இருந்திருந்தால் ரொம்பவும் சந்தோசப் பட்டிருப்பார் :)

      Delete