15 October 2015

மனைவி அமைதியா இருந்தா சந்தோஷம் ,மாணவன் இருந்தால் :)

ஆப்ரேசன்  பண்ணிக் கொல்லாம விட்டாரே :)

            ''அந்த டாக்டர் ஏன் உன்னை அடித்தார் ?''

              ''நீங்க சிவில் சர்ஜனா ,கிரிமினல் சர்ஜனான்னு கேட்டு தொலைச்சிட்டேன்!''

இப்படி பதில் சொன்னால் வாத்தியார் என்ன செய்வார் ?
                ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
            ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
             ''அதிலேயே எழுதி இருக்கும் !''


மனைவி அமைதியா இருந்தா சந்தோஷம்  ,மாணவன் ?

         ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
         ''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''
கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!
தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !

அண்ணாவின் தொண்டர்களுக்கு பிடித்த படம்!

        ''மாற்றான் படத்தை அதிமுக,திமுக.மதிமுக  தொண்டர்கள் எல்லாம் விரும்புவாங்கன்னு ஏன் சொல்றே ?'' 
           ''மாற்றான்  தோட்டத்து  மல்லிகைக்கும் நல்ல  மனமுண்டுன்னு அறிஞர் அண்ணா    சொல்லி இருக்காரே!''

22 comments:

  1. 01. டாக்டர் உடனே ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லவில்லையா....
    02. ஆமா பேரை வச்சு கண்டு புடிக்க வேண்டியதானே...
    03. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்
    04. கொஞ்ச காலமாக கொசுக்கடியாத்தான் இருக்கு ஜி
    05. மீதி கட்சிக்காரங்கே...... அவங்களும்தான் அண்ணா நாமம் வாழ்க சொல்றாங்கே....

    ReplyDelete
    Replies
    1. அவசரப் பட்டு அடித்து விட்டாரே :)
      இதுகூட முடியலைன்னா எப்படி :)
      அது இப்போதானே புரியுது :)
      வெயிலடித்தாலும் குறையவேயில்லை :)
      எல்லோருக்கும் சமர்ப்பணம் :)

      Delete
  2. Replies
    1. கிரிமினல் வக்கீல் இருக்கும் போது கிரிமினல் டாக்டர் இருக்கக்கூடாதா :)

      Delete
  3. கிரிமினல் சர்ஜன்னு சொல்லாம சொல்லிட்டாரே...!


    இவ்வளவு நாளா பேருகூடத் தெரியாம இருக்கீங்களே... நீங்கள்ளல்லாம் வாத்தியாருன்னு சொல்லிக்க......................!


    பதில் சொல்லாம அமைதியாக இருக்கும் போதே புரியலையா...? ஒங்களப் புரிஞ்சிக்கிட்டே நா கேள்வி கேட்கிறேன்...பாரு...நா ஒரு.................!


    தக்காளிய இரத்தமுன்னு உறிஞ்சப் பாக்கிது கொசு...!


    மாற்றான் தோட்டத்து மலருக்குத்தான் மணம் உண்டுன்னு அலையுராங்க...ராங்கில்லையா...?

    த.ம.2


    ReplyDelete
    Replies
    1. போயே விட்டாரா :)

      வெட்கமாய் இருக்கு :)

      சுத்த முட்டாள் :)

      இரண்டுமே சூப்தான் அதுக்கு :)

      புரிஞ்சா சரி :)

      Delete
  4. வணக்கம்
    ஜி
    பலதடவை சிரித்து மகிழ்ந்தேன் ஜி த.ம 3
    தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி என்றாலே உங்க ஞாபகம்தான் ரூபன் ஜி :)

      Delete
  5. வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் ரசித்தேன் இரு துணுக்குகள் எங்கோ முன்பே படித்த நினைவு

    ReplyDelete
    Replies
    1. முதல் துணுக்கு மட்டுமே இன்றைய ஸ்பெசல் :)

      Delete
  6. மனைவி அமைதியா இருந்தா சந்தோஷம்தான் ஆனால் ,மாணவன் அமைதியாக இருந்தால் டேஞ்ச்ராச்சே...!!!

    ReplyDelete
    Replies
    1. அதான் ,முகம் 'சிவந்து ' போச்சா வாத்தியாருக்கு :)

      Delete
  7. அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அசத்தியது நானல்ல ,அண்ணா :)

      Delete
  8. ஹஹ்ஹஹஹ் தக்காளியும் கொசுவும் செம....
    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. செம கடி ,அப்படித்தானே :)

      Delete
  9. அனைத்தும் அருமை. ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. பையன் சொன்னது சரிதானே :)

      Delete
  10. ரசித்தேன்.தக்காளியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் என்னதான் செய்வது!

    ReplyDelete
    Replies
    1. யார் மேலாவது எறிந்து விளையாடலாமா :)

      Delete
  11. கேட்டவர் சிவிலியனா, கிரிமினலா? ஹா...ஹா...

    என்னங்க... சூப்பர் பதிலா இருக்கு..! ஸ்டூடன்ட் நம்பர் ஒன்!

    மாணவர்களுக்குப் புரிஞ்சிடுச்சி! அதான் மௌனம்!

    தக்காளியை அரைச்சு வீட்டுக்கு மேலேயும் உள்ளே சுவற்றிலும் ஊற்ற வேண்டும்!

    வாழ்க அண்ணாவின் தொண்டர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கிரிமினல் என்றால் கைநீட்டி அடிச்சிருக்க மாட்டாரே :)

      நம்பர் ஒன் இப்படி கேட்டதும் வாத்தியார் ஒண்ணுக்குப் போய்விட்டாரே :)

      மௌனம் சம்மதம் :)

      தக்காளி ஆர்ட் பிரமாதமாய் இருக்குமே :)

      அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் :)

      Delete